ஞாயிறு ஒளியாய் வந்து நிற்கும்
திங்கள் மான்போல் பார்த்திருக்கும்
செவ்வாய் மயிலாய் ஆடிப்போகும்
புதன் புண்ணியர் வாழ்த்துரைக்கும்
வியாழன் இசையைச் கொண்டுவரும்
வெள்ளி முளைத்து சிரித்து மகிழ்கைியில்
சனி மட்டும் கோபம் கொண்டதனால்
பிரிவெழுதி மீண்டும் ஞாயிறு வரை....
காதல் காத்திருந்து வாடி பார்த்திருந்ததால்
விதி என்வழி என்றுரைக்கும்
நவகிரகமும் சுற்றுகின்ற புள்ளி
'காதல்' பொய்யில்லை.
அள்ளி அணைக்கப்போகையிலே
மேகம் போய் அணைக்கிறது
துள்ளிப்பிடிக்க நினைக்கையிலே
நீலவானம் தடுக்கிறது
நீர்துளியாய் வீழ்ந்து பார்த்தால்
பூமி உண்டுவாழ்கிறது
வாழாகாதல் உன்காதல்
சொல்கின்றார் பாரினிலே
காதல் வாழும் உலகம் உள்ளவரை!