Monday 31 December 2012

துளித் துளியாய் !



எத்தனை எத்தனை
நாட்கள் மாதங்களாகி
மாதங்கள் வருடங்களாக..
கழிந்தாலும்..
உனக்காக சேமித்து வைத்த
சொல்லப்படாத வார்த்தைகள்
யுகங்கள் தாண்டியும்
வெளி வராத கவிதை
தொகுப்பாக.

புதிதாய் வந்த எதுவும்
நிரந்தரமும் அல்ல
பழையன எல்லாம்
அழிந்து விடுவதுமல்ல
நினைவலைகளில்
முன்னும் பின்னுமாய்
கிழிபடும் நாட்காட்டியாய்.

கட்டி வச்ச மாடாட்டம்
மனசு உன்னையே சுத்தி சுத்தி
வருதய்யா...
மண்ணில் புதைஞ்ச
முளைக்குச்சியாட்டம்
நெனப்பு பேயாட்டம்
ஆடுதய்யா...

உன் கோபத்தை மட்டுமல்ல
மவுனத்தையும் ரசிக்கத்
தெரிந்தவள் நான்....

அவசர அவசரமாய்
கிளம்பிச்  செல்லும் போது
எதற்கு அந்த பார்வை வேறு ?

கன்னம் குழி விழ
சிரிக்க வைத்து
களவாடிப் போகிறான்
வெட்கத்தை.


வாழ்த்தொன்றை சொல்லிவிடவே
வரிசைப்படுத்த முயன்று தோற்கிறேன்...
வார்த்தைகளை.

புத்தாண்டே வருவாய் !



அகிலம்தானே சுழல்தல்போல்
ஆக்கமது சுழன்றாடின் நன்று!

இமயம் உயர்ந்து நிற்பதுபோல்
ஈரம் இதயம்வாழினது மேன்மை!

உயிரில்லா வானம் பொழிதல்போல்
ஊருயர நாமுழைப்பினது தியாகம்!

எங்குமன்பு மட்டும் கோலோச்சின்
ஏணியாகுமே உறவென்ற பாசம்!

ஐயமில்லா நட்பு வந்து கூடினதுவே
ஒருநாளுமொழியா விதிசெய்யுமே!

ஓரணியாய் நன்மையது கைகோர்ப்பின்
கடலளவாய் மெய்யெழுந்து நமைஆளுமே!

காலத்தின் ஓட்டம் கவிதைகள் பாடட்டும்
புதுமலராய்ப் நற் புத்தாண்டு பூக்கட்டும்!

நறுமணம் மட்டும் வாழ்வை சூழட்டும்!
இல்லாதார் புதுவாழ்வேந்தி உயரட்டும்!

உள்ளாரிரங்கி மனமுவந்து ஈயட்டும்!
கல்லார்கு கல்விகிடைக்க வழிபிறக்கட்டும்!

பெண்டிர் தம்முரிமை பெற்றுயரட்டும்!
தீமைகள் தோற்கட்டும் நன்மை ஜெயிக்கட்டும்!

புத்தாண்டே நீவருவாய்-கண்திறவாய்
நாடும் வீடும் இயற்கையும்வாழ வரமளிப்பாய்!

பாசத்துடன் நேசத்துடன் அன்புடன் வாழ்த்தோடு
                                             தென்றல்.......

Sunday 30 December 2012

முடிவில்லா நிகழ்வுகள் !



இதயயிமை மூடிவைத்தே சிலர்
இருளாக வாழ்கின்றார் இவர்
அம்மாவாசை பயணத்தால பல
பௌர்ணமிகள் மாசுபட்டுலகில்
உதிர்வதேன்?காரணம் தேடலாய்!

பெற்றவர் செய்த தவறின் பலனோ?
வளர்ப்பால் விளைந்த பாவப்பதரோ?
போதையால் பாதை மாறிய நிலையோ?
கூடாதநட்பு காட்டிய தீமை வழியோ?
கலாச்சாரச் சீரழிவின் அரங்கேற்றமோ?
கறுப்பாடுகளின் இச்சைசெய்யும் மோசமோ?
சட்டத்தின் ஓட்டை கொடுக்கும் தைரியமோ?
சாகவரம்பெற்ற ஆசையின் தூண்டுதலோ?
தேடினனெல்லாமே மனிதன் மிருகமாக!

அன்புமகள் சல்லடையாய்,மனிதநேயம்?
சட்டமும் சரியாயில்லை சமூகப்பார்வை
சந்தைக்குவந்த விளைபொருளாய் விற்க!
உயிர்போனால் ஒப்பாரி -வருமுன் காக்க
ஆள்வாருமில்லை ஆண்டவனுமில்லை!
முடிவில்லா நிகழ்வுகள் முடிவுரையறியாது
கண்ணீரால் லாபமில்லை தீமைவேறறுக்க
கையில் ஆயுதமேந்தினுமினி பாவமில்லை!

ஆண்டொன்று போனால் ...


எதிர்பார்ப்பு இல்லையெனில்
வாழ்க்கையில் ஒன்றுமில்லை
எதிர்பார்ப்பே வாழ்வானால்
ஏமாற்றம் எஞ்சி நிற்கும் !

எனக்கென்று எதைத் தருவாய் ?
கனவோடு காத்திருந்தேன்.
கரைந்தோடும் நீர் மணிபோல்
மறைந்தோடிப் போகின்றாய்.

விரிந்து பரந்த நீலவானில்
நெற்றிச்சுட்டி விண்மீனில்
மறைந்திருக்கும் மாயங்களை
எனக்காய் தருவாயோ ?

மேகங்களில் மறைந்திருந்து
வழிகாட்டும் பார்வையிலே
வாழ்ந்திருக்கும் கவிதைகளை
அள்ளித் தந்து மகிழ்வாயோ ?

காற்றின் இசைப் பாட்டுகளாய்
காதில் சொல்லும் மந்திரத்தை
காதோரம் கொண்டு தந்து
கதைகள் சொல்வாயோ ?

ஆண்டொன்று முடிந்ததுவாம்
ஆசைக்கேது முடிவிங்கே !

Friday 21 December 2012

உயிரெதற்கு உடம்பினிலே !


சந்தனத்தில் குளித்தெழுந்து-உனை
         சந்திக்க வருகிறேன்
நினைவுகள் துரத்த - ஓடி மறைய
    நீண்ட வெளி தேடுகிறேன்.

எட்டு திக்குமெங்கும் - என்னில்
      எரி கல்லே விழுந்திடுதே
எரிந்து முடித்த பின்னும்
     எலும்பிலும் உன் நேசம் .

அந்தியில்  ஆற்றங்கரையில்
     அடுத்தடுத்து காத்திருந்த பொழுதெலாம்
கனவாய் போனதடி - நானும்
    கல்லாய் நின்னேனடி.

இமை இரண்டும் வாடி - நெஞ்சில்
    ஈரம் தெரிந்ததடி 
இதயத்தில் துடிப்பிருந்தும்
    ரத்தம் உரைந்தே போனதடி.

பாடும் பறவையினம் - உனை
   பாடி அழைப்பதென்ன
பாவி என் நிலையை
  பார்த்து சிரிப்பதென்ன.

உன்னைப் பார்த்த விழி
    ஓவியம் காண மறுக்குதடி
கன்னல் மொழி கேட்ட பின்னே - திண்ணை
    கதைப்  பேச்சும் மறந்தேனடி.

உயிரெதற்கு உடம்பினிலே
   உதிரம் குடிக்கும் காதலாளே...

Thursday 20 December 2012

பழசு போய் புதுசு வந்தது !



குடம் குடமா நீரெடுத்து
குளத்து தண்ணீ வத்திப்போச்சி
கூடை கூடையா மண்ணெடுத்து
குழியுந்தான் பெருசாச்சி...
மச்சானே சட்டிப் பானை
செய்தது போதும் மச்சான்
நாட்டில் நாகரீகப்  பெயராலே
மண்பாண்டமெலாம் மறந்தேபோச்சு

மண்ணைச் சுரண்டி சுரண்டி
மாடி வீடுந்தான் பெருகிப்போச்சு
சுரண்டல் இங்கு பெருகியதாலே
இயற்கை வளமும் தான் சுருங்கிப்போச்சு.

குலத்தொழிலும் அழிந்தொழிந்து
குடும்பமெலாம் சிதைந்து போச்சு
மண் அடுப்பு மறைந்து போக
கேஸ் அடுப்பு வெடிக்குது மாமா.

மாட்டு வண்டி பயணம் குறைய
மாசு பெருகி மருந்து கடை 
பெருகிப் போச்சு....
மச்சானே பழசு போய்
புதுசு வந்தா பரவாயில்ல
பாதிப்பு பெருகுதே என்ன சொல்ல.

Wednesday 19 December 2012

புத்தக வெளியீட்டு விழா காணொளி !



எண்ணங்களைப் பகிர்ந்து எழுத்துக்களால் அறிமுகமாகி வலையில் வலம் வந்த சகோதர மற்றும் நட்பின் உறவுகளை சந்திக்க வாய்ப்பளித்த மாபெரும் விழாவான
-- பதிவர் சந்திப்பை நம் யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத , மகிழ்ச்சி தரும் விழாவாக நடந்தது. புலவர் ஐயா அவர்களின் உரையைப் போல நம் இல்ல விழாவினைப் போல அவ்வளவு ஆர்வத்துடனும், அன்புடனும் மீண்டும் மீண்டும் பேசி மகிழ்ந்தோம். இனி வரும் சந்திப்புகள் எத்தனை இருந்தாலும் முதல் சந்திப்பை அசைபோட வைக்கும் விதமாக புகைப்படங்கள் மற்றும் பதிவுகள் மூலமாக அனைவரும் வெளியிட்டு மகிழ்ந்தோம். எனினும் அன்றைய விழாவினை காணொளியில் கண்டு மகிழ சகோதரர் மதுமதி தம் கடும் உழைப்பினாலும் ஆர்வத்தினாலும் தயாரித்து நமக்கு பகிர்ந்தளித்து சில தினங்களாக நம்மையெலாம் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி வருகிறார் என்பது மிகையாகாது. அந்த மகிழ்வான தருணத்தில் தான் எனது முதல் கவிதை வெளியீடும் நிகழ ஆர்வம் கொண்டு எனது விருப்பத்தை புலவர் ஐயா மற்றும் சென்னைப் பித்தன்  அவர்களிடமும் சகோதரர் மதுமதி மற்றும் கணேஷ் அவர்களிடமும் கூறிய போது மிக்க மகிழ்வுடன் சம்மதித்து உடன் இருந்து ஊக்கமளித்து புத்தக வெளியீட்டை அன்றைய தினம் வெகு சிறப்பாக எனது வாழ் நாளில் மறக்க முடியாத நிகழ்வாக நடத்திக் கொடுத்த தாய் நாடு மக்கள் அறக்கட்டளை நிறுவனத் தலைவருக்கும் பதிவர் சந்திப்பிற்கு வருகை தந்து நூலினை வெளியிட்ட பட்டுக்கோட்டை பிராபாகர் அவர்களுக்கும் நூலினைப் பெற்றுக் கொண்ட சேட்டைக் காரன் அவர்களுக்கும் குறிப்புரை வழங்கிய கணக்காயர் அவர்களுக்கும் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்து அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் சகோதர சகோதரிகளுக்கும் விழாவிற்கு வருகை தந்து வாழ்த்திய அன்புள்ளங்களுக்கும் ......

உயிர் கொடுத்த தாய்தந்தைக்கும்
உதிரத்தில் கலந்த தமிழுக்கும்
உன்னத நட்புக்கும் உடன் பிறப்புகளுக்கும்
உடனிருந்த உறவுகளுக்கும்
காதலீந்த கணவருக்கும்
கனவையும் ரசித்த மழலைகளுக்கும்
காட்சியாய் விரிந்த இயற்கைக்கும்
மண் வாசமிட்ட மழைக்கும்
மழை தந்த மரங்களுக்கும்
மன்னவனாம் சூரியனுக்கும்
மயங்க வைத்த நிலவுக்கும்
மின்னிச் சிரிக்கும் விண்மீன்களுக்கும்
எனது மன மார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்றைய நிகழ்வை காணொளியாக பகிர தயாரித்துக் கொடுத்த மதுமதி சகோவிற்கு மீண்டும் மீண்டும் நன்றி கூறி காணொளியைப் பகிர்கிறேன்.



Tuesday 18 December 2012

மாய வாழ்க்கை வாழ்ந்தெதற்கு ?



சாமியும் சரியில்லை
ஆசாமியும் நிலையில்லை
கருத்துப் போட்டியிலே
கவிதைகள் பிறக்கலாம்.

சொத்து பத்துக்களால்
சொந்தம் பிரியலாமா ?
ஆறடி மண்ணுக்கும்
அவகாசம் இல்லையடா ?

மின்சார நெருப்பினிலே
எரிகின்ற மேனியடா.
உருகாத வெண்ணை தேடும்
அறிவு சார் ஜீவிகளும்.

கிரகங்கள் ஒன்பதும்
ஆள்கின்ற சக்திகளாய்.
வான் கடல் நீந்தி வாழும்
விண்மீன்கள் பாவமடா.

கதிரவன் திமிங்கலமாய்
நிலவு மகள் மீனினமாய்
துருவங்கள் முத்துக்களாய்
நீலவானும் கடல் தானோ ?

அழுக்கில்லா மேனிதனை
தேடியோடும் மனம் கண்டேன்
அப்பழுக்கில்லாத மனம்
தேடயாருமில்லை.

மாசு நீக்க வழிவேண்டும்
மாய வாழ்க்கை வாழ்ந்தெதற்கு ?

Monday 17 December 2012

உண்மையன்பு எதுவென்றே ஓர்தேடல் !


அரசவைக்கவியுடனே அரசனானகலையரசும்
அரங்கேற்றிய விவாதமேடைப் பொருளாய்
உண்மையன்பு எதுவென்றே ஓர்தேடல் அரங்கேற!

அற்றவன் வந்துரைப்பான் அன்பு பொய்யதனால்
அனைத்தும் விட்டொழித்து துறவறம் பூண்டிங்கே
ஆசைதனைத் துறந்து அட்சயபாத்திரம் ஏந்தினன்!

ஆண்டவன்மேல் கொண்ட அன்பேயன்பு என்றியம்ப,
மன்னனவன் சொல்வான் மக்கள்மீது அன்புவைத்து
அவர்காத்து துன்பம் நீக்குதலே தலையாய அன்பென்றான்!

குடிமகனவனெழுந்து கொண்டாளை நேசித்து பிள்ளைகளை
சீர்படுத்தி பண்போடும் அறிவோடும் வளர்த்தலழகென்றான்!
சுட்டிச் சிறுமியொருத்தி பட்டன துள்ளியெழுந்து பட்டாடை
பளபளக்க சொல்வாள் என் அம்மாவின் அன்பே அன்பென!

தாயன்பு பெரிதா?சேயன்பு சிறப்பா?காதலன்பு அரிதா?
எத்தனையோ கேள்விகளும் எதிர்கருத்தும் புயலானவேளை
அவையிலேயொரு பைத்தியம் அத்துமீறி உள்நுழையக்
காவலன் அவளையடித்து புறம்பேதள்ள முயல்கையிலே
பாடினள் ஓர்பாட்டு யாரும் பாடாதப் புதுப்பாட்டு!

புரிதலுமில்லே பகிர்தலுமில்லே புரியாமல் அன்பேதடா
புரிந்துகொண்டால் நானேதடா எல்லாமே நாம்தானடா!
நடுவர் தீர்ப்புரைத்தார் -புரிதலும் பகிர்தலுமில்லா அன்பு
அன்பில்லை அதுவாழின் எல்லாஅன்பும் நன்றேயென்று!
பைத்தியத்தின் உளரலா?இல்லை வாழ்க்கைப் பாடமா?

Friday 14 December 2012

அன்புள்ள மனம் தனில்வாழும் !


பச்சைப் பசுந்தளிர் உதிர்வோப் பண்பாடு-தீய
இச்சையின் இம்சையில் அழுகியதோ இதயம்!
பகலை இரவாள்வதோப் பகைமை இனிமை
உறவையதடித்துப் புசித்து பசியாறுமோ நாளும்!

முயற்சியது மூலை முடங்கியழுதுக் கிடக்க-துயில்
முந்தானை விரித்தே மடமையாய் வந்தாண்டிடுதே!
நல்லதென்றக் கரு உருபெறாமல் போகுமோ-நன்மை
கருவழிந்த பிண்டமாகி மண்ணில்போயது சேருமோ!

இமையது மூடின் பொய் நினைவாகி வாழுமோ-கனவு
தினம் நம்பிக்கை விதைத்து கனவாகவேயது ஓயுமோ!
கற்றாழைச்செடி ரோஜா மலரையிங்கு ஈன்றிடுமோ
அறியுமுன் பொருளுரைத்தே மனமிங்கே வேகலாமோ!

கொண்டதெல்லாம் கொடுமதியோ பொய் வாழ்வில்
கண்டு நிற்பதெலாம் கண்ணீர்ப் புயல் மழைதானோ!
வடிவமெலாம் பனியாகி நிழலாகி உருமாறி போனதோ
உரத்துக்குமாகா நாயினங் கீழான மனித உடலின் வாழ்வு.

உலகாளுதல் கூடுமோ அறியாமை அழிமதிதான் வாழுமோ!
கொற்கை வேந்தனுமே வெட்டியான்கை எரிபொருளாய்
மண்பாண்டமுருகி வடிவங்கள் வேறுவேராய் வேறில்லை!
சேமித்தலொன்றுண் டதுவே நாளை நம் பெயர் சொல்லும்.

அன்புள்ள மனம் தனில்வாழும் அறமன்றி வேறேதுமில்லை!
அன்பைத்தேடி நாடி யோடின் அதுபுனிதம் அறிதல் மேன்மை!!

Thursday 13 December 2012

துளித் துளியாய் !



என்னோடு உனைப்பார்த்தால்
கடிகார முட்களுக்கும் கை கால்
முளைத்துவிடுமோ ?
ஏன் இந்த ஓட்டம் பிடிக்கிறது.

சிறு சிறு பிரிவுகள் தான்
உனக்கான என் நெருக்கத்தை
வெளிபடுத்துகின்றன.

புள்ளி மானாய் ஓடி
மெழுகாய் உருகி
நீரில்லா மீனாய் தவித்து
வாடிய பயிராகிறேன்
வழக்கமான உன் உரையில்லாத போது.

தினத்தேடல்கள் கூட
திகட்டாத உன் அன்பில்
காணமல் போகின்றன..
கள்வனே கவர்ந்ததை
கொடுத்துவிடு.

இல்லையென்பதற்கும்
இருக்கு என்பதற்கும்
அதிக வித்தியாசம் இல்லை
இதோ என் முன்னே இருக்கிறாயே
அன்பு இருப்பதை உணரமுடிகிறது.

பகலுக்கான
இரவின் காத்திருப்பாய்
அர்த்தமற்றுப்போகிறது..
சில காத்திருப்பு.

Tuesday 11 December 2012

இன்றைய பெற்றோரின் வளர்ப்பு முறை !



மாந்தளிரும் மான்விழியும்
ஆறாட்டம் ஓடுதிங்கே...
கிள்ளை மொழி பேசியே
கதிராட்டம் ஆடுதிங்கே!

அன்னத்தின் நடை நடந்து
அருகம்புல்லின் விரல் கொண்டு
ரோஜா இதழால் முத்தமிட்டு
ராசாவைப் போல் மனமாள
பிறந்தவன் நீ தானடா...

அகிலமாளப் பிறந்தவனே
ராஜாக்கள் கதை கேளடா
ஜான்சி ராணியும் ஆண்ட தேசமடா..
தாத்தா பாட்டி கதை கேளடா
தரணியையும் அன்பால்வெல்லடா!

மன்னராட்சி காலத்திலும்
மக்களாட்சி நடந்த போதும்
ஆடல் பாடல் கலை வளர்த்து
ஆன்மிகத்தில் மனதை செலுத்தி
வாழ்ந்து வென்றோமடாநாமே
வளர்ந்து நின்றோமடா!

ஒற்றுமையின் பலம் உணர்ந்து
ஒருமித்த கருத்துடனே மக்கள் வாழ
பாடுபடும் தேசம்தானடா நம்மை
வாழவைக்கும் மண்தானடா நம்
தாய் நாடு பொன்நாடடா!

கேள் கண்ணே கேளு நீயே
 வளர்த்து வைத்தப் பண்பு மாறி
வேஷமிட்டப் பொய் உலகம் நாடி
பின்னாலேப்போனோமடா நாமே
புழுதியாகி நின்றோமடா நம்மை
காக்கின்ற உறவேதடா இனியும்
பொய்மை ஆள்வது முறைதானடா?

ஆபாச நடனம் பயில எங்கோ
ஆலாப்ப் பறக்கும் கூட்டம்
ஒழுக்கமிங்கே ஒழுங்கீனமே கண்ணே
உண்மையிங்கே காணத உரலாகுதே!

தீயைத்தேடு்ம்  விட்டில்பூச்சி
வாழ்வுக்கு விளம்பரமேன் கனவுகள்
காண்பதுமேன் பெற்றோரே ...
சிதைவது நல் வாழ்வாகுமேயினி
நலம்வாழ வழிகாட்டுங்களேன்
கண்ணின் மணியாக வாழுங்களேன்!
நல்லொழுக்கம் சிந்தனையை ஊட்டி
அன்பாய்ச் சீராட்டுங்களேன் அறிவை
ஏர்பூட்டித் தாலாட்டுங்களேன் ஒளியை
பிள்ளை வாழ்வில் ஏற்றுங்களேன்!!

Sunday 9 December 2012

கேள்விகளுக்கு விடையில்லை !



எதிர்காலம் தேடுகிறேன்
இருளாய் விரிகிறது
திரும்பிப் பார்க்கிறேன்
மலைப்பாய்த் தெரிகிறது
ஆதாம் ஏவாளென்ற
பரம்பரையில் வந்தோமா ?
குரங்கென்ற வர்கத்தின்
குலமாய் மலர்ந்தோமா ?

அணுக்களின் சேர்க்கையிலே
அவதாரம் ஆனோமா ?
தண்ணீர் படிவத்தின்
மறுபடிவம் நாம் தானா?
கேள்விக்கு விடையில்லை
தேடுகிறோம் என்னாளும்
கண்டு சொன்னாலும்
கடவுள் படைப்பென்போம்!

உலகம் நமதென்று
சட்டங்கள் எழுதிவைத்தோம்
அனைத்தும் சுயநலத்தால்
விளைந்த தீமைகளே !
கானகம் அழித்திங்கே
வானம் பொய்க்கச் செய்தோம்
கனிவளம் கொள்ளையிட்டு
பொக்கிஷம் சேர்த்து வைப்போம்.

கருவறைப் பிள்ளைகளின்
கை கால்கள் முடக்குகின்ற
அணு அரக்க சக்திகளை
நமக்காக ஆக்கிவைப்போம்.
மரங்களை வெட்டிவிட்டு
காற்றைத் தேடுகிறோம்
மனங்களைக் கிழித்தெறிந்து
உறவைத் நாடுகிறோம்.

கடல் நீர் துவர்ப்பிழந்தால்
உலகம் மயானமாகும்
மனிதன் நிலைமறந்தால்
எதிர்காலம் பாலையாகும்!
உள்ளதில் மனம் மகிழ்ந்து
நல்லதை நாம் செய்தால்
நாளை கவி பாடும்
நன்மைகள் தழைத்தோங்கும் !

படித்தும் பயனில்லை
உடுத்தியும் மானமில்லை
தடுத்தும் கேட்பதில்லை
தரணியை அழிக்கின்றோம்
நமக்குச் சொந்தமில்லா
பூமியை அழிப்பதற்கு
மனிதா உரிமையில்லை
மனமாசு கழுவி விடு.

இன்று நாமிருப்போம் -நாளை
நாம் செல்வோம் -என்றும்
வாழ்ந்திருக்கும் காலத்தை
வாழ விடு- அழிப்பதை நிறுத்தி விடு.

Thursday 6 December 2012

தோழி ஒருத்தி வேண்டும்..!



பார்த்துப் பார்த்து சிரித்திட்டான்
பார்க்கும் இடமெலாம் முகம் பதித்தான்
சிந்தை முழுதும் அவன் நினைவிருந்தும்
சிரித்துப் பேச மறந்தேனடி தோழி...

விழியசைவில் எனையழைத்தே
மடியினில் அமர்த்திட்டான்
'செல்லமே' என்றழைத்தான்
செவிகுளிர பாட்டென்று நினைத்தே-நானும்
அடுத்த வரி எனக்கேட்டேன்
அந்தோ பொத்தென கீழே தள்ளி
பறந்தோடிப் போனானடி..தோழி

அவனுள் விழுந்ததினால் வலிக்குதடி
சோற்றுப் பருக்கையோடு நானும்
சோதிடக் கட்டம் வரைகிறேனடி தோழி...
மாவரைக்கப்போனாலும் உரலிடுக்கில்
அவனுருவம் தெரியுதடி..தோழி

அவனிடத்தில்
என் அறியாமை கூறாயோ..?
பாட்டெல்லாம் தேவையில்லை
அவனைப் பார்த்திருந்தால் போதுமடி ..தோழி
பக்கம் வர சொல்வாயோ..?

Wednesday 5 December 2012

தென்றல் பிறந்த நாள் !

தென்றலில் எழுதத் தொடங்கி இன்றோடு ஒரு வயதாகிறது தென்றலுக்கு....
 வாழ்த்துக்களால் வளர்கிறேன்.......வணங்கித் தொடர்கின்றேன் .

  தமிழ்த்தாயின் விரல்நுனிபற்றி,
   நடக்கப் பழகிய தென்றலின்று,
   இந்தியத்தாயின் பாதம் பணிந்து,
   பயணம்தொடர விரும்புகிறேன்!
   இந்தியராய்ப் பிறப்பதென்பது,
   இனிமையான ஓர் வரனென்பேன்,
   அதிலும் தமிழராய் ஜெனித்தல்,
   தரணியில் பெரும் பேரென்பேன்!

   இமயம்முதல் குமரிவரை,
   இதயங்கள் வாழ்ந்திருக்கும்,
   சொர்கபுரி பார்க்கின்றேன்-அதில்,
   நானுமொரு பாத்திரமாய்,
   உடன் வாழ வரம் பெற்றேன்.
    மனம் பாடும் பாட்டு இதுவே !
   என்னினிய உறவெல்லாம்,
   எனதருமை நட்புகளே!

   எதுவும் கொடுக்க என்னிடமில்லை,
   எதையும் நீங்கள் கேட்பதுமில்லை,
   அள்ளி,அள்ளித் தந்த அன்பை,
   இதயத்தில் வைத்து வணங்குகிறேன்!
   ஆராதனைப் பொருளாக-அதை,
   ஆராதிப்பேன் உயிருள்ளவரை!

   நேற்றுவரைப் பிறை நிலவு,
   இன்று வளர் பிறையாய்!
   பௌர்ணமியாய் வளர்கவென,
   வாழ்துகின்ற சுடரொளி உங்கள்,
   பாதம் தொழுது வளர்கின்றேன்,
   பயணத்தைத் தொடர்கின்றேன்!

   உங்களில் நானுமாகி!!
   மீன்குஞ்சாய் கடலில் நீந்தி,
   விண்மீனாய் வானில்பறந்து,
   கார்முகிலாய் கவிதைபாடி,
   காற்றாகி ,தென்றலாகி,
   ஊற்றாகி தாகம் தீர்த்து
   இந்தியத்தாயின் மடியினலே,
   தமிழாய் மடியவேண்டும்.
   அழைப்பு வரும்வரையில்,
   எழுதும் என் எழுதுகோல்!
   நீதிக்காய்-அநீதியெதிர்த்து!

   தமிழுக்காய்-குரலை உயர்த்தி,
   அன்புக்காய்-தலைவணங்கி,
   உண்மைக்காய்-போராடி,
   அறிவுக்காய்-அறியாமைஅகற்றி,
   நட்புக்காய் -விட்டுக்கொடுத்து,
   ஆத்மாவுக்காய்-ஆறுதல்பாடி,
   இல்லார்காய்-நாழும் அழுது,
  தொடரும்  பயணமதை!
   உங்கள் வாழ்த்தோடு!தொடர்கிறேன் முடிந்தமட்டில் ...

திக்குத் தெரியாமல்; வாய்ப்புகளுக்காய் தட்ட வேண்டிய வாசல் புரியாமல் ஓடி மாய்ந்து ஆயரமாயிரம் எழுத்தாளர்கள் அலைந்து திரிகையிலே ,வழிகாட்டியாய் வந்த வசந்த மண்டபம் திரு .மகேந்திரன் அண்ணா அவர்களுக்கும், வயதில் முதிர்ந்தவர் என்றாலும் மரபுக் கவிதைகளால் என்றும் இளமையாய் தென்றலுக்கு புயலென பெயரிட்டு மகிழும் புலவர் ஐயா அவர்களின் ஆசியுடனுடனும் ,வலைச்சரத்தில் முதல்  முதலாக அறிமுகப்படுத்திய திரு . மதுமதி அவர்களுக்கும் ,மற்ற அன்பு நெஞ்சங்களுக்கும் ,ஆசிரியராக அமர்த்தி மகிழ்ந்த வணக்கத்திற்குரிய சீனா ஐயா அவர்களுக்கும் ,முதன் முதலாக எனது பதிவிற்கு வருகை தந்தும் தொடர்ந்தும் வழிநடத்தும் ரமணி ஐயா அவர்களுக்கும் ,தொடர்ந்து எனது பதிவுகளுக்கு வருகை தந்து கருத்துக்களால் எனை ஊக்கப் படுத்தும் சக தோழமைகளுக்கும் மீண்டும் மீண்டும்  பல முறை எனது மனமார்ந்த  நன்றியை தெரிவித்து தொடர்கிறேன் . இனிப்பு எடுத்துங்க உறவுகளே...
கவிதை மீள் பதிவு

Tuesday 4 December 2012

எது வெற்றி ...?


வெற்றி வெற்றி வெற்றியென
முழக்க ஒலி கேட்கிறது
வென்றது யார் எனப்பார்த்தால்
அண்ணன் தோற்றதற்கு
தம்பியின் கொக்கரிப்பு.

விழுந்ததும் ஒரே இரத்தம்
எழுந்ததும் அதே உதிரம்
உறவு தோற்றதனை
அவர் உள்ளம் அறியாமல்
பாராட்டும் சீராட்டும்
பாடை வரை அதன் பிறகு ?

வாழும் வாழ்வைத் தொலைத்துவிட்டு
வசந்தமென சூளுரைத்தால்
வாடிவிழும் நாளில்
வாய்க்கரிசி கிடைத்திடுமா ?
எண்ணல் நன்றென்பேன்!

Monday 3 December 2012

விட்டொழிய மனமுமில்ல..!



குலுக்கிப்போட்டச் சோழியாட்டம்
குதித்தோடிப் போவதேன்
கொம்புத் தேனே..

விரட்டிப் பிடிக்க
எண்ணமில்லை
விட்டொழிய மனமுமில்ல..

உன் முன்னே
வண்டாட்டம் நிக்குரேன்டி
முன்னே வாடி சின்னப்புள்ள..

கன்னம் தொட்டுப் பேசப்போறேன்
கதவடைத்து காத்தா உரசப்போறேன்
உரக்கக் கூவி ஊர அழைத்திடாதே...
ஓடிப்போகவும் எண்ணமிடாதே..

சொக்கத் தங்கமென உன் உடலா?
சொர்ணமென்ன உன் பெயரா ?
சொக்க வைக்கும் உன்னழகே-வா
ஜோடியா தான் சேர்ந்திடுவோம் பேரழகே.

மவுனமென்ன மான்விழியே
மயங்கி நிற்பதென்ன தேன்மொழியே?
பதிலெனக்கும் சொல்லேன்டி
இல்ல பார்வையாலே கொல்லேன்டி.

Sunday 2 December 2012

செல்லக் கோபமும் ஏனோ ?


முல்லை அரும்பும்
முறைத்துக்கொண்டு
கொடியோடு நிற்குதடி
கொண்டையில் ஏறாமலே

கொஞ்சிப் பேசும் மழலையும்
கோபம் கொண்டே ஓடுவதேன்
எனைப் பாராமலே...

தங்கமேனி ஆடைபூண்டு
தளதளனு ஓட்டமிடும் நீரோடையும்
தயங்கி நின்னே தேங்குதடி
என் கால்கள் சேராமலே...

வானவில்லின் வண்ணம்பூசி
வளைந்து நெளிந்து ஆட்டமாடி
வசந்தக் காற்றை சுருட்டிப் போகுதே
பட்டாம்பூச்சியும் என் வாசல் வாராமலே..

தோப்போர குயிலிரண்டு
தோள் உரசி பேசிடுதே
தூது செல்ல அழைத்து நின்றேன்
ஒன்றோடொன்று துரத்தி ஓடிமறைந்ததெங்கோ ?
செவிக்கும்  கேட்காமலே...

தேடிப்போனதெல்லாம்
விட்டு ஓடிப்போவதேனோ ?
விரும்பி நாடி வந்த நீயும்
விளையாட்டாகவும் கோபம் கொண்டுவிடாதே ?

Wednesday 28 November 2012

வார நாட்களில் !


ஞாயிறு ஒளியாய் வந்து நிற்கும்
திங்கள் மான்போல் பார்த்திருக்கும்
செவ்வாய் மயிலாய் ஆடிப்போகும்
புதன் புண்ணியர் வாழ்த்துரைக்கும்
வியாழன் இசையைச் கொண்டுவரும்
வெள்ளி முளைத்து சிரித்து மகிழ்கைியில்
சனி மட்டும் கோபம் கொண்டதனால்
பிரிவெழுதி மீண்டும் ஞாயிறு வரை....

காதல் காத்திருந்து வாடி பார்த்திருந்ததால்
விதி என்வழி என்றுரைக்கும்
நவகிரகமும் சுற்றுகின்ற புள்ளி
 'காதல்' பொய்யில்லை.

அள்ளி அணைக்கப்போகையிலே
மேகம் போய் அணைக்கிறது
துள்ளிப்பிடிக்க நினைக்கையிலே
நீலவானம் தடுக்கிறது
நீர்துளியாய் வீழ்ந்து பார்த்தால்
பூமி உண்டுவாழ்கிறது
வாழாகாதல் உன்காதல்
சொல்கின்றார் பாரினிலே
காதல் வாழும் உலகம் உள்ளவரை!

Monday 26 November 2012

என்னருகே வந்து பேசமாட்டாயோ ?


எறும்புக்கு நிகரானவர்
எந்த நிலையிலும் மனம் சோராதவர்
மண்புழுவோடே அவர் சிநேகம்
மேய்ச்சல் மாடே அவர் உறவு..

கன்றுக்குட்டியிடம் கதை பேசி
களத்துமேட்டில் படுத்துறங்கி
வாழும் காலமெலாம் வயலினிலே
வாழ்ந்திடவே கனவு கண்டார்..

எங்கள் மேன்மை கருதி
எல்லாம் துறந்து இந்த
நகரம் நோக்கி படையெடுத்து
நசிந்தது அவர் கனவானாலும்

புன்னகையோட புதுஉலகம்
எமைக் காணச் செய்தார்..
சிறை வாழ்வும் சிறந்திடவே
பழம் கதை பேசி மகிழ்ந்திருந்தார்.

பட்டாம் பூச்சியாய் மக்கள்
திரிந்தாலும் பக்கத்தில் அமர்த்தி
பார்த்துப் பேசி மகிழ ஆசைகொண்டார்
பாவி நானும் உணரலியே
பக்கம் நின்னு பேசலியே..

எதையோஓடோடித் தேடினோம்
தேடலில் மிஞ்சியது ஏதுமில்லை
உன் அருகாமை தேடியே அழுகிறேன்
என் தந்தையே என் வலி உணராயோ
என்னருகே வந்து பேசமாட்டாயோ ?

Sunday 25 November 2012

நினைவில் நிற்க !


அம்மாவின்
மரண படுக்கையின் முன்பு
என்ன தெரியுதா மா ?
நான் தான் சின்ன பொண்ணு..

பழுப்படைந்த கண்களுக்கு
முன்னால் கண் களங்கி
மூக்கு சிந்தி...

அருகில் அம்மாவின்
முந்திக்குப் பின்னால்
மலங்க மலங்க விழித்தபடி
நிற்கும் உறவின் மிச்சம்

வாடாம்மா
நான் தான் அத்தை...
முகம்சுளித்து நகரும்
அவனுக்கு....
ஒரு பென்சில் பாக்சும்
இனிப்பு மிட்டாயுமே அடுத்த
சந்திப்பில் என்னை
நினைவுப் படுத்தக் கூடுமோ ?

எத்தனை வயதானாலும்
எல்லா உறவுகளுக்கு முன்னும்
அறிமுகம் என்பது இப்போதெல்லாம்
அவசியமாகிப்போகிறது..என்பது
வலிக்கவே செய்கிறது.

Friday 23 November 2012

புதிய பாதையிலே பயணிப்போம் !


கரைதேடும் வாழ்க்கையிலிங்கே
கரைந்தோடும் மேகமாய்
என்னினம் பெண்ணினம் !
காயங்கள் மட்டும்
மீதமாய்ச் சினேகிதமாய் !

விதையொன்று முளைக்கையிலே
 சுடுநீர் ஊற்றியழிக்கும்
வினைகளே அதிகம் புவியினிலே
அதைமீறிக் கொடியானால்
கிள்ளியெறியும் வீணர்கூட்டம்.

பாலையில் மலர் பூப்பது போல்
சாலையோரத்தில் சில மணப்பூக்கள்
ஊர்திகள் மட்டுமின்றி மனித
எச்சமும் இவர்மீதுத் தூற்றலாய்.

விடிவு வருமென்று காத்திருந்து முடிவில்
விதியிதுவென்று நொந்து மாண்டோர் ஏராளம்.

சதிவெல்லக் கூடிடவும் மனதில்
உறுதியில்லா மென் இதழாய்
பொங்கி எழச் சொல்லவில்லை
உரிமை நமக்குண்டு.

கண்ணீராய்ப் பெண் வாழ்வுக்
 கரைவதில் நியாயமில்லை
கடலளவு சோகத்தை
கையளவாய் ஆக்கிடவே.

நீந்தக் கற்றல் நன்று அடிமை
வாழ்வெதற்கு நாமும் மானிடரே
கனிகொடுக்கும் மரத்துக்கு
ஆணிவேர் நாமன்றோ ?
தாக்கங்கள் அத்தனையும்
 சமூக அவலங்களாய்
ஆக்கங்களில் நாமிலையோ
 பின்னேன் சேதங்கள்.

சொந்தக் காலில் நிற்கின்ற
நிலைவர உழைத்திடுவோம்.
நினைவும் கனவும் பொதுவுடமைப்
 புதிய வேதம் செய்வோம்
எத்தனை நாள் மதிக்கின்ற
படிகல்லாய் வாழ்ந்திருக்க
சிலையல்ல நாமுலகில்
உயிருள்ளச் சித்திரங்கள்.

போன காலம் போகட்டும்
வருங்காலம் நமதாகட்டும்
வானில் பறக்க ஆசையில்லை
வாழ்வில் நாமும் வாசமுல்லை
உணர வேண்டும் இல்லை
 உணர்த்த வேண்டும்.
பொய்யா முகம் நம்மிலுண்டு
பொய் முகம் கண்டு ஓடவேண்டாம்.

பேதைப் பெண்ணே எழுந்திடுப்
புதிய பாதையிலே பயணிப்போம்
வருவதை வென்றிடுவோம்
காலம் தேய்ந்து போனாலும்
காவியமாய் நாம் வாழ
புறப்படுவோம் வென்றிடுவோம்.
தமிழ்த் தாயின் துணையோடு.

Wednesday 21 November 2012

துளித் துளியாய் -3



நந்தவனம் கண்ட
பட்டாம்பூச்சியாய்...
நடை பழகும்
கன்றுக்குட்டியாய்...
தென்றல் தீண்டிய
தேகமாய்..
தவிப்பை மறைக்கத்தெரியாது

தத்தளிக்கிறேன்
உன் ஒவ்வொரு
பார்வைக்கு முன்னும்.

இடைவிடாது
பெய்யும் மழையாய்
வார்த்தை தர
எத்தனித்து தோற்கிறேன்.

பட்டாம் பூச்சி
உன் உறவா..
பட்டுக் கன்னம்
தொட்டுப்போவதேன்.

நட்சத்திரமும்
கண்சிமிட்டி அழைக்குதே
என்னோடு கண்ணாமூச்சியாடி
ஒளியுதே..
--
ஓடும் கார்முகிலில்
உன் உருவம்....
உரசிப்பார்க்கிறாள்
நிலாப்பெண்ணும்.

நெடுந்தூரம் நீ சென்றாலும்
நினைவேனோ உன்னோடே
நித்தம் நித்தம் கதைபேசி
என் நிம்மதி குடித்தபடி.

ஒவ்வொரு நிகழ்வையும்
சேமித்து காத்திருக்கிறேன்
உன்னோடு பேச...
ஒய்யாரமாய் மௌனமே
குடியேறுகிறது .


Tuesday 20 November 2012

நெருங்காதிரு....!



சோம்பல் முறித்து
வரும் சூரியனும்
சோலைப்பூவை முகர
வரும் வண்டினமும்
மனதை மயக்கும்
மெல்லிசையும்
தொட்டழைக்கும்
தென்றலும்....
மெட்டெடுக்கும்
இலையசைவும்
தோகைவிரித்தாடும்
மயிலும்....
தொய்வில்லாதோடும்
ஆற்றுப்படுகையும்
வாழ்வு தாபத்தோடு
ஓடும் மீனும்...
தாவியணைக்கத்துடிக்கும்
கொக்கும்....
தத்தி நடக்கும் வாத்தும்
மழலை தரையில்
 பழகும் நீச்சலிலும்
அன்பாய் தலைக்கோதும்
மரக்கிளையிலும்
அடித்தோடி மறையும்
அலைக்கடலிலும்
இவைகளுடனான
என் ஸ்பரிசம்
நீங்காதிருக்கவே....என்னோடு
நெருங்கவிடாதிருக்கிறேன்
உனதன்பை.

Sunday 18 November 2012

காதல் தூது !



பூபோட்ட தாவணியில்
புது மஞ்சள் சிரிக்குதடி
தீபாவளியும் போச்சுதடி
தினுசா தான் அசத்துறியே..

புதுசாத்தான்  உடுத்திகிட்டு
பொம்மலாட்டம் போடுறியே
திசையளந்தது போதுமடி
கொஞ்ச(சு)மெனை திரும்பித்தான்
                                                 பாரேன்டி.....

காத்திருக்கிறேன் காவகாரனாட்டம்
போவதெங்கே நீயும் ஓடும்
தண்ணியாட்டம்....
மனசக் காட்டத் தெரியளடி
நானும் அலைந்தேனே
                        குடிகாரனாட்டம்...

சந்தையிலே பார்க்கையிலே
சொந்தமாக்க துடிக்கிறேனடி
பந்தபாச உள்ளவந்தான்-நானும்
பரிசம் போட வரட்டுமா ?

முன்னே  பின்னே வந்து நின்னு
பல் இளிக்க தெரியாதேடி-நீ
போகும் வழி பூத்திருக்கேன்
போதை தரும் பார்வையைத்தான்
                                    தூதுவிடேன்....!

Thursday 15 November 2012

தானேயழிந்தாலும் தாங்கிடும் நட்பு !



நல்லெண்ணம்சூடி வண்ணமாய் நட்பு
நன்மைமட்டுமணியும் உண்மை நட்பு
நன்மைதீமையிலும் கூடவரும் நட்பு
நடப்பதெதுவாயினும் கைவிடாது நட்பு!

அன்பென்றே உயிர்வாழும் ஆருயிர் நட்பு
ஆணிவேராய் தாங்குமெனில் அதுவே நட்பு
இதயத்தை நம்பியே நாணயமான நட்பு
ஈகையேயென்னாளும் அதுவுயிர் நட்பு!

உதயகீதவேதமது உயர்வான கீதமது
ஊட்டி வளர்க்கும் அன்புப் பாசமது
எதையுமெதிர் பார்க்காத நல்நேசமது
ஏணியாய் வாழுமது எட்டியே உதைத்தாலும்!

ஐவிரல் கையிணைப்பானது உருமாறும்
ஒற்றுமையாய் நின்றுவென்று காட்டும்
ஓங்கிவளர்ந்த ஆலமரம் அதுசாட்சி
ஔிவழி எதுவரினுமது அலங்காரம்!

தானேயழிந்தாலும் தாங்கிடும் அன்புமுண்டு
தவமேயிருந்தாலும் கிடைக்காமல் போவதுண்டு
சுயநலஎண்ணம்கொண்டு புகழ்பாடும் அன்புண்டு
பணம்தேடிப் பறந்தோடும் வேஷவிஷ நட்பவையே!

நட்புவேறு காதல்வேறு பிரித்தறிதல் நன்றென்பேன்
நட்பின்பெயரில் கொச்சையாகும் உறவும் தீமைகளே
ஆண் பெண்ணென்று பேதமையின்றி நட்பெனில்
அதுவே மேன்மை யதுவே உண்மை யதுவேநட்பு!

அழியாது அழியாது நட்பென்றும் அழிவதில்லை
அழகது அழகது உலகில் உயர்ந்த அழகது
சுயமில்லை சுயமில்லை நட்புக்கு சுயமில்லை
சுகமது சுகமது உண்மை நட்பு இன்பமான சுகமே!

Tuesday 13 November 2012

மகிழ்வனைத்தும் குத்தகையெடுத்த தினம் !



ஆணும் பெண்ணும் சரிசமம்
அதை உணர்த்தும் இத்தினம்

மலராய் தொடுதல் இருக்குமே
மன்னிப்பும் சரளமாய் வேண்டுமே

அன்பாய் பார்வை விரியுமே
அகிலமே அதுவென நினைக்குமே

தீயை அணைக்கும் துணிவுமே
அஃதே துரத்தியடித்ததே பகையுமே

பட்டாம்பூச்சியாய் எண்ணம் விரியுமே
புள்ளிமானாய் துள்ளியோடி மகிழுமே

கொஞ்சியழைக்கும் உறவையே
கூடி வாழும் ஒரு கூட்டிலே

அறியாமல் இருந்த அறிவுமே-இன்று
அறிந்தும் மூடர் ஆவதேன் ?

அன்னை மடி சொர்க்கம் என்றானபின்
வளர்ந்து துன்ப வலையில் வீழ்வதேன்?


பிஞ்சு மழலையர்க்கு ஓர் தினம்
மகிழ்வனைத்தையும் குத்தகையெடுத்த தினம்.


எல்லாமே அழிவுப்பாதையை நோக்கி !



கொண்டாடி முடித்துவிட்டோம்-எதை?
ஒருதீயவன் அழிந்தானெனக் கூத்தாடி
ஒளிவெள்ளத்தில் ஒலியையும் இணைத்து
வான்மண்டலத்தைப் புகையால் மூடியே
பட்டென ஓர் இரைமுடித்துச் சட்டெனக்
கொண்டாடினோமே இனிதீமையிலையோ?

புவிதூய்மையானதோ?உறவு அன்பாய்
அறிவாய்ப் பண்பாய் பாசமாய்ப் பூக்குமோ?
தீமையெலாம் ஒழிந்தனவோ?நன்மைகள்
இனி நம்மையாளப் போகிறதோ?இனிமேல்
உள்ளார் இல்லான் பேதமைகள் நீங்கிடுமோ?

மதம்கொண்ட மதவாதம் சீரான பாதைகாட்டுமோ?
ஜாதியடிப்படையிலான பேதங்கள் விடைபெற்றதோ?
வறுமையும் நோயும் உடல்விட்டு மாயமானதோ?
பஞ்சபூதங்கள் நன்நெறிவழி நடக்க உறுதியெடுத்ததோ?
பசுமைவாழ பன்னீர்தெளித்து கோலமிட்டோமோ?
எங்கும் எல்லாம் அப்படியே அழிவுப்பாதைநோக்கி!

ஊர்கூடி உறவுகூடி உள்ளங்களும்கூடி அழகாயாடி
அன்பைப் பகிர்ந்து புத்தாடையுடுத்தி ஏழையுமிந்த
புன்னகையைப் பகிந்ததன்றி வேறேதுமில்லை!
தூய்மைவிதை மனதில் வளரும்வரை பயனில்லை
பண்டிகையும் கடந்தோடும் ஓர்நிகழ்வாய் மட்டும்!!

Monday 12 November 2012

நானென்ற நம்ஆசைக்காய் !


கரைபுரண்டோடும் நீரும்
கடலைத்தேடி...

சிறகுவிரிந்த மேகமும்
மலையாழம் பார்த்து...

முட்டைவிரிந்த குஞ்சும்
இரை தேடி...

வாழ்வுதேடி சுழல்நீரில்
எதிர் நீச்சலிடும் மீனும்...

வாய்கட்டி வயிறுகட்டி
ஏர் பிடித்திழுக்கும் மாடும்.

மலர் வருடும் வண்டும்
மண்ணுக்கு உயிராய் புழுவும்.

எல்லாம்வழங்கும் காலமும்
அறிவைத்தேடும் ஞானமும்
அணையாத மெய்யன்பும்
சுகமென்றுசுமைதாங்கும!

எண்ணம்தேடும் கவிஞனும்
வம்பாய் முடியும் நல்லுறவும்
ஆசை துறந்த மனப்பாட்டும்.

நீ நான் அவன் அவள் அதுஇது
எனது உனது நமதுபிரிவுகளும்
இறைவனுண்டு இல்லவேயில்லை
இஃதேயண்மை அதுயாவும்பொய்
என்றேயியம்பி நாம்வாழ்ந்திட.

வாசமில்லாத் தேடல்களாய்
கொடுத்ததெது தெரியாது
கொண்டதெது அதுநினைவாய்
வருவதெதுவோ அறியோம்நாம்
ஆயினுமெல்லாம் நமக்காக.

நானென்ற நம்ஆசைக்காய்
பிரபஞ்சத்தில் மாயத்தேடல்கள்.
எல்லாமே ஏதோபிரதிபலனை
எதிர்நோக்கியே நன்மையும் ஏன்?
தீமையுமிணைந்த பயணங்கள்!!

Thursday 8 November 2012

எத்தனைக் கதவுகள்....!



விபரமாயுஞ்சொல்லிடவும் வேண்டும்

விரசமுமின்றியுரைத்தலும் வேண்டும்

உடலுக்கெத்தனைக் கதவுகளுண்டு
உள்ளத்தினெண்ணம் சேர்க்காமல்!

ஆண்பெண்ணென்ற பேதமைகள்
இதிலுமுண்டு வடிவங்களாய்!

கருவிழியாயிரண்டு காக்குமிமையிரண்டு
செவிவழியிரண்டாய் நாசியாயுமிரண்டு!

வாய்வழியுண்ண ஒன்றிருக்க ஜனனத்
தொப்புள்கொடி உறவாயும் காட்சி!

கழிவுகளை வெளியேற்ற இரண்டிருக்க
வேர்வைத்துளி சிந்த ஆயிரமாயிரமாய்!

முடிந்ததாவெனில் இல்லை இன்னுமுண்டு
இன்பத்துக்கென்று தனியாய்படைப்பில்!

ஆணுக்கு முடிந்தது பெண்ணுக்கு இன்னுமுண்டு
தாய்ப்பாலூட்ட தனியாய் யெத்தனையோவுண்டே!

உயிரை உள்வாங்கி வளர்த்த மட்டும் திறக்கும்
கருவறையென்ற கதவு தாய்மையின் சொத்தாக!

எங்ஙனமெப்படி நோக்கினும் பெண்ணுடம்பில்
கதவுகளும் மனதில் கனவுகளுமதிகமாய்!

உரைத்தேனென் எண்ணத்தை யதைப்
பகிர்ந்தேன் உங்களுடன் சரியா?தவறா?
கேள்வியுடன்....?

Wednesday 7 November 2012

மவுனத்தின் மொழிபெயர்ப்பு !



சிறகு விரிச்சி பறக்குதே -மனசும்
சித்தாடைக் கட்டி விரியுதே
கொத்தோட பறிச்சவன் யாரடி
கொண்டாட தேதியுந்தான் கூறடி.

சித்திரையில் முளைத்தவனோ
சினம் கொண்டே பிறந்தவனோ
கத்திரியிலும் குளிரெடுக்க
கற்கண்டாய் சொல் உதிர்ப்பவனோ?

மலர் வனமே சென்றாலும்
மணமேனோ வீசலையே-
கட்டாந்தரையில் நானும்
களையெடுக்கப் போனேனே..

கடுகுவெடிக்குமுன்னே
காதை பொத்தி நின்றேனே
களவு போனது நிஜம் தானோ
கண்ணுறக்கம் மறந்ததேனோ?

சொல்லுனக்காய்த்  தேடித்தேடி                                                            
சொப்பனத்தில் ஆழ்ந்தேனோ
மவுனத்தை மொழிபெயர்க்க
மல்யுத்தம் பயில்கின்றேன.

மன்றாடித்திண்டாடி நானும்
மயங்கித்தான் கிடக்கிறேன்!
உணர்வுக்குள் உனை  நிறுத்தி
உன்னில் எனை தேடுகின்றேன்.

Tuesday 6 November 2012

அரிது அரிது பெண்ஜென்மம் அரிது !


எதற்காயிந்த பெண்ஜென்மம்
எத்தனைபேரின் அங்கலாய்ப்பு!
எண்ணின் பெண்ணாய்பிறத்தல்
எள்ளளவும் குறையில்லையது
எத்தனைப்பெரிய புண்ணியம்!

மழலையாய்யந்த சிரிப்பு வேதம்
தவழ்கையிலது உன்னத நாதம்
நடக்கையில் பூவின் ஆட்டம்
வளர்கையில் கண்ணின் மணி!

கொஞ்சலில் மழலைகொஞ்சும்
மிஞ்சுகையில் அப்பா தாங்கார்
நெற்றியிலே அலங்காரப் பொட்டு
இமைதனிலே கருஞசாந்திட்டு
கண்படாமல் திருஷ்டிக்கொன்று
தாமரையொன்று வீட்டிலென்று!

வளருமெல்லாம் வசந்தங்களாகவே
மொட்டென்ற மாமணியொன்று
சட்டென்று மலராய் விரியும்
பெற்றவரும் உற்றாருமங்கே
கூடிக்கும்மியடிக்கும் கோலாகலம்
மனம்மெதுவாய் மையல் பயணங்கள்!

வண்டெல்லாம் சுற்றிசுற்றி வரவுகள்
வாழ்க்கையெது புரியாத கனவுகள்
கொடிதேடும் மரமொன்றையதுயாரோ
ஏற்கனவே எழுதிவைத்த விதிவழியே
காதலி மனைவியாகி மனைவி தாயாகி
தாய்மையின்மேன்மையில் பிறப்புகள்!

அம்மா அப்பா சுற்றம் நட்பு எல்லாம்போய்
பிள்ளைக்காய் வாழ்ந்து முழுமையாய்
தனையீந்து பெண்ணாய் கொடுத்து
அரிது அரிது பெண்ஜென்மம் அரிது!


பெண்மைக்கு பெருமை சேர்த்த என் மகனுக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

தென்றலின் வசந்தம் நீ
தெவிட்டாத தமிழ் இன்பம் நீ
உள்ளத்தில் தாயென உணர்த்திய
இனியவனே....
 அகிலமாளப் பிறந்தவனே
அன்பால் யாவும் வென்று
அறிவு கல்விச் செல்வம் பெற்று
ஆண்டொன்று கூடக்கூட
எம் தாயுமானவனாய் ஆனாய்
நற்பேர் புகழோடு ஆண்டுகள்
நூறு வாழ வாழ்த்துகிறேன்!


Monday 5 November 2012

புயலோடு ஓர் பயணம் !



புயலின் விரல்பிடித்து
தெருக்களின் புழுதியில்
முகம் படாது பூகம்பமாய்
கிளைக்கு கிளை தாவி
அலைகளை அன்னார்ந்து
பார்க்க வைத்து...
ஆகாயத்தில் கண்ணாமூச்சியாடி

காவிய மண்டபங்களின்
கதைகளை புரட்டிப்பார்த்து'
கண்ணகியின் சிலம்பணிந்து
காவிரியில் நீராடி...
கம்பனின் கவிகேட்டு
கட்டாந்தரையையும் ஆராய்ந்து
வரலாறுகளை திரும்பப்பார்த்து.

மின்சாரக் கம்பிகளில் நடந்து
மீன் பிடிக்கும் வலையை போர்த்தி
மரங்களின் வேர்களில்
மருதாணி பூசி மகிழ்ந்து
இடி மின்னலை அழைத்து
இன்முகமாய் நலம் விசாரித்து
இரண்டொருநாள் சுகம் போதுமென
இயல்பாகவே திரும்பியது தென்றலும்.

Friday 2 November 2012

வேண்டவே வேண்டாம் வேறெதும் !


கலைந்தது கலைந்தது
நினைவும் கலைந்தது
தொடர்ந்தது தொடர்ந்தது
கவலை தொடர்ந்தது!
தொலைந்தது தொலைந்தது
 நிம்மதி தொலைந்தது
சிரிக்குது சிரிக்குது
காலம் கைகொட்டிச் சிரிக்குது!

வேகுது வேகுது
நெஞ்சம் வெம்பி வேகுது
கொடியது கொடியது
பிரிவுகள் பெருங்கொடியது!
உருளுது உருளுது
எண்ணமெங்கோ உருளுது
உடையுது உடையுது
இதயகண்ணாடி உடையுது!

நின்றது நின்றது
 உயிர் துடிப்பெல்லாம் நின்றது
முளைத்தது முளைத்தது
 கேள்விகள் முளைத்தது!
களைத்தது களைத்தது
நினைத்துக் களைத்தது
அணைத்தது அணைத்தது
கடமைகள் அணைத்தது!
போதும் போதும்
அன்புமட்டுமெனக்குப் போதும்
வேண்டாம் வேண்டாம்
வேறெதும்  வேண்டாம்!

வெட்கத்தின் விலை !



பொம்மலாட்டம்
பார்க்கப் போனநானே
பொம்மையானேனே!

சிலம்பாட்டம்
கண்டு வந்தேநானும்
சிரிச்சி நின்னேனே!

கயிறாட்டம்
ஆடப்பார்த்து
கனவு கண்டேனே -நானும்
பகல் கனவு கண்டேனே!

கிழங்காட்டம்
நானிருந்தேன்னெனையும்
கிறங்க வச்சாயே ..
.மடியில உறங்க வச்சாயே

 சூதாட்டம்
ஆடி என்னைநீயும்
தோற்க்க வச்சாயே   ..
உன்னை ஏற்க வச்சாயே !

Wednesday 31 October 2012

நீலமிங்கே புயலாய் !


கடந்ததைத் நின்று திரும்பிப்பார்த்தேன்
மனதில் புயலுக்குப்பின் அமைதியாய்!
வானைநோக்கின கண்கள் காணோம்
வான் நிறமிழந்து கரும்போர்வையுடன்!
நீலமெங்கே தேடினேன் அதுபுயலாய்..
ஆர்ப்பரித்தன ஆழ்கடலும் அலையாடி
வானுயர்ந்தன அலைகளும் கர்ச்சித்தே!

திசையின்றி சுழன்றாடும் சூறைக்காற்று
இசையின்றி பேரிரைச்சல் தாண்டவமாய்!
அசையாத அடையாறு ஆலமரமுமிங்கே
அசைந்தே சாய்கிறது விழுதுகளும்சேர்ந்தே!
திருக்களின் மடிமீது மழைநீரின் பெருமச்சம்
திருவானமியூர் மீளுமா மனதிலோரச்சம்!

வரப்பென்றே வரைந்த மணல்தடுப்பைத்தாண்டி
தலை மிதித்தே ஏறிவரும் உப்புநீரில் துடித்தே
வீட்டில்விழும் மீன்களே காட்சிப்பொருளாய்
பாய்சுருட்ட நேரமின்றி உயிர்க்காய் ஓட்டம்!

நீண்ட சமவெளி மெரினா கடற்கரைதனிலே
ஏழாம் எச்சரிக்கை புயல் கரைகடக்குதென்றே!
மாண்டார் எத்தனையதில் மீண்டாரெத்தனை
ஊடகங்களின் உறுதியிலாதகவல் பயமுறுத்தல்!

நேற்றைய தாணேபுயல் இன்று நினைவிலில்லை
இன்றைய நீலப்புயலும் வந்துதனவழி போகும்
நடந்தவைகள் நினைவாகும் நடப்பதுமப்படியே
நாளையிருப்போர் மீண்டும் இயந்திரமாய்!

அமெரிக்கா வல்லரசு இயற்கையின்முன் கதியிதுவே
அனைவர்க்குமிது பொது-அழிவும் வாழ்வும்!

Sunday 28 October 2012

துளித் துளியாய் - 3


பட்டாம் பூச்சி
பிடிக்கத்துடிக்கும் மழலையாய்
உன் பார்வைக்கு முன்பு
நிற்க முயன்று தோற்றுக்கொண்டிருக்கிறேன்.

நீண்ட காத்திருப்பில்
கொஞ்சம் கொஞ்சமாக
கொஞ்சல் தேய்ந்து
கோபமாகிக் கொண்டிருக்கிறது.

அணைக்கப்பட்ட
மின்விசிறியின் அசைவாய்
மிதமாய்த்தான் உழுதுகொண்டிருக்கிறாய்
என்னுள்ளும்.


கனவுகளை அனுப்புங்கள்
 இமைக் கதவுகளை
திறந்து வைக்கிறேன்.

 சிந்தையிலிருந்து சிதறிவிழுந்த
தூறலது தமிழ்த்தூறலது
தமிழ்க் கவியானதோ?


உன் பார்வைக்கு முன்பு
நான் கொலு வைத்த
பொம்மையாகிறேன்
கொலு பொம்மையெல்லாம்
 நாட்டிய மாட
கொலுசு கேட்கின்றன.

Friday 26 October 2012

இலவசத்தின் இழி நிலை !


அடுப்பெரிய நாதியில்லை நோய்க்கு எங்கேயோட
அரசுமருந்தகத்தில் மருந்துமில்லை மருத்துவரும்தான்
அதிகாலை வேளையிலே அடுக்கடுக்காய் அவலங்கள்
அதிலும் பத்துரூபாய்க்கு வரிசையில் முன்னுரிமை!

ஆடும்தொட்டில்களதில் குடியிருக்கும் மூட்டைப்பூச்சி
ஆண்டவனே வந்தாலும் கடுகடுவென செவிலியர்
ஆகாயத்திலிருந்து குதிப்பதுபோல் மருத்துவர்வருகை
ஆவலோடு வலிதீர காத்துக்கிடக்கும் ஏழைபாழை!

இறந்தவரை பன்றியென தூக்கிச்செல்ல பிணவூர்தி
இமைமூடி நிம்மதியாய்த் தூங்கவோர் காவலாளி
இயந்திரமாய் மாறிப்போன இதயமணிந்தேயவர்
இரக்கத்தைக்கொன்றுவிட்டு கடமைப்போர்வை!

ஈனங்களும் ஊனங்களும் பாலைமான் நீர்தேடலாய்
ஈடில்லா உயிர் காப்பாரோ பணமொன்றே நோக்கமாய்
ஈக்களின் புகலிடமாய் பொதுமருத்துவமனையிருக்க
ஈன்றவர்போல் கண்காணிப்பு தனியாரின் தயவாக!

உழைக்காமலூதியம் பொதுமக்கள் பணத்தினிலே
உறவாய்த்துடித்து பொய்யெழுதி கோடிகளாய்
உண்மை அழுகிறது சுரண்டலினாலானவலி
உருப்படியின்றி உரிமை கொடிதிலுங்கொடிது!

ஊழியமே மருத்துவம் உறுதிமொழியெங்கே
ஊருக்காயுழைப்பு சுயவிளம்பராய் மட்டும்
ஊஞ்சலாடும் உயிர்வைத்து வியாபாரமெனில்
ஊமையாய்ப் பார்த்திருத்தல் நல்நீதியில்லை!

Thursday 25 October 2012

ஜாதிகள் இல்லையடி பாப்பா !



விதைப்பவனிங்கே கீழ்ஜாதியதை
உண்பவர் புவியில் மேலோராய்!

தட்டான் வேண்டும் தாலிதட்ட
தரையில் அவருக்கிருக்கை நீதி!

கைராசிக் காரனெனில் போட்டி
பணம் கொடுத்து உயிர்காக்க!

தன் வாழ்வுக்காய் போராடும்
ஜோதிடன் சொல்வது வேதம்!

நோய்வாய்ப்பட்ட கைகொடுப்பின்
காணிக்கை பணத்தில் தீதில்லை!

பூஜாரியுடுத்துமாடை நெய்தவனார்
கேள்வி கேட்டா உடுத்துகிறார்?

நெய்தவன் நேரில்வந்தால் விபூதி
கொடுக்கையில் கைபடினது தீட்டு!

ஜாதிகளில்லையடி சொன்னபாரதி
இன்றிருப்பினவனும் தீட்டென்பார்!

உடலழுக்கில் பழுதில்லையது உழைப்பு
உள்ளம் பழுதுபடின் சிறப்பில்லையதுதீமை!

ஆலாய்வாழ்ந்து விழுதேநாம் என்றெண்ணின்
ஜாதியுமில்லை மதமுமில்லை மனிதரிடை
உயர்வு தாழ்வென்றபொய் பேதமுமில்லை!

Wednesday 24 October 2012

எங்கெங்கு காணினும் !


எங்கெங்கு காணினும்
கல்விக் கூடமடா
மேதினியெங்குமே
 தரமிகுகல்வியில்லையடா!

இலவசமாயின் வாலாய் நீளும்
கூட்டமிங்கே பெருகுதடா
கல்வி இலவசமாயினும்
கற்க மனம் இல்லையடா!

கண்ணிருந்தும் அறிவின்றி
குருடர் ஆனோமடா
பெருமையென்றே கல்விக்கும்
 காசுகொடுக்கத் துணிந்தோமடா!

அம்மாவெனும் அழகுத்தமிழையும்
மம்மிடாடி என்றழைத்தே
மண்ணில் புதைத்தோமடா!

தாய்மொழியைத் தள்ளிவைத்தே
தறிகெட்டு அலைந்தோமடா
எம்முயிரே எம்தமிழே
எம்பிழையை பொறுப்பாயோ ?
எம்குலம் தழைத்திடவே
எம்முடனே இருப்பீரோ!

Tuesday 23 October 2012

அன்புக்கும் பூஜை !


அன்பும் உறவென்ற ஆயுதமணிதல்போல்
ஆண்டவன் படைப்பில் ஆயுதம் உறவுகளாய்
இரும்பு வெள்ளித் தங்கமென உலோகங்கள்
உருக்கியெடுத்தே வாழ்வில் ஓட்டங்கள்!

ஊர்வலம்போக நம்மூர்சாமிக்கும் காவலாய்
ஏர்மாட்டின் கழுத்தில் ஆழஉழும் ஏர்சுமையாய்
ஐயங்கள் வாழுமிடம் கொலைக் கருவிகளாய்
ஒருமைப்பாட்டு கீதத்தில் ஆலை இயந்திரமாய்!

ஓலையது செதுக்கின் தூசியோட்டும் துடப்பம்
ஔவைத் தமிழில் காப்பானுங்கெடுப்பானும்
அஃதொன்றும் பெரிதில்லை இன்னுமுண்டு
கடைக்கண் பார்வையும் ஆயுதமாவதுண்டு!

அரங்கேறும் பூஜைகளாயிரமாயிரமுண்டு
அதுபாடும் பண்பாடு படும்பாடுசொலில்
முரண்பாடாய் கருத்துரைத்தாயென்பார்
ஆனாலும் சொன்னேன் என்கருத்தை!

வெள்ளைச் சுவரினிலேயோர் கரும்புள்ளி
அதைமட்டும் பார்க்காதே என்பவரே நம்
முன்னோர் மூடரல்ல இதயமுள்ளவரவரே
முதற்கனி கடவுளுக்கு ஏன்சொன்னார்?

பூஜைகள் முடிந்தவுடன் அதையெடுத்தே
ஏழைக்குத் தானமென அள்ளிக்கொடுப்பார்
காக்கையும் காத்திருக்கும் அதைக்கூடியுண்ண
எங்கேநாம் நிற்கின்றோம் எண்ணியதுண்டா?

மெழுகாலே பழங்கள்செய்து படைக்கின்றோம்
அடுத்தமுறையதைவைக்க கழுவிவைப்போம்
ஆயுதங்களே பரவாயில்லை நினைக்கின்றேன்
நாம்வாழ அதுதேய்ந்து மாள்கிறதேஆதனில்!

ஆயுதமாயிருக்கும் எண்ணம் களைந்து
அன்பேந்தி ஆயுதபூஜை செய்வோம்
ஆயுதமாயல்ல இதயமுள்ள மனிதராய்
புகழுக்காயுமல்ல தர்ம புண்ணியமென்றே!!

Sunday 21 October 2012

மாறுதுமனம் அழிவையணிந்தே !



சுத்தமான மென்காற்று
பளிச்செனப் பட்டாடை
பளிங்குக்கல்லால்ஆன தரை
பல் தேய்க்கவும் பன்னீர்
அறுசுவையாய் உணவு
தேவலோகக் கனவுவாழ்வு!

எண்ணத்தின்தேடலென்றும்
 ஏணிப்படிகளை மட்டுமே
நம்மால் முடியுமென்றெண்ணி
அதனை உருவாக்கும் திறனை
வளர்த்திட நாம் மறுக்கிறோம்.

ஒரு சிறு உயிரணுவும்
உருவாக்கும் சக்தியில்லை
கல் சுமந்துழைக்கும்ஏழை
உழைப்பாளியினுழைப்பை
விலை பேசி நிற்கிறோம்!

உணவே நஞசான போதும்
உழுதுழைக்கும் நிலத்தினை
உரிமையாக்க துடிக்கிறோம்.
அதில்மாடிகளாய் கல்லறைகள்!

சேற்றை மிதிக்கும்நம்கால்
காக்கசெருப்பைச் செய்தவனின்
சேம நலம் எண்ணத்திலில்லை!

எதனையும் விலை கொடுத்து
வாங்கி உழைப்பை விட்டு..
இன்று உழைக்கும் வர்க்கமும்
எந்திரமாகவேத் தெரிகிறதோ ?

மாறுதுமனம் அழிவையணிந்தே
தேடுதுதினம் அன்பை மறந்தே
ஓடுதுகால்கள் தீமையணிந்தே
திரும்புமாகாலம் நன்மைநாடி?

Thursday 18 October 2012

டவுட் சுந்தரியும் அலமுவும் !


அலமு : சசி என்னடிம்மா நேத்து அதிசயமா நீயும் உன் புருசனுமா சேர்ந்து சிரிப்பு சத்தம் கேட்டுதே.

சசி : ஆமா மாமி நேத்து மஞ்சு பாஷினி அக்கா பேசினாங்க மாமி. அவங்களுக்கு புலவர் ஐயா பதிவில் கருத்து போட முடியவில்லையாம்.

என்னனு கேட்டுட்டு இருந்தாங்க அப்படி ஆரம்பித்தது கலாட்டா.

அலமு : யாரு நல்லா பாடுவாங்கனு சொல்லியிருக்கியே அவங்களா ?

சசி : ஆமா ஆமா மாமி இனிமையான குரலாலே எனை கவர்ந்த அக்கா தான்.

அலமு : அப்படி என்ன தான் சொன்னாங்க நீங்க சிரிக்கிற அளவுக்கு.

சசி : ஐயாவின் ஐடி கொடுத்தேன் பிறகு நம்பரும் கொடுத்து பேசுங்க அக்கா என்றேன். இரு சசி இப்பவே பேசலாம் என்று எனக்கு கேட்கும் படியாக இருவரும் பேசினாங்க ஆனால் என் குரலை அவர்களால் கேட்க முடியாது.

அலமு : அப்படின்னா நீ ஒட்டு கேட்ட அப்படி சொல்லு.

சசி : மாமி இப்படி சொன்னா எனக்கு கெட்ட கெட்ட கோபமா வரும் நான் சொல்ல மாட்டேன் போங்க.  அக்காவே இரு சசி பேசலாம்ன சொல்லவே தான் இருந்தேன்.

அலமு : சரிடிம்மா ஏன் இப்படி கோபம் வருது சும்மா தான்டிமா சொன்னேன்.

சசி :  சரி சரி புலவர் ஐயா போன் எடுத்தாங்களா.  அக்கா ஐயா நான் மஞ்சு பேசுறேன். உங்க கீழ் வீட்ல குடித்தனம் இருந்தேனே அந்த மஞ்சு எப்படி இருக்கிங்க இப்படி ஆரம்பிச்சாங்களா .

அலமு : அப்படியா அவங்க வெளி நாட்ல இருப்பதா சொன்னியேடிம்மா.

சசி : ஆமா மாமி நானும் உண்மையாவே அவங்க புலவர் ஐயா வீட்ல தான் முன்னாடி இருந்தாங்களோனு நினைச்சேன். பிறகு தான் தெரிந்தது எல்லாம் கலாப்புனு.

அலமு : அடடே அவங்க பெரிய ஆள் தான் போல சொல்லு சொல்லு ஏன்டிம்மா புலவர் ஐயாவுக்கு 80 வயதுன்னு சொன்னியே இப்படியா கலாப்பிங்க 2 பேரும் . வேற யாரும் கிடைக்கலியாடி உங்களுக்கு .

சசி : மாமி ஏன் அவசரம் அடுத்து ஒருத்தரும் நேத்து மாட்டினாங்க.இருங்க  சொல்றேன்.

அலமு : அதானா நேத்து பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய முறைச்சி பாக்குற மாதிரி குடும்பமே கம்பூட்டர் முன்னாடி உக்கார்ந்துண்டு கெக்ககேன்னு சிரிச்சிட்டு இருந்திங்க.

சசி : ஆமா மாமி புலவர் ஐயா யாரும்மா எனக்கு நினைவில்லையேனு சொன்னாங்களா ?  உடனே அக்கா சரிங்க ஐயா உங்க வீட்டுக்கு இரவு சாப்பாட்டுக்கு வரேன்னு சொன்னாங்க . ஐயா யாரும்மா தெரியலையேனு சொன்னாங்க. அக்கா பிறகு தான் மஞ்சுபாஷினினு சொன்னாங்க ஐயா உடனே அப்படியாம்மான சிரிச்சாங்க .  எங்கம்மா இருக்க இப்படி நார்மல் உரையாடல் தொடர்ந்தது மாமி. அக்கா பதிவில் மட்டுமில்லை போன்லயும் விரிவா விளக்கமா எல்லாம் விசாரிச்சி பதிவர் சந்திப்பு உட்பட ஐயாவின் பேரக்குழந்தைகள் மகள்கள் இப்படி எல்லாரை பற்றியும் பேசி பிறகு ஐயாவுக்கு பிறந்த நாள் வாழ்த்தும் சொல்லிட்டு வச்சாங்க. ஐயாவின் பதிவர் சந்திப்பு பற்றிய உரை நெகிழ வைத்தது . உண்ணும் உணவோ மருந்து மாயமோ எதுவுமே என்னை உற்சாகமா வாழ வைக்கள பதிவுலக நண்பர்களின் அன்பும் பாசமும் தான்னு சொன்னதும் நெகிழ்ந்து போனோம்.

அலமு :  ஆமா சொல்லி இருக்க இல்ல அவங்க எந்த பதிவுக்கும் இரண்டு வரில கருத்து சொன்னதில்லைனு .

சசி : ஆமா மாமி அதோட விடல அவங்க. சசி அடுத்து ராஜியோட பேசலாமானு கேட்டாங்களா சரிக்கானு சொன்னேன்.

அலமு : போச்சி அவங்களையும் விடலியா நீங்க. ஆமா அவங்க உங்களுக்கு மேல கிண்டல் பேர்வழியாச்சே.

சசி : அதான் மாமி இல்ல அக்காவை யாரால ஜெயிக்க முடியும் அவங்களையும் கவுத்துட்டோம்ல.

அலமு : அப்படியா ?

சசி : ஆமா மாமி ராஜி அக்கா நம்பர்க்கு டயல் பண்ணாங்களா  அவங்களும் எடுத்து ஹலோனு சொன்னாங்க உடனே அக்கா நாங்க சன் டிவில இருந்து பேசுறோம் உங்களுக்கு பிடிச்ச பாட்டு சொல்லுங்கனு சொன்னாங்க அவ்ளோதான் அந்த பக்கம் கட் ஆகிப்போச்சி மாமி.

அலமு : இவ்ளோ பயந்தாங்கோலியாடி அவங்க ?

சசி : ஆமா மாமி அதான் எங்க வீட்ல எல்லாம் ஒரே சிரிப்பு. மறுபடி அக்கா விடல நம்பர் போட்டாங்க அவங்களும் எடுத்தாங்க என்ன ராஜி இப்படி கட் பண்ணிட்டிங்கனு சாதாரணமா பேசினாங்களா. பிறகு ராஜி அக்கா நீங்க யாருங்க என்று கேட்டாங்க. மஞ்சு அக்கா பதிவர் சந்திப்புல ஊதா கலர்ல புடவை கட்டிட்டு ரோட்லயே ஐஸ் சாப்டது யாரும்மானு கேட்டாங்களா . ராஜி அக்கா யாரோ தெரியள நீங்க யாரு சொல்லுங்க உங்களுக்கு என் நம்பர் யார் கொடுத்தது சொல்லுங்க நாளைக்கு இருக்குது அவங்களுக்குனு சத்தமா பேசினாங்களா.


மஞ்சு அக்கா விடாம ராஜி உன்னோட பதிவர் சந்திப்பு பதிவு போட்டியே அத படிச்சிட்டு முருகனும் ஔவைபாட்டியும் இருந்திருந்தா அம்மாடி எங்கள விட்டுடிம்மானு அழுதிருப்பாங்கனு சொல்ல ஒரே சிரிப்பு.

ராஜி அக்கா மயங்கவேயில்ல கணேஷ் அண்ணா கொடுத்தாங்களானு கேட்டாங்க. மஞ்சு அக்கா அவர் இல்ல பா அவரும் பதிவர் சந்திப்ப பற்றி சொல்லும் போது எனக்கு மிஸ் பண்ணிட்டோமேனு இருந்ததுனு சொன்னாங்க.
டவுட் சுந்தரி அவரில்ல. ஆமா வா போனு சொல்றேனா தப்பிலையேனு கேட்க அவங்க எப்படிவேனா சொல்லுங்க சொல்ல அக்கா எப்படி பீட்ரூட் கேரட் அப்படி அழைக்காவானு கேட்க  என் பசங்களுக்கும் சிரிப்பு.


ஆமா ராஜி மதுமதிய ஓவரா கிண்டல் பண்ணி எழுதியிருந்த அதுவும் நல்லாயிருந்தது சொல்லவும் ராஜி அக்கா மதுமதி கொடுத்தாங்களானு கேட்டாங்க. மஞ்சு அக்கா இல்லம்மானு சொல்ல ஏன் ராஜி அதோட விட்டியா என் தம்பி மகேந்திரனையும் விஜயகாநத் மாதிரி வந்தாருன்னு கலாச்சிட்டியே நல்ல எழுத்து நடம்மானு சொன்னதும் ராஜி அக்கா மஞ்சு பாஹினி அக்காவானு அப்புறம் நார்மல் பேச்சு ஆரம்பிச்சது. மஞ்சு அக்கா பேசிட்டே இருக்கும் போதே லைட் போட மறந்துட்டேன் வைச்சிடவா கேட்டாங்க. ராஜி அக்கா மண்டைல லைட் பிரைட்டா இருந்தாலும் இப்படியா வீட்ல லைட் போடாம இருப்பிங்கனு ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு சிரிச்சி சிரிச்சி வயிறு வலியே வந்துடுச்சி.


அலமு :  நல்லா தான் கலாய்ச்சியிருக்கிங்க அதான் நேத்தெல்லாம் ஒரே சிரிப்பு மயமா இருந்ததா?

ஆமா மாமி ஐயாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லிட்டு என்றென்றும் ஐயாவின் ஆசி கிடைக்க வேண்டுமுனு ஆசிர்வாதம் வாங்கனும் வாங்க வாங்க போகலாம்.

Tuesday 16 October 2012

அகிலத்தின் தேடல் !


அன்பொன்றையே முன்வைத்து
அகிலத்தின் தேடலென்றால்

அரசாட்சியும் வாழ்ந்திருக்கும்
மக்களாட்சியும் நிலைத்திருக்கும்

நாற்காலிக்கு உயிர் கொடுத்து
நன்றியை நஞ்சென்று கொள்கின்றார்

நாமெனும் நிலை மாறியிங்கே
நானெனும் அகந்தை வாழ்கிறது

இம்சிக்கத் துணிந்துவிட்டதால்
இயற்கையும் மிஞ்சுவதில்லை

இருளாளும் காலமிது துணை
தீமையேயோடி வருகிறது

சுயநலத்தின் மறுவுருவாய்
சுரண்டல்களே கனவுகளாய்

லஞ்சமதை நியாயப்படுத்துகிறோம்
நம்பங்கெது எண்ணுகிறோம்

வஞ்சங்கள் நெஞ்சிலணிந்தோம்
பணமொன்றே வாழ்வென்றோம்

பெண்ணுக்குமிங்கே விலைதான்
மண்ணுக்குமிங்கே கொலைதான்

உயிருக்கு விலையில்லை பலர்
வீதிவாழ் சொறிநாய்களாய்

குப்பையிலேக் குழந்தைகள்
கோபுரத்தின் களவுகளாய்

பாதையெலாம் குப்பைகள்
பரவுதிங்கே தொற்றுநோய்

ஆள்வாரும் சரியில்லையிங்கே
ஆக்குவாரிலும் நேர்மையில்லை

அறிக்கைப்போர் நடக்கிறது
மாறிமாறி சேரிறைத்து

ஜனங்களெங்கேத் தேடுகிறேன்
விசிலடிக்கப் போனார்களாம்!

Monday 15 October 2012

இருவரியில் ஒரு தேடல் !


காலமுனை வெல்லு முன் நற்செயலால்
காலத்தை நீ வெல்!

கற்றாழைக்கும் வாசமுண் டென்றறி யுனது
பிணி நீக்கும் மருந்தாகும்!

நாளை நமதில்லை யெதுசெய்வ தாயினும்
இன்றே நம்பிச் செய்!

முடியா தென்று நினைப்பர்தம் வாழ்வில்
முடிவ தெலாம் கனவுகளாய்!

முன்னுரை யெழுதுமுன் முடிவுரை எழுதுவான்
முகவுரைக் காண்ப தில்லை!

கேடில்லா நெஞ்சம் கொண்டோ ரென்றும்
கேள்வியாய் நிற்ப தில்லை!

கொதிக்கு மெண்ணையில் கைவிட்டாற் போல்
அழவைக்கு மன்பின் பிரிவும்!

போனதெல்லா மென்று இருப்பதையு மிழப்பின்
காலத்தின் கைதி யாவோம்!

Sunday 14 October 2012

துளித் துளியாய் -2



உன்னிடம் கோபிப்பதாய்
நடிக்கக்கூட
எத்தனை ஒத்திகை
தேவைப்படுகிறது.


விடுவிப்பதாய்  நினைத்து
விரட்டிப்பிடித்ததில்
விம்மிக்கொண்டிருக்கிறது
பட்டாம்பூச்சி.


ஒதுங்கி நின்றாலும்
உரசி சிரிக்கிறது
சாரல்.


எல்லாமே நன்றாய்
நடந்து கொண்டிருக்கும் போது
நான் மட்டும் ஏன்
இறகில்லாமலும் பறந்து கொண்டிருக்கிறேன்.


எனக்கு பிடித்ததெல்லாம்
உனக்கு பிடிக்காமலும்
உனக்கு பிடிக்காததும்
எனக்கு பிடித்துப் போக
என்னை மட்டும் உனக்கு
பிடித்திருப்பதாகவே...
நினைத்துக்கொள்கிறேன்
நம்பிக்கை தான் வாழ்க்கையாம்.


 தவிர்ப்பதற்காக
நீ தவிப்பதையே
தாங்க முடியாதவள் நான்.

Thursday 11 October 2012

காதல் !



மழை கொடுக்கும் மேகத்திலும்
மறைந்தோடும் விண்மீனிலும்
மணம் தேடி வரும் வண்டிலும்
வண்ணமணிந்த அந்தி வானிலும்
வரிசை மாறா தென்னங்கீற்றிலும்
வாசலில் சிரிக்கும் கோலத்திலும்
தாய் நோக்கும் கன்றுக்குட்டியிலும்
கொட்டுகின்ற மலைஅருவியிலும்
கொட்டினும் கூடிவாழும் தேனீயிலும்
தேன் சுமந்து தானுதிரும் மலரிலும்
தேனினும் இனிய மழலையிலும்
உப்பாய் மாறிய அலைகடலிலும்
உதிரம் கொடுத்த உயிர்த்தாயிலும்
தரணியாளும் தங்கத் தமிழிலும்
மயக்கிச் சிரிக்கும் ஓவியத்திலும்
துள்ளியோடும் புள்ளிமானிலும்
தூரத்து ஒளியாம் பசுமையிலும்
சுட்டெரிக்கும் மாயசூரியனிலும்
பட்டுத்தும் பண் பாவையிலும்
வானோடும் வண்ண நிலவிலும்
மண்ணோடும் அழகு ஆற்றிலும்
மனமோடும் எண்ணப் பாட்டிலும்
மலையாடும் மேகக் கூட்டிலும்
மரமாடும் தென்றல் காற்றிலும்
எங்கும் காதல் எதிலும் காதல்
எல்லாமே காதலாய் !

Wednesday 10 October 2012

துளித் துளியாய்...!

                                                 
                                              கொஞ்சல் பேச்சில்
                                              கெஞ்சலில் நிற்கும்
                                               வெட்கம்.
                                                


குளிரெடுத்தும்
சிலிர்க்காத உடம்பு
உன் குரல் கேட்டு
சிலிர்க்கிறதே

பேனா எழுதும் 
வார்த்தைகளை கூட
பேதை என்னால்
பேச முடிவதில்லை.


எல்லாக் கனவுமே
நிறைவேறியதாய் 
நினைவேயில்லைதான்
உன்னை பார்க்கும் போதும்.

கண்ணாடி முன்பு
நின்று விடாதே
காட்டிக்கொடுத்துவிடும்
உன்னில் எனை.
--திரைச்சீலை கூட
தினுசு தினுசாய் உடுத்துகிறது
எனை மட்டும் ஏன்
வெட்க ஆடை மட்டுமே
உடுத்தச்செய்கிறாய்.