Saturday 31 December 2011

பிரிவு மடல்

2011

சில நேரங்களில்
அழ வைத்தாய் ..
சில நேரங்களில்
சிரிக்க வைத்தாய் ...
அனுபவங்களை அள்ளித்தந்தாய் ....
அழும் போது ஆறுதல் சொல்ல  ...
நண்பர்கூட்டத்தை கொடுத்தாய் ..
உறவுகளுக்குள் உழல வைத்தாய் ...
உண்மை நிலை புரிய வைத்தாய் ...
உன்னை விட்டு பிரிவதில்
துளியும்  சம்மதமில்லை தான்
எனினும் என் செய்ய ..
காலச்சக்கரம் எனை
இழுத்துக்கொண்டு செல்கிறது ...
என் தாய் எனை தமிழுக்கு அறிமுகம் செய்தால் ..
நீயே எனை தமிழ்மணத்தில்
கவிதைக்கு அறிமுகம் செய்தாய்
உன்னை என்றென்றும் மறவேன் .
இப்படிக்கு
சசிகலா

15 comments:

  1. புத்தாண்டிலும் புதிய புதிய கருத்துள்ள கவிதைகளை எழுதி கலக்குங்க, வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  2. அருமையான பகிர்வு
    என் தாய் எனை தமிழுக்கு அறிமுகம் செய்தால் ..
    நீயே எனை தமிழ்மணத்தில்
    கவிதைக்கு அறிமுகம் செய்தாய்//

    தமிழ் மணத்தில் மட்டுமோ
    தமிழ் ஆர்வலர்கள் மனத்திலும்..
    வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  3. 2012 ஆம் ஆண்டு ஒரு இனிய வரவாக அமையட்டும்.
    ஆண்டு முழுவதும் மானுடம் தழைக்கும் நல்லாண்டாக மலரட்டும்.

    அன்பன், கா.ந.கல்யாணசுந்தரம்.

    ReplyDelete
  4. இந்த ஆண்டிலும் சிறப்பான கவிதைகளைத் தர வாழ்த்துகள்..

    ReplyDelete
  5. அருமை...அருமை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. பிரியும் வருடத்துக்கு பிரியாவிடை வழங்கி, கடந்தவற்றைப் பற்றிய பின்னோக்கிய பார்வை அற்புதம். பாராட்டுகள் தோழி.

    ReplyDelete
  7. இரவு வானம்,Ramani ,!♥!தோழி பிரஷா,ஸ்ரவாணி,
    கா ந கல்யாணசுந்தரம் ,மதுமதி,நண்டு @நொரண்டு -ஈரோடு,கீதா......

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுடன் வாழ்த்துகூரிய அனைத்து அன்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்துடன் உங்கள் சசிகலா

    ReplyDelete
  8. நினைவுகளுக்கு பிரிவெழுதல் கூடுமோ?

    ReplyDelete
  9. நினைவுகள் பிரிவெழுதல் என்பது கனவே.

    ReplyDelete
  10. D.G.V.P.சேகர் உண்மைதான் நண்பரே மிக்க நன்றி

    ReplyDelete