ஏன்டி .....துலுக்காணம்
நான் போனேன் மரக்காணம்
என் வூட்டு மலைச்சிருக்கி
உலுக்காத மரம் உலுக்கி
வாங்கி வந்தா சீர்சனத்தி....
ஆத்துப்பக்கம் போகவேணாம்
அதுவாவே தொவச்செடுக்கும்
அழகான செவுர் ஒடச்சி
அதுக்கு வச்சா ஒரு பைப்பு....
கொளத்து மீன புடிச்சி வந்து
கொழம்பு வைக்க அம்மி வேணாம்
அரைச்செடுக்க மிசினிருக்காம்
அதுக்கு நாலு கிண்ணமிருக்காம்...
பச்ச மிளகாய் கடிச்சி தின்ன
பழங்கஞ்சி அலுத்திருச்சாம்
இட்லி தோசை இடியாப்பம்
அர அடுக்கு கிண்ணத்தில
குருக்கும் நெடுக்கும் கல்லுரெண்டு
ஓடி ஓடி மாவரைக்க
அதுவா கவுத்து அரைக்குமாமே
அனியாயத்த கேளு புள்ள...
தண்ணி இரைக்க கிணறுமில்ல
தாகம் தீர்க்க இளனியில்ல
இளைப்பாற நிழலுமில்ல
என்னா பொழப்பு சொல்லு புள்ள...
ஆடு மாடா சுத்தி புட்டு
நடு நிசி ஊடு வந்து
உறங்கி யெழுந்து போறா அவளும்
விருந்தாளி முகமும் பார்க்கவில்லை
அவளுக்கு.....
புருசன் முகமாவது நினைவிருக்குமா ?
சொல்லு புள்ள....
குனிந்து நிமிர்ந்து வேலசெஞ்சி
குழாய் தண்ணி எடுத்து வந்து
குழம்பு சோறு ஆக்கி வச்சி
கண்டாங்கி சேல கட்டி
கட்டு சோறு கட்டிகிட்டு
கழனி பக்கம் நாம போன
கதைய சொல்ல அவளுமில்ல
காற்றும் வீசவில்ல
என் கொரைய எங்க சொல்ல....
கேக்க கொக்குமட்டும்
உச்சிவெயிலில் ஒத்தக்காலில்
என்னப்போல அதுவுமிங்கே!