Monday 10 February 2014

காவியம் நீ...!

 
கண்கள் கண்டெடுத்த
காவியம் நீ...
கடிதம் ஒன்றை
எழுதிடத்தான்...
எத்தனை எத்தனை
வார்த்தைகளை புரட்டியபடி..

என்னென்று அழைத்திட
அன்பே...
அது தான் நிறைய இருக்கிறதே.
ஆருயிரே...
அது தான் உனக்காக
என் உயிர் இருக்கிறதே.
அத்தானே..
யாரேனும் என்ன
நீயே சிரித்திடுவாய்..
என்னென்று எழுதிட
எல்லாமுமே நீயானபிறகு..
உனை காணும் போதில்
விழிகள் பேசிடும்
வார்த்தைகளை விடவா
இந்த விரல்கள் பேசிவிடப்போகிறது.


என்ன இப்ப இப்படி ஒரு கவிதையென கேட்பது கேட்கிறது. முகநூலில் கவிதை சங்கமம் என்ற குழுமத்திற்காக எழுதியது.

Wednesday 5 February 2014

வந்தெனைக் காத்துவிடு !


உனக்கென ஒதுக்கிய
நேரமிது நேர்த்தியாய்
கனவுகளை நெய்தபடி...
நிறங்களை கோர்த்தெடுத்து
நிமிடச் சாயத்தில்
நனைந்தபடி...
நாளொன்றிற்கு
இத்தனை நாழிகையா ?
கணக்கெடுத்துக்கொண்டிருக்கிறது.
சீக்கிரமே
கடந்து வா...
கடமையில் இருந்து..
கடத்திப்போ..
எனை தமிழ்க் காதலிடமிருந்து.