ஊர் கூடும் சந்தையில
ஒரு பார்வ பார்த்திடவே
ஒருத்தியிங்கே காத்திருக்கேன்
ஒரு முகமா பார்த்தாலென்ன ?
தினுசாத்தான் பார்வ பார்த்து
திசைக்கொரு ஜாட காட்டி
திரும்பாம போறவரே..
திரும்பி நீயும் பார்த்தாலென்ன ?
தித்திப்பா சிரிச்சாலென்ன ?
கனங்காம்பரம் பூச்சூட்டி
காலையில காத்திருக்கேன்
மல்லிகைப்பூ சரம் தொடுத்து
மாலை வர காத்திருந்தேன்
மனம் போற திசை நீயும்
வாராம போவதென்ன ?
வாடிக்கையா கண்ணாமூச்சி
ஆட்டமாடும் பழக்கமென்ன ?
வருஷமுந்தான் ஓடிப்போச்சி
வக்கனையா பேச்சுமில்ல
வெசரசாத்தான் வாருமைய்யா
வரிசையோட காத்திருக்கேன்.