அத்தானும் நீதானே
சட்டை பொத்தான போடாம..
நானும் பித்தாகிப் போனேனே!
(என் அத்தானும்)
அம்மிக்கல்லும்
கைக்கு அடங்காம
உருண்டு ஓடுதே!
உள்ளமும் உருண்டு ஓடுதே!
(என் அத்தானும்)
ஆட்டுக் கல்லும்
எனை பார்த்து
அழகா சிரிக்குதே!
(என் அத்தானும்)
மத்தியான வேளையிலே
மத்தளம் கேட்குதே
காலி குடமிரண்டு
மத்தளமடிக்குதே...!
(என் அத்தானும்)
விக்கலடிக்கும் நேரத்திலும்
மனம் விம்மித்துடிக்குதே
உனை எண்ணித்துடிக்குதே!
(என் அத்தானும்)
குளத்துப்பக்கம்
குளிக்கப்போனேன்
மீனும் கும்மி அடிக்குதே
என் மனமும் துள்ளி குதிக்குதே !
(என் அத்தானும்)
கவியரங்கத்தில் கலந்துகொள்ளும் தோழர்கள் 9894124021 மதுமதி(தூரிகையின் தூறல்)என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.வாசிக்கப்படும் கவிதை முப்பது வரிகளுக்கு மிகாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
ஹஹஹ! அருமை!
ReplyDeleteமுதல் வருகையும் பாராட்டும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteசத்தமாய்தான் முழங்குது மத்தளம்
ReplyDeleteஅவ்வளவு சத்தமாவா கேட்குது.
Deleteவருடும் தென்றலைப்போன்றதொரு அழகான பாடல், கிரமிய நடை தனி அழகு தான் சசி...
ReplyDeleteரசித்து கருத்திட்டமை கண்டு மகிழ்ந்தேன். நன்றி சகோ.
Deleteஅருமையிலும் அருமை...மனித மனம் பொதுவாக எப்போதுமே இன்பமெனும் கும்மாலத்தையே விரும்பும் தன்மை கொண்டது.. அதனை அழகாக தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்... அதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.. வாழ்க்கையில் இன்பதுன்பத்தை ஒரேமாதிரியாக ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை குறைத்துவிட்டது என்பதையும் மறைமுகமாக சொல்லி இருக்கிறீர்கள்...
ReplyDeleteதங்கள் வருகையும் விரிவான கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன். நன்றி.
Deleteஅடேங்கப்பா... எளிமையான வரிகளில் மனசின் குதியாட்டத்தை அழகான கிராமியப் பாடலாகத் தந்திருப்பது அருமை தென்றல். மிக ரசித்தேன்.
ReplyDeleteஅருமை என பாராட்டி அழகாய் வாழ்த்திய வசந்தத்திற்கு நன்றி.
Deleteபாட்டும் கிராமிய மண்வாசனையும் ம்ம்ம்... அருமை சகோ
ReplyDeleteதங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றி சகோ.
Deleteஅழகு...
ReplyDeleteதங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றி சகோ.
Deleteஇன்னுமோர் கவிதை செய்தாய் !
ReplyDeleteஎத்தனையோ மனதை கொய்தாய் !
இனிய தமிழ் என்றும் தருவாய் !
தென்றலும் வீசட்டும் -
என்றும் நிலையாய்!
அழகு வரிகளால் தென்றலை வாசித்த தங்களுக்கு நன்றி.
Deleteஅழகான கிராமிய பாடல்
ReplyDeletetha ma 3
தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றி சகோ.
Deleteமத்தளம் - கும்மாளம்
ReplyDeleteவாழ்த்துக்கள்
தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றி சகோ.
Deleteஅழகான கவிதை..தன்னான..தானான..தாளம் போட்டு படிக்க கவிதை நடை அருமை சசி..
ReplyDeleteதங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றி சகோ.
Deleteகிராமத்து பாடல் எழுத உங்களிடம் கற்றுக்கொள்ளலாம் என நினைக்கிறேன்..சிறப்பு..
ReplyDeleteதாங்கள் எனக்கு குரு நீங்களே இப்படி சொல்லளாமா?
Deleteபழைய சினிமா பாடல் நினைவுக்கு வந்தது!
ReplyDeleteசா இராமாநுசம்
ரசித்து கருத்திட்டமை கண்டு மகிழ்ந்தேன் ஐயா. நன்றிங்க ஐயா.
Deleteஎன் மனம் குதியாட்டம் போடத் துவங்கிவிட்டது
ReplyDeleteஅருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ரசித்து கருத்திட்டமை கண்டு மகிழ்ந்தேன் ஐயா. நன்றிங்க ஐயா.
DeleteTha.ma 6
ReplyDeleteஅருமை அக்கா உங்கள் அத்தான் அதான் மாமா நலமா????
ReplyDeleteநல்லா இருக்காங்க பா.
Deleteஅழகிய பாடல் ! நன்றி ! வாழ்த்துக்கள் ! (TM 7)
ReplyDeleteவருகையும் வாழ்த்தும் மகிழச்செய்தது. நன்றிங்க.
Deleteமண்வாசனை...
ReplyDeleteவருகை மகிழச்செய்தது. நன்றிங்க.
Deleteகிராமத்து மண(ன)ம் வீசும் அழகிய கவிதை பாடல் அருமை !
ReplyDeleteஅன்புடன்
விஷ்ணு
வருகையும் வாழ்த்தும் மகிழச்செய்தது. நன்றிங்க.
Deletegood
ReplyDeleteவருகையும் வாழ்த்தும் மகிழச்செய்தது. நன்றிங்க.
Deleteநல்ல கவிதை.....
ReplyDeleteபதிவர் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துகள்.
பதிவர் சந்திப்புக்கு தங்கள் வருகையும் எதிர்ப◌ார்க்கிறேன்.
Deleteஅம்மி ஆட்டுக்கல் இதெல்லாம் எப்படி இருக்கும்னு பவர்கட் வந்ததால நிறைய பேர் தெரிஞ்சுகிட்டாங்களாம்.(குறிப்பா ஆம்பளைங்க)
ReplyDeleteநாட்டுப்புறப் பாணிக் கவிதை நன்று.
குசும்பான கருத்துரை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteசொல்லவே இல்லை எப்போதிருந்து திரைப் பாடல்கள் எழுத தொடங்கினீர்கள்
ReplyDeleteஇப்போது சொல்லி விட்டேன் . சகோ.
Deleteமனம் காதல் களியில் இருக்கையில் பார்க்கும் எல்லாம் பரவசம்தான்.கேட்கும் எல்லாம் தேனிசைதான்.அருமை
ReplyDeleteஐயாவின் வருகையும் ரசிக்க வைத்த கருத்தும் மகிழச்செய்தது. நன்றி ஐயா.
Deleteத.ம.8
ReplyDeleteதனிமையில் மகிழ்ச்சியில் தோன்றிய கும்மாளமாய் ஒரு கவிதை! சென்னை பதிவர் சந்திப்பிற்கு நன்றியுரை நீங்கள். நல்ல தேர்வு ! வாழ்த்துக்கள்!
ReplyDeleteபதிவர் சந்திப்புக்கு தங்கள் வருகையும் எதிர்ப◌ார்க்கிறேன்.
Deleteஇதைத்தான் கிராமிய எக்காளப் பாடல்கள் என்பார்கள்
ReplyDeleteகாதலின் உள்ள உணர்வை அழகாய்
உச்சரிக்கும் ஏற்றுகையான வார்த்தைகள்...
திரைப்பாடலுக்கு ஒப்பான
அழகிய பாடல் சகோதரி...
அண்ணா பதிவர் சந்திப்புக்கு தங்கள் வருகையும் எதிர்ப◌ார்க்கிறேன்.
Delete