உனக்கும் எனக்குமான
இடைவெளியை இட்டு நிரப்ப
நினைவுகளை உடனழைக்கிறேன்
இடம் வலம் என அதுவும்
தனக்கொரு இடத்தை தேடியபடி.
மழலையின் நடனமாய்
நானும் ரசித்து நிற்க.
நீயோ எனைப்பார்த்து
காற்றில் அசைந்தாடும்
மலர்க்கொத்து என்கிறாய் - உன்
வர்ணனையில் வழுக்கி விழுந்த
நாணத்தை மறைக்கத்தெரியாது.
மௌன மடலவிழ்க்குமுன் -நீயோ
இதழ் மெத்தையில் உறங்கும்
வார்த்தைகளை எழுப்பிவிடாதே என்கிறாய்.
கவியரங்கத்தில் நுழைந்த ரசிகையாய்
நமக்கான ஒவ்வொரு தனிமையிலும்..
விமர்சிக்கவும் மறந்து வியந்து நிற்கிறேன்.
தனிமை இனிமையே சசி !
ReplyDeleteஉங்கள் வற்றாத கவிதை ஊற்றிற்கு
என் சல்யுட் !
காதலை அழகாகச் சொல்லும் கவிதை
ReplyDeleteத.ம. 3
ReplyDelete
ReplyDeleteவணக்கம்!
அழகிய சொற்கள் அணிந்தன ஆடைகள்!
பழமாய் இனிக்கும் படைப்பு
mmm.....
ReplyDelete
ReplyDeleteஅருமை. தனிமைக்கு நினைவுகள் துணை. மன வெறுமையாகும் மௌன நிமிடங்களுக்கு வார்த்தைகள் மாற்றாகலாம்!
//மௌன மடிலவிழ்க்குமுன்//
[மௌன] மடலவிழ்க்குமுன்..?
Ummmmmmm
ReplyDelete//கவியரங்கத்தில் நுழைந்த ரசிகையாய்
ReplyDeleteநமக்கான ஒவ்வொரு தனிமையிலும்..
விமர்சிக்கவும் மறந்து வியந்து நிற்கிறேன்.//
super super .........
//நினைவுகளை உடனழைக்கிறேன்
இடம் வலம் என அதுவும்
தனக்கொரு இடத்தை தேடியபடி//
fantastic ......
sorry am typing in english i will come back and tell more ...
நினைவுகளை உடனழைக்கிறேன்
ReplyDeleteஇடம் வலம் என அதுவும்
தனக்கொரு இடத்தை தேடியபடி.
கவியரங்கத்தில் நுழைந்த ரசிகையாய்
விமர்சிக்கவும் மறந்து வியந்து நிற்கிறேன்.
அருமை
:)
ReplyDeleteகடைசி 3 வரிகள் அற்புதம் சசி !
ReplyDelete