உயிர்முயற்சி இருந்தால் மட்டுமே
முட்டையிலிருந்து குஞ்சும்
வெளிவர முடியும் !
கருவிலிருக்கும் குழந்தையும்
அசைவோடு இருந்தால் மட்டுமே
அகமகிழ்வாள் தாயும் !
நிலத்தில் வீழ்ந்ததும்
நிமிர்ந்தெழுந்து துள்ளி
ஓடும் கன்றுக்குட்டியையே
தாய்ப்பசுவும் சேர்த்தணைக்கும் !
பசியென்றுணர்த்த
வாய்திறந்தால் மட்டுமே
தாய்ப்பறவையும் ஊட்டிவிடும் !
மலரும் பூக்கள் எல்லாம்
மணிமகுடத்தை மட்டுமே
அலங்கரிக்க மலர்வதில்லை!
தோல்வியே முன்நின்றாலும்
துவண்டுவிடாமல் முயற்சிப்போம்
ஆமையைப் போல்.
உயிரில்லா பொருட்களையே
உழல வைக்கும் நம் இனம் !
உதிரத்தில் தமிழ் உணர்விருக்க
உறக்கமென்ன மானிடரே
உயிர்த்தெழுவாய் தமிழா
தமிழினம் வாழ்ந்திடவே!
முயற்சி இருந்தால் முன்னேற்றம் என்பதை ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க சசி..அருமை..
ReplyDeleteதோல்வி என்பது
ReplyDeleteதுவண்டுவிட அல்ல
வெற்றி போரட்டத்தின்
வேர்வையை துடைக்க!
மரணத்தை நினைத்து
மலர்கள் அழுவதில்லை
வீழ்ந்துபோனாலும்
வீரிய விதைக்கு
வித்திட்டுபோகின்றன!
என்ற சிந்தனையுடன் இனிய காலை வணக்கம்
தங்களின் முதல் வருகையும் முத்தான கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி நட்பே.
Deleteஉதிரத்தில் தமிழ் உணர்விருக்க... அருமையான வரிகள். உறக்கம் கலைந்து தமிழினம் தலைநிமிர தட்டி எழுப்பும் கவிதை வரிகள். சூப்பர் தென்றல்.
ReplyDeleteஉற்சாகம் தரும் வரிகள் கண்டு மகிழ்ந்தேன். நன்றி வசந்தமே.
Deleteகருத்துள்ள கவிதை...
ReplyDeleteபிடித்த வரிகள் :
/// மலரும் பூக்கள் எல்லாம்
மணிமகுடத்தை மட்டுமே
அலங்கரிக்க மலர்வதில்லை! ///
பகிர்வுக்கு நன்றி சகோதரி... தொடருங்கள்...
வாழ்த்துக்கள்... (த.ம. 1)
தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteஉங்கள் கவிதையை படிக்கும் பொழுது பாரதிதாசனின் வரிகள் தான் நியாபகம் வருகிறது
ReplyDeleteஉதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா
பாரதிதாசனின் வரிகளை நினைவுபடுத்தியமைக்கு நன்றிங்க.
Deleteஉறக்கத்தைத் துறந்து உயிர்த்தெழுந்துவிட்டேன்..
ReplyDeleteஅப்படியா மகிழ்ச்சிங்க.
Deleteகவிதையின் வரிகள் அனைத்தும் உணர்ச்சி உள்ளதாக உள்ளது...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteகருவிலிருக்கும் குழந்தையும்
ReplyDeleteஅசைவோடு இருந்தால் மட்டுமே
அகமகிழ்வாள் தாயும் !//
உண்மையான வரிகள்.
கவிதை அருமை.
தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteஎழுச்சி வரிகள் முயன்றால் அனைத்தும் சாத்தியம்...
ReplyDeleteஅழகிய கவிதை
தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteஅருமையான உவமைகள்
ReplyDeleteமிக அருமையாகக் கையாண்டிருக்கிறீர்கள்
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ஐயாவின் தொடர் வருகையே எனக்கு ஆசிர்வாதமாய். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா.
Deletetha.ma 6
ReplyDeleteசோம்பித்திரிவோரை பெற்றவளும் ஏற்பதில்லை அவனையும் அவனின் செயலையும். மாறாக அவனுக்கு ஊக்கத்தை ஊட்ட முயற்சி செய்வார்.
ReplyDeleteஇதுபோன்ற மூடர்களை திருத்தும் முயற்சி நல்லதொரு வேலைதான் சசி.. எனக்கென்னவென்று போகும் இந்த காலத்திலும் மற்றவர்களுக்காக குரல் கொடுக்கும் உங்களின் உன்னத பணி சிறக்க என் வாழ்த்துக்கள். தொடரட்டும் இந்த சேவைப்பணி...
விலங்குகளோ, பறவைகளோ பிறந்த சில மணிநேரத்தில் எழுந்து நின்று விடுகின்றன. ஆனால் நம்முடைய மனித இனம் மட்டுமே எழுந்து நிற்பதற்கே மாதக்கணக்கில் ஆகிறது... அப்பேற்பட்ட உயர் பிறவியில் பிறந்த நாம் இன்னமும் சுறுசுறுப்பின்றி இருந்தால் நாம் கட்டியிருக்கும் துணியும் காணாமல் போய்விடும். காலம் அதுமாதிரி ஒரு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. மனிதா இனியாவது காலம் தெரிந்து விழித்துக்கொள் என்று சொல்லி இருக்கிறீர்கள்.. பாராட்டுக்கள் மேலும் உங்களுக்கு சசி...
தெளிவு படுத்தும் தங்கள் வரிகள் அருமை. நன்றி நட்பே.
Deleteஉறங்கி கிடக்கும் மானிடரின் தமிழ் உணர்வை தட்டி எழுப்பும் புயலாக வீசிய தென்றல் சசிக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteசகோவின் பாராட்டு கண்டு மகிழ்ந்தேன்.
Deleteஅருமையான கவிதை சகோ (TM 7)
ReplyDeleteதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteமிகவும் அருமையான வரிகள்.
ReplyDeleteதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteவாசிக்கும்போதே உடல் ஒருமுறை சிலிர்த்தது. மிகவும் அற்புதமான உவமைகளைக் கையாண்டிருக்கிறீர்கள் சசிகலா. சோர்ந்து விழும் மனதை தூக்கி நிறுத்தும் வரிகளுக்குப் பாராட்டுகள்.
ReplyDeleteசகோவின் உணர்ச்சிமிகும் வரிகள் கண்டு மிகவும் மகிழ்ந்தேன் நன்றி சகோ.
Delete// உயிர்த்தெழுவாய் தமிழா
ReplyDeleteதமிழினம் வாழ்ந்திடவே! //
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு – என்று முழங்கிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வழியில உங்கள் உணர்வும் உதித்தெழுகின்ற கவிதை வரிகளும் இருக்கின்றன.
உற்சாகம் தரும் வரிகள் கண்டு மிகவும் மகிழ்ந்தேன் நன்றிங்க.
Delete//உயிரில்லா பொருட்களையே
ReplyDeleteஉழல வைக்கும் நம் இனம் !
உதிரத்தில் தமிழ் உணர்விருக்க
உறக்கமென்ன மானிடரே
உயிர்த்தெழுவாய் தமிழா
தமிழினம் வாழ்ந்திடவே!//
அற்புதமான தென்றல் .... அருமை சசி அக்கா ...
எழுச்சி கவிதை - அருமைங்க சசிகலா.
ReplyDeleteநாவுறங்கா தமிழனின் தூக்கம்
ReplyDeleteநாளையாயினும் கலையுமா?
நாடாளப் பிறந்த தமிழன்
நாலாய்பிரிதல்நியாயமா?
நாசங்களும் மோசங்களும்
நாம் தூங்கிப் போனதாலே!
கவியின் அழைப்பு-அழகு!
எழுவானா தமிழன்?
வாழுமா தமிழ்?
தன்னம்பிக்கையூட்டும் எழுச்சியான வரிகள்! அழகான அற்புதமான கவிதை! வாழ்த்துக்களும் நன்றியும்!
ReplyDeleteசொன்னதெல்லாம் தமிழனுக்கு மட்டும்தானா.?
ReplyDeletethannampikai kavithai arumai!
ReplyDeleteசிறந்த கவிதை. பாராட்டுகள்.
ReplyDeleteகவிதை என்று ஏதோ எழுதி கழுத்தறுப்பவர்கள் மத்தியில் நல்ல கருத்தை (கரு)க'விதை' யாக மனதில் பதிக்கும் உங்களுக்கு மனம்திறந்த பாராட்டுக்கள். உயிர்த்தெழுவாய் தமிழா என்ற வரிகளை படிக்கும் மனமும் உடலும் சிலிர்த்தெழுகிறதே....உவமைகள் அருமையாக இருக்கின்றன.
ReplyDeleteஅற்புதமான வரிகள்! என்னுடைய வலைப்பூவில் உள்ள விழுந்ததும் எழுந்திரு! எனும் கவிதையை நேரம் கிடைக்கும்போது படிக்க வேண்டுகிறேன்!
ReplyDelete