Thursday 15 December 2011

நெருடல் இன்றி

ஆள் இல்லா ஆற்றங்கரை ..
ஜன்னலோரத்தில் தெரியும் உலகம் ...
மலர் தேடும் வண்டு ....
வண்டு விரட்டும் பட்டாம்பூச்சி ..
தும்பி விரட்டும் தம்பி ...
தூரத்து பசுமை ..
அரிசி புடைக்கும் அன்னை மடி ..
அருகிலேயே வந்து போகும் சிட்டுகுருவி ..
திகட்டாமல் பேசும் மழலைகள் ..
தினந்தோறும் அமரும் குட்டிச்சுவர் ..
குதூகலமாய் ஆட்டம் போட்ட ...
புத்தாண்டு இரவு ...
கூத்தடித்த நண்பர் கூட்டம்...
முன் எப்போதும் போல் ..
இவற்றில் எல்லாம் நெருடல் இன்றி ...
நெகிழ்திருக்க முடிவதில்லை .
சசிகலா

No comments:

Post a Comment