மலர் கொடியொன்று அசைந்து வந்து
பட்டு ரோசா முகம் கொண்டு
துளிர் பூங்கரம் கொண்டு
துணிவுடனே கன்னம் வருடி
எச்சிலால் முகம் தீண்டி
எண்ணங்களை கவர்ந்து நிற்க..
துணிவுடனே கன்னம் வருடி
எச்சிலால் முகம் தீண்டி
எண்ணங்களை கவர்ந்து நிற்க..
நடையழகு நாட்டியமே
கண்ணசைவில் ஒரு காவியமே
சொல்லொன்றை உதிர்த்திடவோ
பிறந்திடுமே எண்ணிலா அதிசயங்கள்...
கண்ணசைவில் ஒரு காவியமே
சொல்லொன்றை உதிர்த்திடவோ
பிறந்திடுமே எண்ணிலா அதிசயங்கள்...
அவன் சிரிப்பை ரசித்திடவே
ஆயுள் முழுதும் கரைந்திடுமே
அவன் அழகை அள்ளிபருகிடவே
கண்ணிரண்டும் போதாதே...
ஆயுள் முழுதும் கரைந்திடுமே
அவன் அழகை அள்ளிபருகிடவே
கண்ணிரண்டும் போதாதே...
அந்தோ என் செய்வேன்
அவன் அசைவுகளை
பதிவு செய்ய என்னில்
உடற் கருவி ஏதுமில்லையே.
கனவிலவன் நிஜமாய்
நினைவிலவன் கனவாய்
நிஜமது பொய்யோ?
கனவதுதான் நிஜமோ?
அவன் அசைவுகளை
பதிவு செய்ய என்னில்
உடற் கருவி ஏதுமில்லையே.
கனவிலவன் நிஜமாய்
நினைவிலவன் கனவாய்
நிஜமது பொய்யோ?
கனவதுதான் நிஜமோ?