தேடுவதுதென்னவோ அன்பைத்தான்
மனம் நாடுவதென்னவோ நட்பைத்தான்
தேன் கூட்டைக் காத்திடும் குளவியும்
மனிதனுக்குத் தேளாய் தெரியும்.
மாணிக்கத்தை காத்து நிற்கும்
பாம்பும் விஷமாய் மட்டுமே
விறகென நினைக்கும் மரக்கிளையும்
வலி கொடுக்கும் முள்ளாய்
தாகம் தீர்க்கும் நீரும்
தம்மை அழிக்கும் அலையாய்
மோகனமாய் தீண்டும் தென்றலும்
மோதியழிக்கும் புயலாய்
காத்து நிற்கும் வான்கொடையும்
கருகியழிக்கும் இடியாய் மின்னலாய்
இயற்கையின் படைப்பில் இரண்டுமிருக்கும்
இதில் நன்மையெது தீமையெது ?