அத்திப்பழம் பெருத்திருக்கு
அதிகாலை வானம் விழித்திருக்கு
தண்ணி பாச்ச போகணுமே
தலப்பா எடு சின்னப்புள்ள!
நீச்ச தண்ணி எடுத்து வாரேன்
குடிச்சிட்டுப் போங்க மாமா!
சுட்டெரிக்கும் சூரியனால்
சுருண்டிடுமே செங்கதிரும்
சேத்து நடை வெடிக்குமுன்னே-போய்
தண்ணீர் பாச்சணுமே செல்லப்புள்ள!
நாத்து நட நானும் வரேன்
கோகிலமும் கூட வரா
சேர்ந்துபோவோம் ...
செத்த இரு மச்சான்!
ஆத்தங்கரை குளிக்கபோயி
அரைநாழி காக்க வைப்ப
எட்டுமொழ புடவ சுத்தி
என்னையும் தான் ஏங்க வைப்ப!
ஒத்த பொம்பள புறப்படுமுன்
ஒரு அறுவடையும் முடிஞ்சிடுமே
பொறுத்து வாடி பொம்மியம்மா
கண்ணே பூமியங்கே காத்திருக்கும்!
அருமையான நாட்டுப்புற கவிதை!
ReplyDeleteபிரமாதம்..
ReplyDeleteகிராமத்து சூழலை அழகா கொண்டு வந்திருக்கீGக சசி கவிதை ரொம்ப அருமை..
ReplyDeleteஅருமையான ஒரு விவசாயி அழகாக பாடும் பாடல்...நாத்து நட போவதற்கு பொஞ்சாதி கிட்ட சொல்லி விட்டு போகும் அவனின் அந்த இயல்பான பேச்சும்...சந்தடி சாக்கில் பொம்பளைங்க எங்காச்சும் கெளம்பனுமுன்னா எவ்வளவு நேரம் ஆக்குவாங்க என்கிறதையும் சொன்னானே... அதுதான் சிறப்பு...
ReplyDeleteவேலைக்கு போவதற்கு கடிகாரம் பார்க்காமல்
நேரத்தை உணர்வதை சூரியனும் உதிச்சிருப்பதை பார்த்து சூரியன் தலைக்கு நேரே வந்தா உச்சி பொழுதாயிருச்சு என்று வாழ்ந்தவர்கள் தான் நம் முன்னோர்கள்.. ஓடவில்லையா அவர்களின் காலங்களும்.. இப்போதும் ஓடத்தான் செய்கிறது.. நிலைதடுமாறி... அருமையான பாடல் வரிகள் சசி.. பாராட்டுக்கள்...
தேவாதி ரஜன் அவர்களின் பின்னூட்டம்
ReplyDeleteமிக மிக அருமை
அருமையாக ரசித்து எழுதியுள்ளார்
என் கருத்தும் அதுவே
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நன்றி தங்களின் அன்பான வாழ்த்தினை தலை சாய்த்து ஏற்றுக்கொள்கிறேன்..என்றுமே...
Delete// ஒத்த பொம்பள புறப்படுமுன்
ReplyDeleteஒரு அறுவடையும் முடிஞ்சிடுமே// ரொம்ப ரொம்ப ரசிச்சுப் படிச்சேன்.. நாட்டுபுறப் பாடலில் பெண்களின் இயல்பையும் உழவனின் கடமை உணர்வையும் சேர்த்துக் கூறி இருப்பது ரசித்தேன் படித்தேன் மகிழ்ந்தேன்
TM 4
நல்ல கவிதை... எங்கள் கிராமமே கண் முன் வருகிறது...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி... வாழ்த்துக்கள் ! (த.ம. 6)
அடாடா... கிராமத்தைக் கண்ணால பாக்காம வாழற என்னை மாதிரி ஜீவன்களுக்கு இந்த மாதிரிக் கவிதைகள் வெல்லக்கட்டி அக்கா. அடிக்கடி வெல்லக் கட்டி தாங்க. (என் தளம் வந்து எல்லாக் கருத்தையும் பாத்தீங்களா?)
ReplyDeletekiraamathukku azhaithj sentrathu-
ReplyDeletevaazhthukkal!
அழகான நடையில் அருமையான நாட்டுப்புறக்கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமண்ணின் மைந்தர்களான கிராமத்து ஜனங்களின் எளிய நடையில் அழகான கவிதை மனதைக் கொள்ளையடித்தது.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅருமை.
ReplyDeleteகிராமச் சூழலை மனதில் கொண்டு வந்து அழகாக எடுத்துரைத்த இந்த கிராமிய கவிதை என்னையும் தான் ஏங்க வைக்கிறது
ReplyDeleteஎன்ன இயல்பான நடை!.கிராமிய மணம் கவழும் அற்புதமான நாட்டுப்புறக் கவிதை.
ReplyDeleteகாத்திருந்த பொழுதில்
ReplyDeleteபூத்து வந்த பாடல் உங்களது சசிகலா.
சூப்பர்ங்க.
சீக்கிரமா முதலிடத்தை பிடிக்க
ReplyDeleteவாழ்த்துக்கள்! தமிழ் மணத்தை
சொன்னேன்!
இதைத்தான் கிராமிய எக்காளப் பாடல்கள் என்பார்கள்..
ReplyDeleteஒருவருக்கு ஒருவர் கிண்டலடித்து பாடக்கூடிய பாடல்கள்..
அருமையா இருக்கு சகோதரி..
அச்சச்சோ... என்னப்பா இப்படி எழுதிட்டீங்க... பாவம் பொம்மி, மச்சானோடு சோடி போட்டு போலாமுன்னு ஆசையா இருந்திருப்பா...
ReplyDeleteகிராமிய நடையில் மனங்கவரும் வரிகள். காதலும் கடமையும் போட்டி போடும் அழகு. பாராட்டுகள் சசிகலா.
அருமையான நாட்டுப் புற கவிதை. வாழ்த்துகள்.
ReplyDeleteகிராமிய மணம் கமழ கமழ அழகானதொரு கவிதை படிப்பவர்களை வயல் காட்டுக்கே இழுத்து சென்று விடும்.
ReplyDeleteகிராமத்து நடையில் கிராம வெள்ளந்திகள் பேசுவது போலவே உள்ளது உங்கள் எழுத்து...
ReplyDeleteஅழகான கிராமத்து கவி....
ReplyDeleteஅருமை அக்கா....
கிராமிய மணம் அற்புதம்!நன்றி!
ReplyDelete