Thursday 26 June 2014

நினைவூஞ்சல் !


பந்தியில முந்தி வச்சா
பார்வை பட்டு போகுமுன்னே..
முந்தியில முடிஞ்சிவைச்சேன்
முத்தான கவிதை ஒன்னு...
முன்வரிசை ராகத்தில
முத்தழகன் பேரினிக்கும்

பின்ன வரும் பல்லவியில்
பிரசேதி சொல்ல வரும்...
கட்டழகு ஆசமச்சான்
கருத்தழகு மீசமச்சான்....
கன்னக்குழி தேசத்தில-என்
கண்ணிமைய பூட்டிவச்சான்..

அவனோ
காத்தோட சேதி சொல்ல
காதோரம் உரசி நிக்கும்...
பார்த்து பேசி பழகிடத்தான்
பருவ மக(ன்) நெனப்பினிக்கும்.

Friday 20 June 2014

இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?

தோழி தேன்மதுரத் தமிழ் கேட்ட கேள்விகளுக்கு என் பதில்கள்.
1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?
அது வரை இருக்கமாட்டேன். இருந்தால் அப்போதாவது உறவுகளோடு கொண்டாடுவேன்.

(இது வரை அப்படி ஒரு நாள் வருவதே தொிவதில்லை இதில் இல்லாத போது பிறந்த நாளாம் ?)

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
என் தந்தையைப்போல் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க.

3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
எனது இரண்டாவது மகன் செய்த சேட்டைக்காக...

4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
அதுவும் நன்றாகத்தான் இருக்கிறதே.. என்று மின்சாரம் இல்லாத போது மக்கள் எப்படி இருந்தாா்கள் என்று பிள்ளைகளுக்கு சொல்வேன்.

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?
எப்போதும் ஒருவா்க்கு ஒருவா் விட்டுக்கொடுத்து அன்பாய் வாழ்வதே வாழ்வென்பதை சொல்வேன்.

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
வறுமை என்பதை ஒழிக்க வேண்டும் அது தானே ஒழியாது ஆதலால் அவரவா் தேவையை அவரவரே தேட வேண்டும் என்பதை வலியுறுத்துவேன்.

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
கணவரிடம் பிறகு அக்காவிடம்.

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
அதுவும் கடந்து போகும்..


9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
பட்டினத்தாா் பாடல் சொல்வேன்.

10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
சாண்டில்யன் நாவல் படிப்பது , பாடல் கேட்பது.

Thursday 19 June 2014

எங்கோடி நான் தேட.....

தொட்டிலிட்ட கனவுந்தான்
தூங்கத்தான் மறுக்குதடி...

எச்சமிட்ட கன்னத்தை
எட்டி எட்டி பார்க்குதடி...

முந்தாணைய பிடிச்சிகிட்டு
முன்னும் பின்னும் ஓடுதடி...

எப்பத்தான் மடிதருவ
ஏக்கமுடன் கேக்குதடி...

கைக்குள்ள ரேகையாட்டம்
பத்திடுச்சே மருதாணியாட்டம்..

ஆடுபுலி ஆட்டத்துக்கோ
ஆள் சேர்க்கும் தோழியாட்டம்...

நிறைகுடமா நித்திரையில்
நிதமிருக்கும் அடுக்களையில்...

பச்சரிசி பல்லாட்டம்
பருவ மக நெனப்பிருக்க..

எங்கோடி நான் தேட
என்னுள்ளே கலந்தவள..