சிலுசிலுணு காத்தடிக்குதே கண்ணம்மா
தளதளணு விளைஞ்சி நிக்கிர நெல்லம்மா
சலசலணு நெளிந்து வரும் நீரம்மா
கமகமணு மணம் வருதே பூவாசமா ?
தடதடணு அடிச்சிக்குதே கதவம்மா
சடசடணு வந்திடுதே மழையம்மா
மடமடணு எடுத்த வை விதநெல்லம்மா
கடகடணு ஓட்டமிடும் வண்டியம்மா !
குளுகுளுனு குளிரெடுக்குதே வள்ளியம்மா
கூவிக் கூவிக் மருகி நிக்கும் குயிலம்மா
தத்தித் தத்தி நடந்து வரும் மயிலம்மா
தாவியணைக்க பக்கம் வாடி செல்லம்மா !
மனசுக்குள்ள லேடி டி.ஆர்ன்னு நினைப்பு. இரட்டைகிளவிலாம் போட்டு கவிதை எழுதுறா.
ReplyDeleteஅய் அக்கா எனக்கு புதுசா ஒரு பட்டம் கொடுத்துட்டாங்க பா நன்றி நன்றி நன்றி.
Deleteஅடடா அக்கா உங்களோட பேச நான் டீயுசன் எடுக்கனும் இருங்க எங்க டீச்சர் எங்கனு தேடிட்டு வரேன்.
Deleteராஜி ஏன் இந்தக் கொலைவெறி?
Deleteஎனக்கு ஒத்தைக் கிளவியையும் தெரியாதுப்பா... அதென்ன ரெட்டைக் கிளவி? ங்ஙேஙேஙேஙே. விதவிதமா பாட்டெழுதி அசத்தறீங்க தென்றலம்மா.
ReplyDeleteஎல்லோருக்கும் அம்மாவாகிட்டனோ...என்ன ஆச்சி எல்லோருக்கும்.
Deleteநீங்க கவிதையில நிறைய அம்மா போட்டதோட விளைவுதான் இதெல்லாம் நினைக்கறேன். சரிதானே சகோ. சசிகலா?
Deleteஇளையராஜா பாட்டுப் படிச்சமாதிரி ஒரு பீலிங்க்..
ReplyDeleteஅழகான வரிகள்
நன்றிங்க.
Deleteநல்ல வரிகளம்மா... நன்றி...
ReplyDeleteசகோதரி ராஜிக்கு பொறாமை வந்துருச்சி... ஹா.. ஹா...
நீங்களும் அம்மானு சொல்லிட்டீங்களா. சரிதான்.
Deleteசென்னை பதிவர்
ReplyDeleteசென்று வந்த சசியம்மா...
உன் பதிவை யாரும்
குறை சொல்ல முடியுமா..
மட மடன்னு கவிதை எழுதும் சசியம்மா..
உன் கவிதை வரி அத்தனையும் சந்தோஷமம்மா....
அய் கவிதையா வாழ்த்திய சகோ ஆமா அது என்ன நீங்களும் அம்மாவா?
Deleteஅழகு...
ReplyDeleteநன்றிங்க.
Deleteகிராமிய மணத்தில் ஒரு கவிதை
ReplyDeleteநன்று
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteகிராமிய பாடலின் உணர்வு...நல்லா இருக்கு சகோ...
ReplyDeleteநன்றி சகோ.
Deleteஅருமை.
ReplyDeleteநன்றிங்க.
Deleteசூபரா இருக்குதே இந்தக் கவிதை ! இதை
ReplyDeleteசுப்பு தாத்தா பாட அனுமதி உண்டா ?
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
தங்கள் விருப்பம் ஐயா தங்களின் ஆசியுடன் தொடர்கிறேனே.
Delete
ReplyDeleteவரப்போரத்துல வர்ர கண்ணம்மாவத் தாவி அணைச்சா வெக்கம் வாராதாம்மா.
நல்லதொரு கிராமிய கவிதை! அருமை!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
ருத்திராட்சம் சில தகவல்கள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_31.html
கலக்கல்!
ReplyDeleteரொம்ப நல்ல இருக்குது சசியம்மா
ReplyDeleteபாடல் நல்லாருக்குங்க...!
ReplyDeleteகவிதை இருந்தது ரொம்பவே சுகமா....
ReplyDeleteஅருமையான கவிதைப் பகிர்வுக்கு மிக்க நன்றி சசிகலா.
இந்த பாட்டை இங்கேயும் கேட்கலாம்.
ReplyDeleteSUBBU RATHINAM
http://menakasury.blogspot.com
இரட்டைக்கிளவியில் கவிதை அருமை !
ReplyDeleteபனிக்கால சூழல் குளிரும் உங்களது சிறந்த பாடலும்
ReplyDeleteநல்ல கவிதை சில்லிடுகிறது மனது.வாழ்த்துக்கள்.
ReplyDelete