Friday 27 December 2013

வருஷமுந்தான் ஓடிப்போச்சி !


ஊர் கூடும் சந்தையில
ஒரு பார்வ பார்த்திடவே
ஒருத்தியிங்கே காத்திருக்கேன்
ஒரு முகமா பார்த்தாலென்ன ?

தினுசாத்தான் பார்வ பார்த்து
திசைக்கொரு ஜாட காட்டி
திரும்பாம போறவரே..
திரும்பி நீயும் பார்த்தாலென்ன ?
தித்திப்பா சிரிச்சாலென்ன ?

கனங்காம்பரம் பூச்சூட்டி
காலையில காத்திருக்கேன்
மல்லிகைப்பூ சரம் தொடுத்து
மாலை வர காத்திருந்தேன்
மனம் போற திசை நீயும்
வாராம போவதென்ன ?

வாடிக்கையா கண்ணாமூச்சி
ஆட்டமாடும் பழக்கமென்ன ?
வருஷமுந்தான் ஓடிப்போச்சி
வக்கனையா பேச்சுமில்ல
வெசரசாத்தான் வாருமைய்யா
வரிசையோட காத்திருக்கேன்.

Saturday 30 November 2013

நன்மையும் தீமையும் !


தேடுவதுதென்னவோ அன்பைத்தான்
மனம் நாடுவதென்னவோ நட்பைத்தான்
தேன் கூட்டைக் காத்திடும் குளவியும்
மனிதனுக்குத் தேளாய் தெரியும்.

மாணிக்கத்தை காத்து நிற்கும்
பாம்பும் விஷமாய் மட்டுமே 
விறகென நினைக்கும் மரக்கிளையும்
வலி கொடுக்கும் முள்ளாய்

தாகம் தீர்க்கும் நீரும்
தம்மை அழிக்கும் அலையாய்
மோகனமாய் தீண்டும் தென்றலும் 
மோதியழிக்கும் புயலாய்

காத்து நிற்கும் வான்கொடையும்
கருகியழிக்கும் இடியாய் மின்னலாய்
இயற்கையின் படைப்பில் இரண்டுமிருக்கும்
இதில் நன்மையெது தீமையெது  ?

Friday 29 November 2013

பணியும் பனியும் !


பாவை முகம் சேமிப்பில் 
பதிந்த தடம் நினைவினிலே
வர்ணிக்க வார்த்தையுடன்
வடிவமைப்பை தேடுகிறேன்.

சொட்டுச்சொட்டாய்
பூ நனைய, சொக்கவைத்த
அந்த முகம்..
சொப்பனத்தில் எனையெழுப்பி
தேட வைத்த அந்த முகம்.

கிளையோடி காய் தழுவி
இலையாடி இடம்பெயர்ந்து
அருகம்புல்லில் படுத்துறங்கி
அழகாய் தொலைந்த பனிமுகமே.

தேடலென ஓடுகிறோம்
தேவி உனை ரசிப்பதில்லை.
உறங்கவைத்து ஓடியாடி
கண்ணாமூச்சி ஆடுகின்றாய்.

பனிமலரே உனை பார்த்திருக்க
பகலவனும் வந்து விட
ஒளி நிழலில் உடன் மாய்ந்த
உன் நினைவைத் தேடுகிறேன்.

Tuesday 19 November 2013

துளித் துளியாய் !

சப்தங்களை 
தட்டி எழுப்பும்
அதிகாலைப்பறவைகள்.

கூரை மேயும்
காலம் நெருங்கிவிட்டது
ஆடிக்காற்று.

ஏட்டுச் சுரைக்காய்
நடைமுறைக்கு உதவாதாம்
நீதியும்.. நேர்மையும்.

சொத்துக்கு சொந்தக்காரன்
உடல் திண்ணும்
மண்.

சுழற்சியில்
சூரிய சந்திரன்
என்றும் நிலையாக
ஏழையின் வறுமை.

Friday 15 November 2013

சர்க்கரையில் ஏதினிப்பு ?


அம்மிக்கல்லு ஆட்டுக்கல்லு
அழகா இருக்கும் மாம பல்லு

சீமதொர கணக்காட்டம்
சீவி நிக்கும் சிகையழகு

கொல்லப்புறம் நான் போக
கொண்டு வரும் அவன் மூக்கழக 
கொடமொளகா.

முசுமுசுக்க இலை உரச
கை தேடும் மீசையத்தான்.

அய்யனாரு சிலையாட்டம்
அச்சமறியா அவன் முகமும்.

காக்கிச்சட்ட மிடுக்காட்டம்
கஞ்சி போட்ட வேட்டிசட்டை.

கட்டி வைச்ச பூங்கொத்தா
கன்னமினிக்கும் அவன் பேச்சு.

சர்க்கரையில் ஏதினிப்பு ?
சங்கு கழுத்து மாமன் 
நிறமோ மாசிவப்பு.

பஞ்சாயத்து மேடையிலே
பார்வையெலாம் அவன் மேல.

கண்ணுபடபோகுமுன்னு
காவ காக்கும் என் இமையும்.

Sunday 10 November 2013

யாரு கண்ணு பட்டதடி !


கண்ணாமூச்சி ஆட்டமாட
கணக்குக்கு யாருமில்ல..

கால் கடுக்க காத்திருந்தேன்
காத்துங்கூட துணைக்கு வரல.

ஆட்டமெல்லாம் மறந்துடிச்சோ ?
ஆடுகளம் எங்கே தேட..

கல்லும் மண்ணும் கதை சொல்ல
கேட்ட பொழுதுகள் கனவா சொல்லு ?

திண்ணைச்சுவரும் திரும்பிபார்க்க
விம்மித்துடிப்பதை கேட்டதுண்டோ ?

அன்னம் சிந்திய வாசல் படியும்
அழகாய் சுவைத்த கூட்டாஞ்சோறும்

யாரு கண்ணு பட்டதடி
கனவாய் எல்லாம் போனதடி

ஆத்தா நீயும் போனபின்னே
எல்லாம் கூட வந்துட்டுதோ ?

அப்பா வைச்ச தென்னம்பிள்ள
அதுவும் இங்க காணவில்ல.

தப்பா எல்லாம் நடக்குதிங்கே
தட்டிக்கேட்க யாருமில்ல.

தாத்தா இருந்த வரையினிலே -அவர்
தடிக்கு பயந்து நீதி நேர்மை 
தழைச்சதிங்கே..

ஒருவர் பின்னால் ஒருவர்
போனதுபோல்...
நேர்மையும் அவர்களை
தேடிப்போனதுவோ..?

Wednesday 6 November 2013

திண்ணைப்பேச்சு !-6


கூடி நிக்கும் கூட்டமும் தான்
குறை குறையா சொல்லிடுதே..

 ஆத்தங்கரை குளத்தங்கரை
எங்கும் இதே பேச்சே...

என்னடி புள்ள வளத்த
தலை ஒரு பக்கமும்
காலொரு தினுசாவும்.

மூக்குக்கு மேல கோபமிருக்கும்
முந்தானையால் பிள்ளைக்கு
முகந்தொடைக்கவும் நேரமிருக்காது.

அந்தக் கால வழக்கத்தை
அரை நொடியில் மறந்து விட்டு

அதுவா வளரும் பிள்ளையென
அம்மிக்கல்லா இருந்துவிட்டா
அடுக்கடுக்கா வந்து சேரும் வசவுகள்.

பெற்றவரை பெரியவரை
அனுசரித்து போக தெரிஞ்சா
இந்த குறை இப்ப ஏன்டி

பிள்ள பெத்த நாளிலிருந்து
தினம் தினம் அதிகாலை
நல்லெண்ணெய் தேய்ச்சி
கை காலை பிடிச்சி விட்டு
வெந்நீரில் குளிக்க வச்சி.

சூரிய வெளிச்சத்தில் 
காட்டி நின்னு..
பானை செய்யும் பக்குவமா.

கை தலை காலுன்னு பிடிச்சிவிட
சிற்பி செய்த சிலையாட்டம்
சிரிச்சி வளரும் பிள்ளையுந்தான்

மாமியார் பேச்சை கேட்டுக்க
மனம் நோகாம நடந்துக்க.


Tuesday 5 November 2013

கவிஞர்களுக்கான அழைப்பு !


வாய்ப்புத் தேடி கனவு காணும் உறவுகளே. இதோ உங்களுக்கான அரங்கம் உங்களுக்காகவே உருவாக்கப்பட்டது. வாருங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க ஒரு வாய்ப்பு பயன்படுத்திக்கொள்ளுங்கள்.




தொடர்புக்கு : 9551547027 
E-mail : tamilkavinjarsangam@gmail.com
www.tamilkavinjarsangam.yolasite.com

பின்னலிடும் உன் நெனப்பு !


பக்கம் நின்னு பார்ப்பவரே
பார்த்து பேசி போனாலென்ன ?

காத்தடிக்க உன் மூச்சும் 
கனலாத்தான் நெருங்குதய்யா.

தூக்கத்தை துரத்திகிட்டு
தொலை தூரம் போனதய்யா.

அள்ளி முடிந்த கூந்தலிலே
பின்னலிடும் உன் நெனப்பு.

அடுக்களைக்கு நான் போக
அஞ்சரைப்பெட்டியோட கைகலப்பு.

படபடக்கும் நெஞ்சத்துல
பல நாளா தூக்கமில்ல.

பொழுது வரை காத்திருந்து
போத்திக்கிட்டு தூங்கும்மச்சான்.

புதுக்கலைய எனக்குந்தான்
சொல்லித்தந்தா என்ன மச்சான்.

அதிகாலை எழுந்து பாத்தா
வாசக்கோலமும் பேசிடுது.

அழுக்கெடுக்க நானும் போக
படிக்கல்லும் ஓடிடுது.

உன் நெனப்பே உணவாச்சி
ஊருக்கும் தெரிந்துபோச்சி.

ஒத்தையடிப் பாதையில
ஓரக்கண்ணால் பார்ப்பவரே.

ஒத்துமையா சேர்ந்து போக
ஒரு வழிய பாருமைய்யா.


Wednesday 30 October 2013

திண்ணைப் பேச்சு !-5


பார்வையிலே புது தினுசு
பட்டாசுகளின் அணிவகுப்பு
பார்க்க பார்க்க இனித்திடுமே
பல கைகள் இணைந்திடுமே.

மகிழ்விற்கோ எல்லையில்லை
மனங்களிலோ வந்தாடும் கிள்ளை
கைகளில் சிரிக்கும் சுறு சுறு மத்தாப்பு
கண் கவர்ந்திழுக்கும் வானவேடிக்கை

திண்ணைக்குத் திண்ணை சிரிப்பொலி
தினம் தேடும் மனம் இந்த தீப ஒளி
தீபாவளிப் பலகாரமோ பல ரகமே.
தின்னத் தின்ன திகட்டா சுவை தருமே.

ஒரு நாள் கூத்து முடியுமடி
ஒய்யார நடை போட்டு போகுமடி
தின்னப் பலகாரங்கள் செரிமானமாக
தீபாவளி லேகியமும் செய்தாயோடி

சீரகத்தை மல்லியோடே
ஊறவைத்து இஞ்சியும்
சேர்த்தரைத்து வெல்லத்தை
கலந்து நீயும் நெய் விட்டு
காய்ச்சி இறக்கி ..
பாங்குடனே பத்திரப்படுத்திய
லேகியத்தை உண்டு நாமும்
சேமத்தை கொண்டு வருவோம்.

Monday 28 October 2013

வெள்ளைப் புறா ஒன்று !


புல் தரையில்
புது நளினம்
புதிர்போடும்
கால் நடனம்..
அதோ 
வெள்ளை நிறத்தில்
புறா ஒன்று...
நீதான் சமாதானத்திற்கு
 அனுப்பியதோ ?

இருக்காது
இருக்கவே இருக்காது.
உன் கோபத்தைப்பற்றி
எனக்குத் தெரியும்..
என்னை மட்டும் 
அந்தக் கோபம்
தொற்றிக்கொள்ளாதா  என்ன ?

எப்படியோ..
புறாவின் நிறம்
மனதில் ஒட்டிக்கொண்டதில்
கோபத்தின் சாயம் 
வெளுத்ததென்னவோ உண்மை தான்...

Saturday 26 October 2013

திண்ணைப்பேச்சு !-4


தகர டப்பா உருட்டும் மச்சான்
தகராறுக்கு போகாத மச்சான்
தறி போட்டு ஆடும் மச்சான்
தள தளன்னு இருக்கும் மச்சான்

கறுப்பான என் நிறத்தை
கடன்கேட்டு போனான்டி
போனவன காணோமடி
பொலம்பித்தான் சாகுறேன்டி

பொலம்பலேன்டி கண்ணம்மா
பொறுத்திரு அவனும் வருவான்டி
உண்டு உறங்கி எழுந்தாக்கா
உனக்கேன்டி அவன்நெனப்பு ?

காலம் வரும் கவனத்தை திருப்பு
கறுப்புன்னா கண்டனமா ?
கடை கண்ணிக்கு போனா நீயும்
கவனமா பார்த்து வாங்கும்
தக்காளிய ஏன் மறந்த ?

பளபளக்கும் மேனிக்கு
உணவாகவும் சாப்பிட்டு
உடல் நிறத்துக்கும் பூசிவர
பக்குவமா பலனைத்தான்
பல விதத்தில் தந்திடுமே.


Monday 21 October 2013

மன வெளியில் !


மன  வெளியில்
சாத்தியமேதும்
இல்லையென்றாலும்
அசாத்தியமாய்
அமர்ந்திருக்கிறது.
வெகு நாளாய்
ஒரு நிகழ்வு...

சாலையோரக்
கழிவுகளில் நீராடி
சாக்குப் பையை
ஆடையை உடுத்தி
எச்சில் இலைக்கு
நாயோடு சரிசமமாய்
சண்டையிட்டு...
ஐந்தறிவை ஜெயித்துவிட்ட
இறுமாப்பில்...-சக

ஆறறிவு இனத்தாரிடம்
கையேந்தும் மனிதனை
மிருகத்தை விடவும்
கேவலமாய்  பார்த்தபடி.

அந்த மனிதனின் முன்னோட்டம்
நம்மைப் போல் பதவிக்காய்
படி ஏறி இறங்குவதைப் போல்
இருந்திருக்கக் கூடுமோ ?


Friday 18 October 2013

திண்ணைப்பேச்சு ! -3


கால் முளைச்ச 
நாளாக கையினிலே
இருப்பதில்லை
பிள்ளை கண்டதையும்
எடுத்துப் போட்டு
ஆடும் ஆட்டத்திற்கோ
அளவுமில்லை..

பள்ளம் மேடு
தெரிவதில்லை..
பார்த்துப் போக
பக்குவமும் இல்லை..

கண்ணுக்குள்ள
வைத்துப் பாத்தாலும்
கர்ணமடித்து விழுகின்றான்.
கஞ்சி குடிக்கவும்
நேரமில்லை.
காத்து வாங்கவும் 
போகவில்லை.

அப்படிப்பார்த்தும்
உடம்பெல்லாம்
வீக்கங்கண்டு
உருண்டு புரண்டு
அழுகின்றான்.

எந்த ஊரு
நான் போக
எந்த வைத்தியத்தை
நானும் செய்ய...

தவம் இருந்து
பெத்தவளே..
தடிப்புக்கு மருந்தேன்டி
அரிப்பதுவும் நின்றிடவே
உள்ளுக்கு நல்லெண்ணெய் 
குடுத்துப்பாரு..
தடம் தெரியாம
மறைந்திடுமே தடிப்பெல்லாம்.

Wednesday 16 October 2013

காதலாகி !


என் தோட்ட பூப்பறிக்கும் 
எதிர்வீட்டு பெண்ணழகி
சுருட்ட முடி பின்னலிலே
சொக்கத்தான் வைக்கிறியே..

கழனியில களையெடுத்தா
கன்னியுன் முகம் தெரியுதடி
கடுப்பாகி நான் நிமிர்ந்தா
கண்ணெதிரே நிக்குறடி.

போர்த்தி நானும் படுத்துக்கிட்டா
(உள்ளம்)போர்களமா தெரியுதடி...
உறக்கமேது கண்ணுக்குள்ள
உன்னப்பார்த்த நாள் முதலா ..

சட்டியில சோறு திண்ணு
சாக்கடையில் நான் குளிச்சேன்
முச்சந்தியில தான் நின்னு
முத்த மழைக்கு காத்திருந்தேன்.

சிரிப்பா தான் சிரிக்குதடி
சிரிக்கி மவளே என் பொழப்பு
கள்ளத்தனம் இனியுமேன்டி
கண்ணசைவில் சொல்லேன்டி
காதலாகி வந்தவளே.

Monday 14 October 2013

மாபெரும் கவிதைப் போட்டி !


தீபாவளித் திருவிழாவை முன்னிட்டு ரூபனின் மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறேன்… வாருங்கள்…  வாருங்கள்…


போட்டிக்கான தலைப்பு
1. நாம் சிரிக்கும் நாளே திருநாள்
2. ஒளி காட்டும் வழி
3. நாம் சிரித்தால் தீபாவளி
போட்டியின் விமுறைகள் :
1. கவிதை மரபு சார்ந்தும் இருக்கலாம், வசன கவிதையாகவும் இருக்கலாம், கவிதை வரிகள் 15க்கு குறையாமலும் 25க்கு மிகாமலும் இருத்தல் நலம்.
2. ஒரு பதிவரின் ஒரு தலைப்பிலான ஒரு கவிதை மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படும்.
3. கவிதையினை தங்கள் பதிவில் 31/10/2013 இரவு 12 மணிக்குள் (இந்திய நேரம்) பதிவிடப் பட்டிருக்கவேண்டும்.
4. நடுவர்களின் தீர்ப்பே முடிவானதாக இருக்கும்
5. உங்களின் தளத்தில் கவிதையை வெளியிட பின் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி : rupanvani@yahoo.com& amp; dindiguldhanabalan@yahoo.com

பரிசுகள் :
முதல் பரிசு : ரூ.1500 + சான்றிதழ்
இரண்டாம் பரிசு : ரூ.1000 + சான்றிதழ்
மூன்றாம் பரிசு : ரூ.500 + சான்றிதழ்
ஆறுதல் பரிசாக தேர்வு செய்யப்படும் ஏழு கவிஞர்களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்… கலந்து கொள்பவர்கள்  தங்களின் பெயர்,மின்னஞ்சல் மற்றும் வலைத்தள முகவரிகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்…

எண்ணச் சிறகுகளை பறக்க விடுங்கள்.. பரிசினை தட்டிச்செல்லுங்கள்.

இன்பாக்சும் இவளும் !


இணையமே...
என்றாவது ஒரு நாள்
உனை தேடி வருவேனென்று
குவித்து வைத்திருக்கிறாய்
எனக்கான செய்திகளை
என் தேவையெது என்றறிய 
பொழுதொன்று போதாது..
தேடியெடுக்கும் பொருட்டு
மீண்டும் தொலைக்க கூடும் உனை.

உன்னைப் பற்றி 
மிகைப்படுத்தி கூறிவிட
ஆயிரம் இருந்தும்..

அர்த்தமற்ற பயத்தினால்
மௌனித்து கிடக்கிறேன்.
தனிமை யுத்தத்தை
எத்தனை நாளைக்குத்தான்
தொடர முடியும்..

இதோ நிவாரணமாக
பின்னூட்ட  உருவில்
நீயே எனை ஆக்கிரமித்துவிடுகிறாய்.

Wednesday 9 October 2013

தண்ணீரின் தாகம் !

திண்ணை இணைய வாரப்பத்திரிகையில் வெளியான எனது கவிதை. நன்றி திண்ணை இதழ் ஆசிரியருக்கு.

இன்று முதல் 
இலவசப்பட்டியலில்
இணைக்கச் சொல்லுங்கள்
தண்ணீரையும்..

யாசித்தும் கிடைக்காத 
பொருளாகி விட்டது
தண்ணீரும்.

யாசிக்கிறோம்
தண்ணீரை..
உடம்பு நாற்றத்தை
கழுவ அல்ல
உயிர் அதனை
உடம்பில் இருத்த.

இன்று முதல்
இலவசப்பட்டியலில்
இணைக்கச் சொல்லுங்கள்
தண்ணீரையும்..

வேண்டாம் வேண்டாம்
பழங்கால ஞாபகங்களாய்
எங்கோ ஓடும் நதிகள் கூட
ஓடும் லாரியில் ஓடக்கூடும்..

நாளைய வரலாற்றில்
வறண்ட பூமியின்
எண்ணிக்கையை விட
நா வறண்டு செத்தவர்களின்
எண்ணிக்கை அதிகமாக
இருக்கலாம்.

வள்ளல்கள் வாழ்ந்த 
பூமி இதாம்..
வாரி வழங்க வேண்டாம்
வழிக்காமல் இருங்கள்
இயற்கை அன்னையின் மடியை.

இன்று வலைச்சரத்தில் பகிர்வினைக் காண இங்கே க்ளிக் செய்யவும்.

Monday 7 October 2013

திண்ணைப் பேச்சு ! -2


அடிக்கொரு தும்மலும்
அடி வயிற்றை பிடித்து
இருமலும்...
ஆத்தாடி பிள்ளை 
படும் பாட்டை...
காணச் சகியவில்லையே.

மருத்துவரை பார்த்தும் 
மாத்திரையை கொடுத்தும்
நெஞ்சு சளி குறையவில்லை
நேத்து இரவு தூங்கவில்லை.

பச்சை தண்ணியில
ஆட்டம் போட்டு
பிள்ளை படும் பாட்டை 
என்ன சொல்ல..

பத்தியமிருந்து பெத்தவளே
பாசமா வளர்ப்பவளே
பாட்டி சொன்ன 
வைத்தியம் மறந்திடுச்சா ?

தேங்காய் எண்ணெய் 
சூட்டில் கற்பூரத்தை 
சேர்த்து வெதுவெதுப்பா
நெஞ்சில தான் தினம்
தடவி விட சளி கரையும்...

வாரத்தில ரெண்டு நாள்
கொதி நீரில் துளசியத்தான்
கொதிக்க விட்டு வடிகட்டி
குடிச்சி வர நோய்க் கிருமி
ஓடிடுமே...

சொன்னதெல்லாம் நினைப்பிருக்கா ?
பாட்டி வைத்தியத்தில் பிழையிருக்கா ?

இந்த வாரம் வலைச்சர ஆசிரியராக எனது பகிர்வுகளை காண இங்கே க்ளிக் செய்யவும்.

Saturday 5 October 2013

சமீபத்திய சாதனைகள் !

அதீதம் இதழில் வெளியான கவிதை. நன்றி அதீதம்.


காலார நடந்ததில்லை - உறவோடு
கலந்து பேசி பழக்கமில்லை.

அடுக்களையில் புழக்கமில்லை
அரைச்செடுத்து சமைக்கவில்லை.

ஆடு மாடு வளர்க்கவில்லை
ஆடை அழுக்கெடுக்க தெரியவில்லை.

கோயில் குளம் போனதில்லை
கோலமும் தான் போட்டதில்லை.

சாதி சனம் பழக்கமில்லை
சந்ததிக்கும் யாரையும் தெரியவில்லை.

பச்சை வயல் பார்த்ததில்லை
பத்தியமும் இருந்ததில்லை

நின்று பேச நேரமில்லை
நீரோடையும் பார்த்ததில்லை.

மண்பாண்ட உணவுமில்லை.
மருந்துக்கும் அன்பு இல்லை.

அன்னை தந்தை அந்நியமில்லை
ஆனாலும்..
அரவணைக்க அவகாசமில்லை.

ஆடி ஓடி விளையாடவில்லை
அதனால இங்கே ஆரோக்கியமில்லை.

Friday 4 October 2013

மலரும் மணமும் !


நேத்துப் பூத்த ரோசாவ
நின்னுப் பார்க்கும் ராசாவே

காத்தடிக்க உதிர்ந்திடுமே
கன நேரம் துடித்திடுமே

இதழ் இதழா உதிர்கையில
இவ நெனப்பு உனக்கில்லையா ?

பூவாசம் உனைத் தீண்டையில
புது வாசமா இவ மணக்கலையா ?

அசைந்தாடும் செடியினிலே
அசையுதைய்யா என் உசிரு

பச்சை நிற இலையினிலே
படர்ந்திருக்கும என் நேசம்

நித்தம் உனக்குச் சொல்லலையா ?
நினைப்பிருந்தா வாருமைய்யா ?

திங்கள் மூனு ஓடிப்போச்சி
தினக்கூட்டமும் குறைந்து போச்சி.

சந்தையில தானிருப்பேன்
சங்கதிக்குக் காத்திருக்கேன்.

Wednesday 2 October 2013

திண்ணைப் பேச்சு !


என்னாத்தா
பொன்னாத்தா
எங்க ஊரு மாரியாத்தா.
அந்த புள்ளைக்கு 
என்ன ஆச்சோ தெரியலையே
சிரிச்ச முகம் காட்டலையே
செத்த நாழி நிக்கலையே
மருத்துவர தேடிப்போறோம்
மருந்தாக நீ வரவேனும்.

போடி கிறுக்கச்சி
பொசகெட்டவன் 
பொண்டாட்டி..
சூட்டால வயித்து வலி
சுருங்கிப் படுத்தா 
சரியாகுமா ?
சூரத்தேங்காய் 
உடைச்சா தான்
சுருக்கா ஓடிடுமா ?

பணங்காசு சேந்துபுட்டா
பவுசு கூடிப்போகும்
உன் கணக்கா...
மாட மாளிகை
மருத்துவத்தை 
தேடிப்போகும்...
சட்டுனு தான்.

விளக்கெண்ணெயை 
போட்டுப் படு...
விரைசா ஓடும்
வியாதியுந்தான்.
பாட்டி இருந்தா
கேட்டுக்க..
பணத்த பதுக்கி
வச்சிக்க.

வாரம் ஒரு பாட்டி வைத்திய முறையில் கவிதை எழுத நினைக்கிறேன். தங்கள் கருத்துக்களை சொல்லுங்க உறவுகளே.

Monday 30 September 2013

இருள் தின்றவன் !


கண்ணாமூச்சியாடும்
கண்களை விடுத்து
மெல்ல மெல்ல
மன இருளை இரட்டிப்பாக்க
மேகப்போர்வைக்குள்
ஒளிந்து கொண்டு...

மெல்லிதழாள்
சட்டென விழுங்க
முடியா அவனுக்கான
மௌனங்களை..

பத்திரப்படுத்துகிறாள்
பூனையொன்றாய்
பதுங்கிப் பதுங்கி
வருகிறான்.

அசைவில்லாமல்
அணுவளவும் மீதமின்றி
உண்டு முடித்திருப்பான்
என் மன இருளை.

Sunday 29 September 2013

காதலின் நளினம் !


என்னடி அதிசயம் இது
வெண்டைக்காய் நடந்திடுமோ ?
வாசலில் கோலமும் வரைந்திடுமோ ?
என்றே கேட்டான்.
பிடுங்கித் தின்ன வெட்கத்தோடே
பிடிகொடுக்காமல் எங்கே என்றேன்.
விரலதனை பிடித்து அவனும்
வில்லங்கமாய் சிரித்து நின்றான்.

குளக்கரைக்கு நானும் போனேன்
குளத்து மீனும் எம்பிகுதித்து
குத்தாட்டம் போடுதென்றான்
புரியாமல் புருவம் உயர்த்த
புது வகை மீனினம் (கண்கள்)-உன்
புது வரவை காண என்றான்.

பூபறிக்க நானும் போனேன்
அடிபாதகத்தி வண்டெல்லாம்
உன் பின்னே வர...
வாடிப்போச்சே பூக்கள் என்றான்..

என்னடி வம்பா போச்சி
வாய் ஜால மன்னனிவன்
வார்த்தையோட மல்லு கட்ட
வழியிருந்தா சொல்லிப்போயேன்.

Saturday 28 September 2013

நினைவெனும் வானில் !


நோக்காது நோக்கி
தாக்காது தாக்கும்
அவன் விழியம்பு...

காயத்துடன் அவன்
இதயக்குகைக்குள்
தஞ்சம் புகுந்தவளை
வார்த்தை உளியாள்
செதுக்கியபடி இருக்கிறான்.

இடை இடையே
சௌக்கிய விசாரிப்புகளோடு
கொஞ்சலும் கெஞ்சலுமாய்
நகரும் சந்திப்பு நேரங்களை
அவனுக்கு மட்டுமே
சொந்தமாக்கிக் கொண்டு..

வர்ணங்கள் ஏதுமின்றி
வார்த்தைகளை குழைத்தே
அலங்கார சிலையாக்கி ..
நிஜத்தின் இனிமை 
நிமிடமென்றே...
நினைவெனும் வானில்
நித்தம் நித்தம்
உலா வரச்செய்கிறான்.

Sunday 22 September 2013

சந்தைக்கு போனான் ரோசக்காரன் !


சந்தனம் மணக்கும் வாசக்காரன்
சந்தைக்கு போனான் ரோசக்காரன்

கர வேட்டி தரைய வெட்ட
கட்ட பொம்மன் தோற்றம் சொட்ட

அருவா மீச சிரிப்பழகன்
ஆள மயக்கும் கருப்பழகன்

அங்குமிங்கும் பார்த்துகிட்டே
ஆடி வந்தான் காதல் சொட்ட

மல்லிகை வாசம் அழைக்குதடி
மனசும் மெல்ல பிசையுதடி

காட்சியெதும் விளங்கவில்ல
கண்முன்னே எல்லாம் கருப்புவெள்ள

சரக்கு என்ன வாங்கவந்தான் ?
சத்தியமா விளங்கவில்ல...

செக்கு மாடா சுத்தி வந்தே
செண்பகப்பூ எங்கே என்றான்.

துறு துறுன்னு பார்வை சுத்த
தும்பப்பூ பல் வரிச
கல கலன்னு தான் சிரிச்சே-அவளும்
இது மீன் கடை என்றே சொன்னா...

Wednesday 18 September 2013

ஹலோ அம்மாவா..?

பூண்டு மிளகு 
தட்டிப்போட்டு
புளிய கொஞ்சமா
கரைச்சி ஊத்தி
அம்மா வைக்கும் 
வாயு குழம்பு...

என்ன இலைமா அது ?
அலைபேசியில் கேட்டிடவே
அழைக்கிறேன்.
அவர் தொடர்பு எல்லைக்கு
அப்பால் இருக்கிறார்.. -என
யாரோ சொன்ன பிறகே
உணர்கிறேன் .
அம்மா இல்லை என்பதை.
***********************************
அம்மா கத்துக்கொடுத்த
கம்பிக் கோலங்கள்
மனதைக் கிழிக்காமல்
விரல் வழி வந்து விழுவதில்லை.

Tuesday 17 September 2013

தாலாட்டு மாறிப் போனதே !


தேடியெடுத்து விதைக்கவில்லை
தினம் நீரும் ஊற்றவில்லை
தானே வளர்ந்த வேப்பமரம்.

தாராளமாய் நிழலும் தந்து
தன் மடியில் இருத்தி 
தாலாட்டும் பாடி...
உறங்க வைத்த மரம்...

வயிற்றுப்பூச்சிக்கும் மருந்தாகி
வாசலில் தோரணமுமாகி
வாரிசுகளுக்கு ஊஞ்சலுமாகி
அம்மை நாளில் படுக்கையுமாகி
காவலாய் நின்ற மரம்.

காத்து கருப்பை 
விரட்டிய மரம்..
பங்காளிச் சண்டையில்
இங்குமில்லாது..
அங்குமில்லாது..
பாதையில் நின்றதால்
வெட்டினாலும் சரிபாதி
காசாக்கினாலும் சரிபாதி
தீர்ப்பான மறுநாளில்
திசைக்கொரு கதவாய்
எதிரெதிர் வீட்டு வாசலில்...

Monday 16 September 2013

மூக்கொழுகி ராசாத்தி !


ஆத்தா அருகம்புல்லும் அழகாத்தான்
மூக்குத்திய போட்டிருக்க...
ஆளான பெண்னெனக்கு
அழுக்கு பாவாடை தான்
மீதமாத்தா...?

பனித்துளி வாழ்வதற்கு
பாவடக்காரி உனக்கேன்டி
நால்வருக்கு அடுத்து பொறந்து-உனக்கு
நல்ல நேரம் இன்னும் வரல..

பொண்ணாக பிறந்திடவே
வரம் கேட்டு பொறக்கவில்ல
நான் பிறக்கும் போதே
என்அப்பன் ஆண்டியப்பன்
எனக்குனு பழமொழிய
எழுதியவன் எவனாத்தா..?

குடிசைக்குள் ஒழுகலாட்டம்
குத்தங்கொறக்கு பழமொழி
நூறுண்டு.
நூல் சேலைக்கே ஏங்கிடும்
பொழப்பா  நம் வாழ்க்க
நமக்கு மூக்குத்தி ஒரு குறையா
மூக்கொழுகி ராசாத்தி.

Wednesday 11 September 2013

அழகா பூத்த ரோசாப்பூ !


அக்கா மகளே ராசாத்தி
அழகா பூத்த ரோசாப்பூ
அத்த மகன் நானிருக்க
அரளிவெத சிரிப்பெதுக்கு.

கல்லு வச்ச மூக்குத்தியும்-சிரிப்ப
கடன் கேக்கும் லோலாக்கும்
பச்ச கலரு தாவணியும்- குனிய
பருத்தி கொட்ட எடுக்குதடி.

உன்னழக பார்ததிருந்தா
பூலோகம் இருளுதடி
புதைகுழியா தெரியுதடி
போன மாசம் சமைஞ்சவளே
புது மொட்டா சிரிப்பவேள

சீமத்தொர கணக்காத்தான்
சிரம் நிமித்தி நடந்திருந்தேன்
சிருக்கி உன்ன பார்த்துப்புட்டா
சிரிச்சி பேச மறக்குறேன்டி...

மாமனுந்தான் காவலுக்கு
மருகி மருகி காத்திருக்கேன்
மரிக்கொழுந்தா வாசம் வீசி
போவதெங்கே வீதியில..

Thursday 5 September 2013

இரவின் மடியில் !

இரவின் மடியில்
கவிழ்ந்து கிடக்கிறதென்
கவிதை..

இமைகளை மூடவிடாது
வெளிச்ச பொத்தானையும்
ஏற்ற பயந்து..

எம்பித் தவிக்கும் வார்த்தைகள்
இப்படியும் அப்படியுமாக 
எனை புரட்டிப்போட்ட படி.

காலை வரை உயிர்பித்திருக்குமோ ?
கனவில் வந்ததாய் கலையக்கூடுமோ ?

இல்லை...
பிரசவக்காரியின் சூட்டு வலியாய்
எழுதுமுன் மறையக் கூடுமோ ?

தீடிரென...
விரல் வழி மைகசிந்து
விடியலுக்கோர் சாசனம் 
எழுதிட துடித்தபடியே 
தூங்கிப்போகிறேன்.

Tuesday 3 September 2013

மகிழ்வான தருணங்கள் ...!

அலமு : சசி! நீ செய்யறது கொஞ்சம் கூட நல்லா இல்லடிம்மா.. ஆமா சொல்லிட்டேன்.

சசி : என்ன மாமி... நான் என்னத்த அப்படி செய்துவிட்டேன்னு இம்புட்டு கோவப்படுறிங்க ?

அலமு : இன்னும் என்னடிம்மா நீ செய்ய பாக்கியிருக்கு..?

சசி : ஏன் மாமி... இம்புட்டு கோவம்?

அலமு : போன வருடமே என்னைய விட்டுட்டு பதிவர் சந்திப்புக்கு போயிட்டு வந்துட்ட.. இந்த வருடம் கிளம்ப சொல்லிட்டு மறுபடி என்னைய விட்டுட்டு போனது சரியா?  நான் வேற ப்யூட்டி பார்லர் எல்லாம் போயிட்டு வந்து வெயிட் பண்னேன் .

சசி : ஆமா மாமி, உங்களை கிளம்ப சொல்லிட்டு காத்திருந்தேன். நீங்க வருகிற வழியா தெரியல.. நான் கிளம்பி ­பு­­வர் ஐயா வீட்டிற்கு சனிக்கிழமை மாலையே சென்று விட்டேன். நீங்க கிளம்பினது தான் கிளம்பினிங்க... காலையில மண்டபம் வரவேண்டியது தானே.?

அலமு : ஏன்டிம்மா சொல்ல மாட்ட... நான் தனியா வந்து அங்க சசி எங்க ... சசி எங்கனு தேடிட்டு இருக்கவா? பார்த்தாலும் பார்க்காத மாதிரியில்ல நீ போவ....

சசி : என்ன மாமி இப்படி சொல்லிட்டிங்க... நான் முன்னாடி போய் அகிலா, எழில்  மற்றும் கோவைப்பதிவர்களை பன்னீர், கற்கண்டு ஏதுமில்லாம வரவேற்றேன் மாமி.

அலமு : பிறகு நிகழ்ச்சி எப்படி நடந்தது என்பதை பார்க்க.. ஆசையா கம்புயூட்டர் முன்னாடி உட்கார்ந்தா அங்க என்னடிம்மா ஒன்னுமே வரவில்லை ? நீயாவது இல்ல உங்க பதிவர் நண்பர் யாராவது என்ன நடந்தது என்று விரிவா எழுதுவாங்கனு பார்த்தா என்னடி யாருமே எழுதுகிற வழியா தெரியல...!

சசி : ­து­வா மாமி...! எல்லாரும் இன்னும் அந்த இன்ப நிகழ்ச்சி­தந்­ ­சந்ந்­தோ­ஷத்­து­ல இருந்து வெளிவர­ல அதனால லேட் ஆகும்..

அலமு : நீயாவது சொல்லேன்டி.. என்னமோ தெரிய­... இங்க அடுத்தாத்து மாமி கூட ஊருக்கு போயிட்டா வம்பளக்க யாருமில்லடி.. எதாவது சொல்லேன்.

சசி : நான் தான் கிடைத்தேனா இன்னிக்க்­கி..? சரிதான்.... சொல்றேன் மாமி.. பு­­வர் ஐயா வாசலில் நின்று வரவேற்று ‘‘முன்னாடியே வந்திருக்க வேண்டியது தானம்மா என்ன தயக்கம் இது உன் வீடும்மா’’ என்றார். எனக்கு மகிழ்ச்சிக்கு அளவேயில்ல. மாமி! ஐயா வீட்டில் அற்புதமான உபசரிப்பு ஐயாவின் மகள் அன்பாக பேசி ‘‘என்னங்க பிள்ளைகளோட விழாவுக்கா? பிள்ளைகளையும் பழக்கப்படுத்துறிங்களா?’’ என்று நிதானமாக அமர்ந்து பேசி பிள்ளைகளோட விளையாடினாங்க.  என் சின்ன பையன் இளையவன் விழா முடிந்து வரும் போது கூட ‘‘அம்மா அந்த தாத்தா வீட்டில் இன்றும் தங்கிட்டு போலம்மா..’’ என்று சொல்லும்படி நடந்து கிட்டாங்க.. எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது மாமி.

அலமு : எங்க போனலும் எப்பம்மா வீட்டுக்கு போகலாம்னு கேட்கிற உன் பையனே.. அப்படி சொன்னானா ? ஆச்சரியமா இருக்கேடிம்மா.

சசி : ஆமா மாமி எல்லாத்தையும் இழுத்து போட்டு விளையாடிட்டு இருந்தான். காலையிலும் எப்பவும் லேட்டா எழுந்துக்கிற வாண்டுங்க இங்க சீக்கிரமே எழுந்து கிளம்பிட்டானுங்க. அரங்கிற்கு வந்தா முதலில் கணேஷ் அண்ணா இருந்தாரு. அப்படியே ஒவ்வொருத்தரா பார்த்து பேசியபடி உள்ளே போனோம்.  விழா ஆரம்பிக்க பத்து மணியாகிவிட்டது. அதற்குள் அறிமுகப்படலம் நிகழ்ந்தது. போனில் என்னை அழைத்து பேசி வருவதாக சொல்லியிருந்த உமா வந்திருந்தாங்க­பாட்­டி ­சொன்­ ­­தை­கள்னு ­இப்­­வும் ­உற்­சா­கம் ­குன்­றா­­ ­­ழு­திட்ட்­டி­ருக்­­ ­ருக்­­ணி ­சே­­சா­யி ­அம்ம்­மா ­வந்ந்­தாங்­. அப்புறம் மாமி.... காதல் கடிதம் எழுதினேன்னு சொன்னேனில்ல அதில் பங்கு பெற்ற பதிவர் அல்லாத தோழி ரேவதி செல்லதுரை வந்தாங்க. சின்ன பொண்ணு மாமி! நான் அவங்க எழுதியதை பார்த்து என்னைய விட பெரியவங்களா இருப்பாங்கனு நினைத்தேன். அவங்க பையனும் நம்ம இளையவனுந்தான் விழா ஏன் அவ்வளவு சீக்கிரம் முடிந்தது என்று மாலை 6 மணிக்கும் கேட்டுட்டு பிரிய மனமில்லாது பிரிந்தாங்க.


அலமு : இந்த வருடமும் நிறைய பதிவர்கள் வந்திருந்தாங்களா ?

சசி : ஆமா மாமி உண்மைத்தமிழன், பழனி கந்தசாமி ஐயா. ரமணி ஐயா இப்படி மூத்த பதிவர்கள் எல்லாம் நிறைய பேர் வந்திருந்தாங்க. நம்ம ராஜி அக்கா பந்தாவா பெட்டிபடுக்கையோட வந்தாங்க. என்னடா இவங்க கல்யாண வீடுன்னு நினைச்சி மாத்திக்க துணி கொண்டு வந்துட்டாங்களோன்னு நினைச்சேன். பிறகு தான் சொன்னாங்க அவங்க ­பெங்­­ளூர்ல பெண்னை பார்த்து விட்டு அப்படியே வருவதாக.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பித்தது. விழா ஆரம்பம். ஒவ்வொருவராக தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டாங்க. தொகுத்து வழங்க போன வருடம் போல சுரேகா வந்திருந்தாங்க. அவங்களுடன் அகிலாவும் எழிலும் தொகுத்து வழங்கினாங்க. கைத்தட்டல் விசில் பறக்க அறிமுகம் அசத்தலா நடந்தது. ஐயாவின் தனிமையைப் போக்க அவங்க மகள் துவங்கி கொடுத்த வலையின் மூலம் நிறைய நண்பர்களையும் உறவுகளை பெற்றிருப்பதா ­ஐயாவும் பேசினாங்க. தலைமை தாங்கியது அவர் இல்லையா அதனால அவருக்கு வருத்தமும் கூட ...

அலமு : அதனால என்னடிம்மா அவங்க அவங்க தலைமை பொறுப்புக்கு ஆளா பறக்குறாங்க. அவர் ஏன் அப்படி சொன்னார்.


சசி : மாமி தலைமை பொறுப்பு ஏற்றதால அவருக்கு எல்லோருடனும் சகஜமா பேச முடியாம இப்படி மேடையில ஏத்தி உட்கார வச்சிடுறாங்க இல்லையா .. அதனால அப்படி சொன்னாங்க. அப்புறம் நம்ம சென்னை ஹீரோ தான் முன்னிலை ..
நடுவில் ஆவிய அறிமுகம் செய்தாங்க மாமி....


அலமு : என்னடிம்மா இது பட்டப்பகலில் ஆவியா ?

சசி : அஹா..அஹா ஆமா மாமி நம்ம கோவைப் பதிவரைத்தான் ஆவி என்று அழைச்சாங்க. எல்லாருந்தான் வித விதமா யோசிச்சி வலைக்கு பெயர் வச்சிருக்காங்களே.. நான் தான் திடீர்னு தென்றல்னு வச்சிட்டேன்.

அலமு : அதனால என்னடிம்மா நல்லா தான இருக்கு... சரி சரி உன் புராணம் வேண்டாம் மற்ற நிகழ்வ பத்தி சொல்லு.

சசி : பதிவர்கள் ஆர்வம் மாதிரி வெயிலும் அதிகமா தான் இருந்தது. அசரவில்லையே நம்ம நண்பர்கள் வேர்க்க விறுவிறுக்க உள்ளயும் வெளியேயுமா ஜீஸ் குடிச்சிட்டு அடுத்தடுத்த நிகழ்வில் பங்கேற்றாங்க. அப்ப என் செல் அடித்தது நம்ம இளமதி தோழி தெரியும் இல்ல உங்களுக்கு..

அலமு : ஆமா சொல்லியிருக்கேடிம்மா க்விளிங் வேலைப்பாடுகளோட அசத்தலா பதிவிடுவாங்கனு.

சசி : ஆமா மாமி அவங்க தான் போன் பண்ணாங்க. சசி நேரலை பார்க்க முடிய­ல நிகழ்ச்சி எப்படி நடக்குதுப்பானு கேட்டாங்க. எனக்கு உடனே நினைவு வந்ததது அவங்க முன்னாடியே சொல்லியிருந்தாங்க. ஐயா சுற்றுப்பயணம் சென்ற போது வந்து பார்க்க முடியள ஐயாவிடம் சொல்லுப்பா என்று. உடனே சென்று ஐயாவிடம் போனை கொடுத்தேன். அப்படியே கவியாழி மற்றும் மதுமதியிடம் பேசிட்டு மிக்க மகிழ்ச்சிப்பானு சொல்லிட்டு வச்சாங்க.

அலமு : பாருடிம்மா வெளிநாட்டில் இருந்தாலும் சந்திப்பை பற்றி ஆர்வமா கேட்டிருக்காங்க. பாராட்ட வேண்டிய விஷயம் தான்.

சசி : ஆமா மாமி அதற்கும் முன்னாடியே வெளிநாட்டு நண்பர் ஒருவர் அலைபேசி வழியாக அனைவருக்கும் வாழ்த்து சொன்னாங்க.

அலமு : பே­ஷ்....பேஷ்...!.

சசி : பிறகென்ன சிறப்பு விருந்தினர் வாமுகோமு, பாமரன், பாட்டையா, கண்மணி குணசேகரன், நா.முத்து நிலவன் எல்லாம் வந்திருந்து மிக சிறப்பா பதிவர்களுக்கு ஆர்வம் குறையாம பேசினாங்க. மதிய விருந்தும் சுவையோட முடிந்து. ம­தி­யம் ­நம்­ ­­வி­ஞர் ­­து­­தி ­­­ழு­தி ­­யக்­கி­ ‘90 டி­கி­ரிங்­­ ­கு­றும்­­டத்­தை ­வெ­ளி­யிட்­டாங்­... ­ரு ­சின்­னப் ­பொண்­ணை ­மை­­மா ­வெச்­சு, நல்­ ­­ருத்­தைச் ­சொல்­லி... பத்­தே ­நி­மி­ஷத்­து­ ­­சத்த்­தி­டா­ரு ­­து­­தி.
பாமரன்


                                                     கண்மணி குணசேகரன்

­மா­மி : ­­டே... ­தி­வர்­கள் ­­சி­னி­மாத் ­து­றை­யி­­யும் ­­லக்­ ­­ரம்­பிச்­சுட்­டாங்­­ளா... பேஷ்... அப்­பு­றம் ­வே­ ­என்­ ­வி­சே­ஷம்?

­சி: ­துக்­கப்­பு­றம்... பதிவர்கள் ­­ங்­­ளோ­ தனித்திறமை­­ளை ­வெ­ளிப்­­டுத்த்­தி ­­­­சத்த்­தி­னாங்­. ­துக்­கப்­பு­றம் புத்தக வெளியீடு இப்படியாக வெகு சுவாரயஸ்மா தொடர்நதது மாமி.

அலமு : புத்தக வெளியீடுமா... போன வருடம் உன்னுடைய புத்தகம் வெளியீடு இல்லடிம்மா. அதுக்குள்ள ஒரு வருடம் ஓடிப்போச்சா.

சசி : ஆமா மாமி இந்த வருடம் 5 புத்தக வெளியீடு .. சென்ற ஆண்டு தென்றலின் கவிதை நூலை பெற்றுக்கொண்ட சேட்டைக்காரன் ஐயாவின் நூலும் வெளியானது மாமி. புத்தகம் வாங்கிட்டு வந்திருக்கேன் படிச்சி பாருங்க. நான் நேத்து படிச்சிட்டு இருக்கும ;போது இளையவன் ஸ்கூல்ல இருந்து வந்தான் என்னம்மா தனியா சிரிச்சிட்டு இருக்க அந்த புக்ல என்னம்மா இருக்குனு கேட்டுட்டு நாம நேத்து பார்த்தோமே அந்த தாத்தாவுதாம்மானு கேட்டான். அப்படி படிககும் போதே சிரிக்க வைக்கும் எழுத்து நடை அப்ப்பா எப்படித்தான் எழுதினாங்களோ எழுதும் போது விழுந்து விழுந்து சிரிப்பாங்களோ ? பாவம் அவர் வேற ரொம்ப ஒல்லியா வேற இருக்காரு..
                         சேட்டைக்காரன் ஐயா

அலமு : ஆமாண்டிம்மா நானும் போன வருடம் அவர் புகைப்படம் பார்த்தேனே.. அவரா அப்படி எழுதியிருக்கார்.. படிச்சிட்டு தரேன் தாடிம்மா.

சசி : அதனால என்ன மாமி எடுத்துக்குங்க.  அப்புறம் நண்பர் மோகன் குமார் தெரியுமில்லையாஉங்களுக்கு... அவரோட வெற்றிக்கோடு புத்தகம் வெளியாச்சி.
                           மோகன் குமார்

அடுத்து கோவைப்பதிவர்கள் சங்கவியின் இதழில் எழுதிய கவிதைகள் புக்கும்.. அதே கோவையில் தோழி யா­மி­தா­ஷாநிஷாவின் அவன் ஆண் தேவதை புக்கும் தொகுப்பாளர் சுரேகாவின் புத்தகமும் வெளியிட்டாங்க மாமி..
                          சங்கவி

அலமு : என்னடிம்மா இது வித்தியாசமான தலைப்பா இருக்கே எல்லாம் பேர் படிக்கும் போது படிக்கனும்னு ஆசை வருதுடிம்மா.
                          சுரேகா

சசி : படிங்க படிங்க எல்லா புக்குக்கும் வாங்கிட்டு வந்துட்டேன்.  அப்புறம் மாமி நம்ம சகோ சீனு போட்டிக்கான பரிசை புக்கா வாங்கிக்க சொன்னாங்க என்ன புக் வாங்குறதுன்னு தெரியல. அங்க என்னோட ரேவதியும் புக் தேடிட்டு இருந்தாங்க அவங்க எடுத்த கோபல்ல கிராமம் புக்கையே நானும் கேட்டேன் எடுத்துங்க நான் நாளை வாங்கிக்குறேன்னு சொன்னாங்க அதனால அந்த புக்கும் வாங்கி நம்ம ரஞ்சனி அம்மாவிடம் கையெழுத்து வாங்கிட்டு நம்ம கோவைப்பதிவர்களோடயே அவங்க வேனில் தாம்பரம் வரை வந்து இறங்கி வீடு வந்து சேர்ந்தேன் மாமி; இன்னும் விரிவா சிறப்பு விருந்தினர் எல்லாம் என்ன என்ன பேசினாங்க என்று நம்ம நண்பர்கள் ப்ளாக்ல போடுவாங்க அப்ப படிங்க இதுக்கு மேல பதிவு பெரிசா போன என்னைய யாராவது தேடி வந்து அடிப்பாங்க மாமி.

அலமு : யாராவது என்ன நானே அடிப்பேன்.. ஏதோ சுருக்கமா சொல்வனு பார்த்தா இப்படி பேசிட்டே இருக்கியே என்ன...


சசி : யார் நானா சொல்விங்க... மாமி சொல்விங்க... என்­னோ­ ­வா­யக்­கிண்­டி ­பே­ ­வெச்­சுட்­டு... சொல்­ ­மாட்ட்­டீங்­...! ­டுத்­ ­வா­ரம் ­­ரை ­உங்­­ளோ­ ­பே­சப் ­போ­­தில்­ ­நான்!

                                             நகைச்சுவையா உங்களுக்கு எழுத தான் தெரியும் எப்படி சிரிப்பது என்று கற்றுக்கொடுக்கும் சகோ சீனு.

                                                           டோக்கன் கொடுத்து போட்டோ எடுத்த கவியாழி நண்பர்களுடன்.

படங்கள் எல்லாம் நண்பர்கள் வலையில் சுட்டது.