Saturday 31 December 2011
பிரிவு மடல்
2011
சில நேரங்களில்
அழ வைத்தாய் ..
சில நேரங்களில்
சிரிக்க வைத்தாய் ...
அனுபவங்களை அள்ளித்தந்தாய் ....
அழும் போது ஆறுதல் சொல்ல ...
நண்பர்கூட்டத்தை கொடுத்தாய் ..
உறவுகளுக்குள் உழல வைத்தாய் ...
உண்மை நிலை புரிய வைத்தாய் ...
உன்னை விட்டு பிரிவதில்
துளியும் சம்மதமில்லை தான்
எனினும் என் செய்ய ..
காலச்சக்கரம் எனை
இழுத்துக்கொண்டு செல்கிறது ...
என் தாய் எனை தமிழுக்கு அறிமுகம் செய்தால் ..
நீயே எனை தமிழ்மணத்தில்
கவிதைக்கு அறிமுகம் செய்தாய்
உன்னை என்றென்றும் மறவேன் .
இப்படிக்கு
சசிகலா
சில நேரங்களில்
அழ வைத்தாய் ..
சில நேரங்களில்
சிரிக்க வைத்தாய் ...
அனுபவங்களை அள்ளித்தந்தாய் ....
அழும் போது ஆறுதல் சொல்ல ...
நண்பர்கூட்டத்தை கொடுத்தாய் ..
உறவுகளுக்குள் உழல வைத்தாய் ...
உண்மை நிலை புரிய வைத்தாய் ...
உன்னை விட்டு பிரிவதில்
துளியும் சம்மதமில்லை தான்
எனினும் என் செய்ய ..
காலச்சக்கரம் எனை
இழுத்துக்கொண்டு செல்கிறது ...
என் தாய் எனை தமிழுக்கு அறிமுகம் செய்தால் ..
நீயே எனை தமிழ்மணத்தில்
கவிதைக்கு அறிமுகம் செய்தாய்
உன்னை என்றென்றும் மறவேன் .
இப்படிக்கு
சசிகலா
Friday 30 December 2011
Wednesday 28 December 2011
Tuesday 27 December 2011
Monday 26 December 2011
Friday 23 December 2011
Thursday 22 December 2011
Wednesday 21 December 2011
Tuesday 20 December 2011
Monday 19 December 2011
உறக்கம் கலைக்கும் வரிசையில் .
உறங்க மறுத்த இமைகளை
இழுத்து அணைத்து
உறங்கச் செல்கிறேன் ....
சுரீர்ரென்று முகத்தில் அடிப்பது போல
ஓட்டின் மீது விழும்
மழைத்தூறல் ..
அடித்து பிடித்து எழுந்து அமர்கிறேன் ,
மடியில் வந்து அமர்ந்து கொள்கிறது ..
உன் நினைவு ..
சமாதன படுத்தி உறங்க செல்வதற்குள் ..
இடையே வந்து பயமுறுத்துகிறது ..
இடியும் மின்னலும் ...
அதையும் சமாளித்து ..
பட படவென அடிக்கும் நெஞ்சை ..
எச்சில் விழுங்கி தட்டிகொடுப்பதர்க்குள் ..
மின் வெட்டும் சேர்ந்து கொள்ள
மிரள விழித்து ..
போர்வைக்குள் தஞ்சம்
புகுந்த எனை ..
காதுக்குல் இசை பாடி ..
வெளி வரச்சொல்லும் கொசு ..
இன்னும் எத்தனை பேர் ..
இருக்கிறார்கள் ....
என் உறக்கம் கலைக்கும் வரிசையில் .
இழுத்து அணைத்து
உறங்கச் செல்கிறேன் ....
சுரீர்ரென்று முகத்தில் அடிப்பது போல
ஓட்டின் மீது விழும்
மழைத்தூறல் ..
அடித்து பிடித்து எழுந்து அமர்கிறேன் ,
மடியில் வந்து அமர்ந்து கொள்கிறது ..
உன் நினைவு ..
சமாதன படுத்தி உறங்க செல்வதற்குள் ..
இடையே வந்து பயமுறுத்துகிறது ..
இடியும் மின்னலும் ...
அதையும் சமாளித்து ..
பட படவென அடிக்கும் நெஞ்சை ..
எச்சில் விழுங்கி தட்டிகொடுப்பதர்க்குள் ..
மின் வெட்டும் சேர்ந்து கொள்ள
மிரள விழித்து ..
போர்வைக்குள் தஞ்சம்
புகுந்த எனை ..
காதுக்குல் இசை பாடி ..
வெளி வரச்சொல்லும் கொசு ..
இன்னும் எத்தனை பேர் ..
இருக்கிறார்கள் ....
என் உறக்கம் கலைக்கும் வரிசையில் .
Sunday 18 December 2011
Friday 16 December 2011
விரட்டி விட்டு
உறக்கத்தை வெளியே ..
விரட்டி விட்டு ...
இமை கதவுகளை ..
இழுத்து சார்திக்கொண்டேன் ..
உன் நினைவுகளோடு ...
பேசிக்கொண்டிருப்பதை ...
நிறுத்த மனமில்லாது .....
பெண்களின் அவலங்கள்
சாம்பிராணி வாசனை
மணக்க மணக்க ..
சுத்தமான மாட்டுதொழுவத்தில் ..
நிகழ்கிறது எங்கள் பசுவின் பிரசவம் ...
எங்களுக்கோ இங்கு ..
சுத்தமில்லா கழிவறை ,
முகம் சுளிக்க வைக்கும் துர்நாற்றம் ..
உக்கார கூசும் இருக்கைகள் ..
இரத்த பிசு பிசுப்போடு இருக்கும் மெத்தைகள் ...
நீண்ட தொரு வராண்டாவில் ...
நிகழும் தலைபிரசவங்பிறந்த குழந்தைன் ...
அழுகுரலையும் கேட்கவியலா ...
பெண்ணின் அலறல்கள் ...
ஒண்டிக்குடிதனத்தில் ...
இருபது போல ஒருவருக்கொருவர் ...
பார்த்துகொள்ளும் படியாக ..
ஒரு பெண்ணின் கருசிதைவை ...
பார்த்தபடி நிகழும் ...
மறுபெண்ணின் தலைபிரசவம் ...
அவரைக்காய் இன் உள்ளிருக்கும் ...
புழுவையும் காண சகியாத நாங்கள் ...
தாய்சேய் நல பிரிவில் இருக்கும்
நாட்களில் அனுபவிக்கும் ...
அவலங்களுக்கு ...என்றுதான் விடிவு கிடைக்குமோ ?
மணக்க மணக்க ..
சுத்தமான மாட்டுதொழுவத்தில் ..
நிகழ்கிறது எங்கள் பசுவின் பிரசவம் ...
எங்களுக்கோ இங்கு ..
சுத்தமில்லா கழிவறை ,
முகம் சுளிக்க வைக்கும் துர்நாற்றம் ..
உக்கார கூசும் இருக்கைகள் ..
இரத்த பிசு பிசுப்போடு இருக்கும் மெத்தைகள் ...
நீண்ட தொரு வராண்டாவில் ...
நிகழும் தலைபிரசவங்பிறந்த குழந்தைன் ...
அழுகுரலையும் கேட்கவியலா ...
பெண்ணின் அலறல்கள் ...
ஒண்டிக்குடிதனத்தில் ...
இருபது போல ஒருவருக்கொருவர் ...
பார்த்துகொள்ளும் படியாக ..
ஒரு பெண்ணின் கருசிதைவை ...
பார்த்தபடி நிகழும் ...
மறுபெண்ணின் தலைபிரசவம் ...
அவரைக்காய் இன் உள்ளிருக்கும் ...
புழுவையும் காண சகியாத நாங்கள் ...
தாய்சேய் நல பிரிவில் இருக்கும்
நாட்களில் அனுபவிக்கும் ...
அவலங்களுக்கு ...என்றுதான் விடிவு கிடைக்குமோ ?
Thursday 15 December 2011
நெருடல் இன்றி
ஆள் இல்லா ஆற்றங்கரை ..
ஜன்னலோரத்தில் தெரியும் உலகம் ...
மலர் தேடும் வண்டு ....
வண்டு விரட்டும் பட்டாம்பூச்சி ..
தும்பி விரட்டும் தம்பி ...
தூரத்து பசுமை ..
அரிசி புடைக்கும் அன்னை மடி ..
அருகிலேயே வந்து போகும் சிட்டுகுருவி ..
திகட்டாமல் பேசும் மழலைகள் ..
தினந்தோறும் அமரும் குட்டிச்சுவர் ..
குதூகலமாய் ஆட்டம் போட்ட ...
புத்தாண்டு இரவு ...
கூத்தடித்த நண்பர் கூட்டம்...
முன் எப்போதும் போல் ..
இவற்றில் எல்லாம் நெருடல் இன்றி ...
நெகிழ்திருக்க முடிவதில்லை .
சசிகலா
ஜன்னலோரத்தில் தெரியும் உலகம் ...
மலர் தேடும் வண்டு ....
வண்டு விரட்டும் பட்டாம்பூச்சி ..
தும்பி விரட்டும் தம்பி ...
தூரத்து பசுமை ..
அரிசி புடைக்கும் அன்னை மடி ..
அருகிலேயே வந்து போகும் சிட்டுகுருவி ..
திகட்டாமல் பேசும் மழலைகள் ..
தினந்தோறும் அமரும் குட்டிச்சுவர் ..
குதூகலமாய் ஆட்டம் போட்ட ...
புத்தாண்டு இரவு ...
கூத்தடித்த நண்பர் கூட்டம்...
முன் எப்போதும் போல் ..
இவற்றில் எல்லாம் நெருடல் இன்றி ...
நெகிழ்திருக்க முடிவதில்லை .
சசிகலா
Tuesday 13 December 2011
ஏமாளிகளாய்
இறந்த கன்றுகுட்டிகுள்,
வைக்கோலை திணித்து ..
தாய்ப்பசுவை ஏமாற்றுவதை போல்..
இருக்கிறது ..
தேர்தல் வாக்குறிதிகள் யாவும் .
வைக்கோலை திணித்து ..
தாய்ப்பசுவை ஏமாற்றுவதை போல்..
இருக்கிறது ..
தேர்தல் வாக்குறிதிகள் யாவும் .
Thursday 8 December 2011
என் அன்புத் தோழிக்கு
என் அன்புத் தோழிக்கு
நியும் நானுமாய் ..
ஒன்றாய் கைகோர்த்து
நடந்து நடந்து தேய்ந்து போன ...
சாலைகளை இப்போதுதான் ..
சரி பார்க்கப்படுகிறதாம் ,
வா சென்று பார்த்து வரலாம் ...
நம் புன்னகையும் ..
கேளிக்கையும் பாராமல் ..
பள்ளி வளாகத்தில் இருந்த ...
பாக்கு மரம் பட்டு போய் விட்டதாம் ..
வா சென்று பார்த்து வரலாம் ...
எனை உன் இதயத்தில் மட்டும் ...
சுமந்தது போதாதென ..
உன் இருசக்கர வாகனத்திலும் ..
அல்லவா சுமந்திருகிறாய் ..
என் அன்புத் தோழியே ..
எங்கிருக்கிறாய் நீயடி ..
என் தாய்க்கு பிறகு ..
என் பசி பொறுக்காதவள் ..
நியும் அல்லவா ,
இனியவளே ..
உன்னிடத்தில் பிடித்தது ..
உன் மவுனமே என்பேன் ..
அதற்காக இப்படியா ..
நீ எங்கிருக்கிறாய் ..
என்பதை கூட தெரிவிக்காமல் ,
மவுனித்து கிடக்கிறாய் .
தேடலுடன் அன்பு சசிகலா
Wednesday 7 December 2011
காதல் ஒத்திகை
மரத்திற்கு மரம் தாவிஓடி...
புல் தரைஇல் முகம் புதைத்து ...
பறப்பதாய் நினைத்து ..
வயல் வரப்பில் ஓடி ..
கிணற்று படிக்கட்டில்,
அமர்ந்துகொண்டு கீதம் பாடி ...
கடந்து சென்ற கண்ணாடியை ...
மறுபடி வந்து பார்த்து நின்று ..
ஜன்னலுக்கு பக்கத்தில் ..
அமர்ந்துகொண்டு கன்னத்தில் கைவைத்து ...
எதையோ முறைத்தபடி ...
காதல் வந்து விட்டதாய் நினைத்து ..
நடத்திய ஒத்திகையே ...
நன்றாய்த்தான் இருந்தது .
சசிகலா
புல் தரைஇல் முகம் புதைத்து ...
பறப்பதாய் நினைத்து ..
வயல் வரப்பில் ஓடி ..
கிணற்று படிக்கட்டில்,
அமர்ந்துகொண்டு கீதம் பாடி ...
கடந்து சென்ற கண்ணாடியை ...
மறுபடி வந்து பார்த்து நின்று ..
ஜன்னலுக்கு பக்கத்தில் ..
அமர்ந்துகொண்டு கன்னத்தில் கைவைத்து ...
எதையோ முறைத்தபடி ...
காதல் வந்து விட்டதாய் நினைத்து ..
நடத்திய ஒத்திகையே ...
நன்றாய்த்தான் இருந்தது .
சசிகலா
நட்பின் வரி
சருகுகளாய் போன ..
நினைவுகள் ,
சத்தமில்லாமல் உறங்கிகிடக்கின்றன ..
ஆழ்மனதில் ,
அவ்வப்போது வரும் காற்றின் ...
அசைவுகளில் சலசலத்து ....
ஜாபகப்படுத்துகின்றன ...
நட்பின் வரிகளை ...
உன்னை அறிமுக படுத்திய பள்ளியும் ,
நாம் அசுர வேகத்தில் ...
ஓடிய போது பரந்த தூசியும் ...
இன்னமும் இடம் மாறாமல் ..
அங்கேதான் இருக்கிறது ...
நாம் மட்டும் என் எப்படி ...
பானைக்குள் அழுத்திய புளியாய்..
பாதுகாப்பாய் தான் இருக்கு ...
நண்பனே உன் நினைவுகள் .
சசிகலா
நினைவுகள் ,
சத்தமில்லாமல் உறங்கிகிடக்கின்றன ..
ஆழ்மனதில் ,
அவ்வப்போது வரும் காற்றின் ...
அசைவுகளில் சலசலத்து ....
ஜாபகப்படுத்துகின்றன ...
நட்பின் வரிகளை ...
உன்னை அறிமுக படுத்திய பள்ளியும் ,
நாம் அசுர வேகத்தில் ...
ஓடிய போது பரந்த தூசியும் ...
இன்னமும் இடம் மாறாமல் ..
அங்கேதான் இருக்கிறது ...
நாம் மட்டும் என் எப்படி ...
பானைக்குள் அழுத்திய புளியாய்..
பாதுகாப்பாய் தான் இருக்கு ...
நண்பனே உன் நினைவுகள் .
சசிகலா
கொடூர செயலா...?
காரணமே இல்லாமல் ...
கனத்துப்போகிறது மனது ,
கனகாம்பரம் பூவை வைத்தாலும் ,
கல்லை சுமப்பது போன்று உணர்வு ,
எவர் பார்வை பட்டாலும் ,
எரிமலைக்கு பக்கத்தில்
இருபதைப்போன்றதொரு வெப்பம் தாக்குகிறது ,
காற்றே பட்டாலும் ..
காய்ச்சல் வந்துவிடும் போல ,
வேற்று கிரக வாசியை பார்ப்பது போல ...
என் வாசலை கடக்கும் ....
அதனை பேர் முகத்திலும் ..
கேளிக்கை , சிரிப்பு ....
அத்தனை கொடூர செயலா...?
காதலித்தது.......
சசிகலா
கனத்துப்போகிறது மனது ,
கனகாம்பரம் பூவை வைத்தாலும் ,
கல்லை சுமப்பது போன்று உணர்வு ,
எவர் பார்வை பட்டாலும் ,
எரிமலைக்கு பக்கத்தில்
இருபதைப்போன்றதொரு வெப்பம் தாக்குகிறது ,
காற்றே பட்டாலும் ..
காய்ச்சல் வந்துவிடும் போல ,
வேற்று கிரக வாசியை பார்ப்பது போல ...
என் வாசலை கடக்கும் ....
அதனை பேர் முகத்திலும் ..
கேளிக்கை , சிரிப்பு ....
அத்தனை கொடூர செயலா...?
காதலித்தது.......
சசிகலா
Tuesday 6 December 2011
அழகிய தமிழை .
ஒன்றாம் வகுப்பு ..
மாணவனுக்கு சொல்லி கொடுப்பது போல ..
அதனை அழகாக ...
விரல் பிடித்து கத்துக்கொடுக்கிறாய் ...
அழகிய தமிழை .
மாணவனுக்கு சொல்லி கொடுப்பது போல ..
அதனை அழகாக ...
விரல் பிடித்து கத்துக்கொடுக்கிறாய் ...
அழகிய தமிழை .
Subscribe to:
Posts (Atom)