ஒரு அரை நாள் விடுப்பில் வா .
அம்மா ..
உனை புதைத்ததாகத்தானே சொன்னார்கள் .
கல்லாக சமைக்க வில்லையே ?
இறைவனுக்கு பக்கத்தில் தானே ..
இருக்கிறாய் ...
அவருக்கும் இரக்கம் இருக்கும் அல்லவா ?
உனக்கு நான் கதறுவது கேட்க வில்லையா?
ஒரு அரை நாள் விடுப்பில் வா ...
உன் மடியில் தலை சாய்க்க வேண்டும் .
அம்மான்னா அம்மாதான்.இட்டு நிரப்ப முடியாது
ReplyDelete