அறிவுப் பெட்டகத்தை,அரங்கத்தில் பூட்டிவைத்து,
அழிவுக் கோலமெடுத்து,அவலங்கள் அரங்கேற்றி,
அன்பென்ற பெயராலே,அசிங்கத்தை புனிதமாக்கி,
அனைத்தும் சரியென்று,அவனியில் ஓர் பயணம்!
ஆதங்கம் சொல்லுகிறேன்,ஆடையிலா எண்ணம் வேண்டும்,
ஆருயிரில் ஓருயிர் நாம்,ஆகையினால் எழுதுகிறேன்,
ஆசை விதை விதைத்த,ஆண்டவன் யார் தேடுகிறேன்,
ஆலயமெனும் இதயமா?ஆலா;வேலா-சொல்லுங்கள்!
இயற்கை எழுதிய,இனிமைகள் நமதென்றோம்,
இன்னாவாய் வருகின்ற,இழப்பை உறவென்போம்,
இருப்பதெல்லாம் நமதென்ற,இறுமாப்பு மாழ்வதில்லை,
இயக்கத்தின் தோற்றத்தில்,இடமில்லை மானிடர்க்கு!
வேட்டையாட பயிற்றுவித்த,வேடன் யார் பார்க்கின்றேன்,
வேங்கையொன்று பிடிக்கின்ற,வேதனை -மான் வேட்டை.
தண்ணீரில் பாய்ந்தோடி,தன் உணவாய் மீன்பிடித்த- மீன்கொத்தி,
தன்வீட்டை மண்ணில் செய்த,தளர்வில்லா -வேட்டாளி.
வானவழிப் பறந்துசெல்ல,வழிகாட்டிய வல்லூறு,
அறமான வாழ்வுரைத்த,அழகான கவரிமான்,
அன்பின் முத்தங்களை,அணைத்துரைத்த குரங்கினம்,
ஆட்டக்கலை மொழிந்த,ஆடல் நாயகர் மயிலினம்!
கூடிவாழ்தல் நலமென்ற,யானைகளும் எருமைகளும்,
தந்திரங்கள் எதுவென்று,தரணி சொன்ன நரிக்குடும்பம்,
இசைப்பாட்டு நமக்களித்த,இன்னிசை கருங்குயில்,
பளபள பட்டாடையான,பட்டுப் பூச்சி வகையோடு!
விதையாய் மண் வீழ்ந்து,வாரிசாய் வாழ்வெழுதி,
பூவாகி;காயாகி;கனியாகி,வாரிசு கதையான தாவரங்கள்,
காதலே வாழ்வென்று,கவிபாடும்-கிளிக்கூட்டம்,
எதிலும் நமக்கு பங்கில்லை-என்றும் கடனாளிகளாய்!
ஐந்தறிவுக் கற்றுத்தந்த,ஏழாமறிவுப் பாடங்களை,
அபகரித்து பூட்டிவைத்து,ஏடுகளாய்ப் பாடுகிறோம்.
பாடினாலும் பரவாயில்லை,நமதென்ற உரிமைவேறு,
தேனீயும்;எறும்பினமும்-வைத்திருக்கும் சட்டமும் நமதென்று!
பாடங்கள் எல்லாமே,பாரினில் இருப்பவையே,
பயணத்தில் பார்வைகளை,சேமித்து வைத்திருந்தால்,
நாளைய வாழ்வுக்கு,வழிகாட்டி அவையாகும்,
அறிவியல்;புவியியல்,விஞ்ஞானம்;மெய்ஞானம் இதுவேதான்!
இருப்பதை நாம் ரசித்து,இனிமையாய் வாழ்வதுவும்,
கிடைத்தைப் பகிர்தளித்து,மனநிறைவு தேடுவதும்,
எண்ணாலும் எழுத்தாலும்,புன்னகையாய்ப் பூப்பதுமே,
பிறவி பயனாகும்,எதுவும் நமதில்லை-ரசித்து;ருசித்தல் தவிர!!
இன்று வலைச்சரத்தில் உலக அதிசயங்களைக் காண
இங்கே கிளிக் செய்து வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .