Wednesday 30 November 2011

எந்திரத்தனமான உலகில்

எந்திர தனமாகி போன வாழ்க்கை,
எழுந்திருக்கும் போதே ..
இட்லிக்கு தொட்டுகொள்ள ..
என்ன செய்வது ...
என ஆரம்பித்து ..
மதிய உணவு ..
இரவு சிற்றுண்டி ,
என அணைத்து ஏற்பாடுகளையும் ..
முடித்தாக வேண்டும் ...
எட்டு மணிக்குள் ,
அதற்குள் ...
நாளைய பள்ளி சீருடைக்காய்..
நனைந்து கொண்டிருக்கிறேன் ..
கிணற்று அடியல் ..
அத்தனையும் முடித்து நிமிர்வதற்குல் ..
அவசர அவசரமாய் ..
வந்து போனது பள்ளி ஊர்தி .
அடித்து பிடித்து ...
அரைகுறை அலங்காரத்தோடு ..
வந்து சேர்கிறேன் அலுவலகம் .
அங்கும் இங்குமாய் ..
ஓடி கலைத்து ..
அடைத்து போன ..
டப்பா உணவிலயும் மீதம் வைத்து ...
உண்டு முடிபதர்க்குள் ...
பள்ளி வாகனம் வந்திருக்குமா ?
பால் எடுத்து வைத்தோமா?
என பல யோசனைகளோடு ..
கழிகிறது மீத நேரமும் ...
வயற்றை  கிள்ளும் பசியோடும் ,
வாடிய முகத்தோடும் ..
வாசலை நெருங்குகிறேன் ..
அம்மா வென ஓடி வந்து ..
கழுத்தை  கட்டி ...
கன்னம் நனைக்கும் ...
அவன் முத்தத்தோடு சேர்ந்து ...
ஒட்டிகொல்கிறது ...
என்னில் ஒளிந்திருந்த ...
சந்தோசமும்  ...
சுறுசுறுப்பும் .....!
 

2 comments:

  1. ஒட்டிகொல்கிறது ...
    என்னில் ஒளிந்திருந்த ...
    சந்தோசமும் ...
    சுறுசுறுப்பும் ...//.

    மிக் மிக அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உங்களின் வாழ்த்துரையோடு சேர்ந்து ஒட்டிகொல்கிறது உற்சாகமும் ...
    மிக்க நன்றி .

    ReplyDelete