தந்தைதாய் கட்டிவைத்த,
கூட்டுக்குள் வாழ்ந்திருக்கும்,
குருங் குஞ்சி மகவுகளை,
கூர்போடக் காத்திருக்கும்,
வட்டமிடும் வல்லூராய்,
உலாவரும் தீமைகள்,
வெல்லுகின்ற காலமிது!
கிராமத்துப் பள்ளியிலே,
முப்பது ரூபாய் ஊதியத்தில்,
ஊழியராப் பணிபுரிந்த,
அஃரகார வாத்தியாரின்
வாழ்க்கை பயணமிது.
மனைவி உயிரோடில்லை,
பெற்றதுவும் பெண்களாய.
துன்பம் எட்டிப்பார்கும்,
இவர்க்கு வாழ்கையே துன்பமாய்!
வள்ளிக்கு இருபதுவயது,
கடைசிமகள் பத்துவயதில்,
ஆறுநாள் நீராகாரம்
பழகிப்போன உறவாக.
தீபாவளி துணிமணியே
மானம்காக்கும் போர்வையாய்.
மேல்படிப்பு கனவாக
மேலாடை கிழிசல்போல்.
மானம்மட்டும் பாக்கியுண்டு,
அதுவும் கேள்வியானால்?
ஓட்டைக் குடமேந்தி
தண்ணீரெடுக்கப் போனவளை,
வல்லூரொன்று வழிமறித்து,
ஐயர் மறுவீடு அனுப்பமாட்டார்,
வா சின்னவீடாய் அழைத்ததனை
அப்பாவிடம் அழுது சொல்ல,
அரண்டுபோனார் ஆசிரியர்
தந்தையவர் இதயத்தி்ல்,
ஆயயிரமாயிரம் மோதல்கள்,
இயலாமையை ஒருபக்கம்,
வேதனை தொடர்கதையாய்.
விட்டுச்சென்ற மனையாளின்
புகைப்படம் வெறித்துவிட்டு,
குடையெடுத்துப் புறப்பட்டார்
விஷம்கொஞ்சம் வாங்கிவர!
கதவைத்தாள் போட்டுவிட்டு,
கண்ணீரோடு பிள்ளைகளை,
கட்டியணைத்து முத்தமிட்டு,
அமிர்தம்மான விஷந்தன்னை,
குடிக்க எடுத்த வேளையிலே
'சார்' எனறசப்தம்,கை நடுங்க,
கதவைத்திறந்தவர்-போலீ்ஸ்
கண்டு உறைந்துபோனார்!
"என்னைத் தெரியலையா?
நான்தான் சார் முகுந்தன்,
படிக்க வைச்ச நீங்கள்தான்
என்தெய்வம் என்றானவன்!
வள்ளிக்குப் புரிந்தது,
மாடு மேய்க்கும் கந்தனின்
மகனாய் ஒதுங்கிநின்று,
பரிதாபமாய்ப் பார்துநிற்கும்
கீழ்ஜாதி...ஒதுக்கப்பட்டவெனறு!
இன்ஸ்பெக்டர் முகுந்தன்,
இதேகிராமத்தில்....சார்
கேட்டா கோபிக்கமாட்டீங்கே,
உங்கபொண்ணு வள்ளியை
திருமணம் கேட்கவந்தேன்.
சட்டென்று ஏதோஒன்று,
இதயத்தை அடைப்பதைப்போல்,
அவன்காலைக்கட்டி கதறி,
விடமனம் துடிக்க-கைகூப்பி,
உள்ளே வாப்பா என்றார்,
வீட்டுக்கு ஒளியாய்-வள்ளிக்கு காவலனாய் நுழைந்தானவன்!
கூட்டுக்குள் வாழ்ந்திருக்கும்,
குருங் குஞ்சி மகவுகளை,
கூர்போடக் காத்திருக்கும்,
வட்டமிடும் வல்லூராய்,
உலாவரும் தீமைகள்,
வெல்லுகின்ற காலமிது!
கிராமத்துப் பள்ளியிலே,
முப்பது ரூபாய் ஊதியத்தில்,
ஊழியராப் பணிபுரிந்த,
அஃரகார வாத்தியாரின்
வாழ்க்கை பயணமிது.
மனைவி உயிரோடில்லை,
பெற்றதுவும் பெண்களாய.
துன்பம் எட்டிப்பார்கும்,
இவர்க்கு வாழ்கையே துன்பமாய்!
வள்ளிக்கு இருபதுவயது,
கடைசிமகள் பத்துவயதில்,
ஆறுநாள் நீராகாரம்
பழகிப்போன உறவாக.
தீபாவளி துணிமணியே
மானம்காக்கும் போர்வையாய்.
மேல்படிப்பு கனவாக
மேலாடை கிழிசல்போல்.
மானம்மட்டும் பாக்கியுண்டு,
அதுவும் கேள்வியானால்?
ஓட்டைக் குடமேந்தி
தண்ணீரெடுக்கப் போனவளை,
வல்லூரொன்று வழிமறித்து,
ஐயர் மறுவீடு அனுப்பமாட்டார்,
வா சின்னவீடாய் அழைத்ததனை
அப்பாவிடம் அழுது சொல்ல,
அரண்டுபோனார் ஆசிரியர்
தந்தையவர் இதயத்தி்ல்,
ஆயயிரமாயிரம் மோதல்கள்,
இயலாமையை ஒருபக்கம்,
வேதனை தொடர்கதையாய்.
விட்டுச்சென்ற மனையாளின்
புகைப்படம் வெறித்துவிட்டு,
குடையெடுத்துப் புறப்பட்டார்
விஷம்கொஞ்சம் வாங்கிவர!
கதவைத்தாள் போட்டுவிட்டு,
கண்ணீரோடு பிள்ளைகளை,
கட்டியணைத்து முத்தமிட்டு,
அமிர்தம்மான விஷந்தன்னை,
குடிக்க எடுத்த வேளையிலே
'சார்' எனறசப்தம்,கை நடுங்க,
கதவைத்திறந்தவர்-போலீ்ஸ்
கண்டு உறைந்துபோனார்!
"என்னைத் தெரியலையா?
நான்தான் சார் முகுந்தன்,
படிக்க வைச்ச நீங்கள்தான்
என்தெய்வம் என்றானவன்!
வள்ளிக்குப் புரிந்தது,
மாடு மேய்க்கும் கந்தனின்
மகனாய் ஒதுங்கிநின்று,
பரிதாபமாய்ப் பார்துநிற்கும்
கீழ்ஜாதி...ஒதுக்கப்பட்டவெனறு!
இன்ஸ்பெக்டர் முகுந்தன்,
இதேகிராமத்தில்....சார்
கேட்டா கோபிக்கமாட்டீங்கே,
உங்கபொண்ணு வள்ளியை
திருமணம் கேட்கவந்தேன்.
சட்டென்று ஏதோஒன்று,
இதயத்தை அடைப்பதைப்போல்,
அவன்காலைக்கட்டி கதறி,
விடமனம் துடிக்க-கைகூப்பி,
உள்ளே வாப்பா என்றார்,
வீட்டுக்கு ஒளியாய்-வள்ளிக்கு