மீண்டும் ஒரு பதிவர் சந்திப்பு ஆமாங்க பிரபலங்களை சந்திக்க கிடைத்த ஒரு அறிய வாய்ப்பு நேற்று நிகழ்ந்தது. புத்தக கண்காட்சியில் மிகுந்த மக்கள் கூட்டத்திற்கு நடுவே ஆங்காங்கே மிட்டாய் கடையை முறைப்பதைப்போல அங்காடியை பார்வையிட்ட படி நம்ம உறவுகளை சந்தித்த நிகழ்வு பெரு மகிழ்வளித்தது. முதல் சந்திப்பில் தான் அறிமுகம் இந்த சந்திப்பில் நலம் விசாரித்து நகைத்துப் பேசி நிகழ்வு உற்சாகமாக தொடர்ந்தது.
சக பதிவர்களின் புத்தக அறிமுகம் இனிதே நடந்தது. பிறகு அகம் குளிர்ந்தது போக தொண்டையையும் குளிர்பானத்தால் குளிர்வித்து பிரிய மனமில்லாது விடைபெற்றோம்.
அகிலா , கோவை சரளா , கோவை நேரம், கண் கொத்திப் பறவை மற்றும் கவியாழி அவர்களின் புத்தகமும் சகோவின் சரிதாயணமும்
மேலும் சில புத்தகங்களையும் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். ரயில் நிலையம் வரை காரில் அழைத்து வந்து விடைகொடுத்த புலவர் ஐயாவிற்கும் கவியாழி நண்பருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆஹா.... மீண்டும் பதிவர் சந்திப்பு...
ReplyDeleteமிக்க சந்தோஷம்....
கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள் !
ReplyDeleteவிழா முடிந்ததும் முதல் பதிவு அருமை .வாழ்த்துக்கள்
ReplyDeleteநண்பர்கள் அதிகளவில் வந்திருந்தது கலகப்பாக இருந்தது.
ReplyDeleteஇந்த ஒட்ற்றுமை வாழ்க ஓங்குக .......வாழ்த்துக்கள்
ReplyDeleteம்ம் கலக்குங்க
ReplyDeleteத ம 3
ReplyDeleteசசி...அரிய சந்தர்ப்பத்தை தவறவிட்டேன்...கவியாழி அவர்கள் வருவதாக சொன்னார்கள். ஆனால் ரொம்ப நேரம் கழித்தே வரமுடிந்தது என்னால்.....
ReplyDeleteபடங்களுடன் பதிவு அங்கு வரமுடியாத
ReplyDeleteகுறையக் கொஞ்சம் தீர்த்தது
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
அனைவரும் மிகவும் உவகையோடு உரையாடினோம் அனைவருக்கும் நன்றி !
ReplyDeleteபுலவர் இராமானுசம், மெட்ராஸ்பவன் சிவகுமார், பிலாசபி பிரபாகரன், அஞ்சாசிங்கம் செல்வின், பட்டிக்காட்டான் ஜெய், சத்ரியன், நான், மதுமதி, ஆரூர் மூனா செந்தில், கேபிள் சங்கர், டி.என்.முரளிதரன், தமிழ்ராஜா, சசிகலா, சமீரா, பத்மஜா, தமிழரசி என்று இத்தனை பேரும் கலந்து கொண்டதை விரிவாகக் குறிப்பிட மறந்து விட்டீர்களே தென்றல். புகைப்படங்கள் இணைத்தது வெகுசிறப்பு. நீண்ட நாட்களின் பின் மனம் விட்டுப் பேசி, வாய்விட்டுச் சிரித்து மனநிறைவுடன் கழிந்தது என் பொழுது அங்கே. அனைவருக்கும் என் இதயம் நிறை நன்றி.
ReplyDeleteநான் தான் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பை இழந்து விட்டேன்
ReplyDelete
ReplyDeleteம்ம்ம்..கலக்குங்க !
என்ன புத்தகங்கள் வாங்கினீர்கள் என்று
கொஞ்சம் சொல்லி இருக்கக் கூடாதா ?
மீண்டும் பதிவர் சந்திப்பா? சந்தோஷம்.வாழ்த்துக்கள்! நானும் நேற்று மதியம் சுமார் 3 மணிக்கு புத்தகக் கண்காட்சிக்கு துணைவியாருடன் சென்றிருந்தேன். ஆனால் நமது பதிவுலக நண்பர்கள் யாரையும் பார்க்கமுடியாமல், 5 மணி வாக்கில் புத்தகங்கள் வாங்கிக்கொண்டு திரும்பிவிட்டேன். ஒருவேளை இன்னும் சிறிதுநேரம் தங்கியிருந்தால் உங்களையெல்லாம் சந்திதிருப்போனோ என்னவோ.
ReplyDelete
ReplyDeleteவணக்கம்!
நுால்களின் காட்சியை நோக்கிக் களிப்பதுவே
நாள்களில் பெற்றநன் னாள்!
அட! நான் கூட போட்டோவில் இருக்கேன்.
ReplyDeleteபலரையும் சந்தித்தது மகிழ்ச்சி
மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
ReplyDeleteசென்னையில் இருக்கும் பதிவர்களின் பொழுது போக்கே, புத்தக கண்காட்சிக்குப் போவதுதானா? கண்காட்சி முடிந்த பிறகு எங்கு செல்வார்கள்?
ReplyDeleteமகிழ்ச்சியாக இருக்கின்றது.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteமகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி .................
ReplyDeleteஎன்னை விட்டுட்டா............ நல்லா இருங்க!!! :-))
ReplyDeleteகொடுத்து வைத்தவர்கள்!
ReplyDeleteகேபிள் அண்ணன் எல்லா போட்டோலயும் சிரிக்கிறாரு...
ReplyDeleteபதிவர் சந்திப்பன்று நடந்த 'தென்றல்' வெளியீட்டை முன்னிட்டு விரைவில் ஆளுக்கு ஒரு அண்டா விலையில்லா ஜூஸ் தரும் விழா நடைபெறும் என்று புத்தக கண்காட்சியில் அறிவித்த தங்களுக்கு நன்றி.
ReplyDeleteஅப்படியா அண்டாவா போதுமா ?
Deleteமகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துகள்:)!
ReplyDelete