Friday 16 December 2011

பெண்களின் அவலங்கள்

சாம்பிராணி வாசனை
மணக்க மணக்க ..
சுத்தமான மாட்டுதொழுவத்தில் ..
நிகழ்கிறது எங்கள் பசுவின் பிரசவம் ...
எங்களுக்கோ இங்கு ..
சுத்தமில்லா கழிவறை ,
முகம் சுளிக்க வைக்கும் துர்நாற்றம் ..
உக்கார கூசும் இருக்கைகள் ..
இரத்த பிசு பிசுப்போடு இருக்கும் மெத்தைகள் ...
நீண்ட தொரு வராண்டாவில் ...
நிகழும் தலைபிரசவங்பிறந்த குழந்தைன் ...
அழுகுரலையும் கேட்கவியலா ...
பெண்ணின் அலறல்கள் ...
ஒண்டிக்குடிதனத்தில் ...
இருபது போல ஒருவருக்கொருவர் ...
பார்த்துகொள்ளும் படியாக ..
ஒரு பெண்ணின் கருசிதைவை ...
பார்த்தபடி நிகழும் ...
மறுபெண்ணின் தலைபிரசவம் ...
அவரைக்காய் இன் உள்ளிருக்கும் ...
புழுவையும் காண சகியாத நாங்கள் ...
தாய்சேய் நல பிரிவில் இருக்கும்
நாட்களில் அனுபவிக்கும் ...
அவலங்களுக்கு ...என்றுதான் விடிவு கிடைக்குமோ ?


No comments:

Post a Comment