முத்தான முத்தழகி
முன் கோப முகமழகி
முலாம் பழம் வாங்கித்தரேன்
முன்னெதிரே வாடிபுள்ள.
வாழைத்தண்டு காலழகி
வழவழ பேச்சழகி
வாழைப்பழம் வாங்கித்தரேன்
வாக்கப்பட வாடிபுள்ள.
கோவப்பழ உதட்டழகி
கோலமிடும் விரளழகி
கொய்யாப்பழம் வாங்கித்தரேன்
கொல்லைப்புரம் வாடிபுள்ள
வெண்டைக் காய் விரலழகி
வெட்டிப் பேசும் விழியழகு
வெள்ளரிப்பழம் வாங்கித்தரேன்
வௌக்கேத்த வாடிபுள்ள.
ஆஹா......தேவா சாரோட பாடல் ஒன்னு கேட்டமாதிரி இருக்கு.....
ReplyDeleteகிராமத்துப் பாணி கொள்ளை அழகு.......
தங்கள் முதல் வருகையும் ரசித்த விதமும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteஅழகான அணுகுமுறை...அனுசரிக்க சொல்லும்விதம் பிரமாதம்... இருந்தாலும் வாழைப்பழம் கொடுத்து விட்டு வாக்கப்பட கூப்பிடுவது எந்த வகையில் நியாயம் என்று எனக்கு தெரியவில்லை... அவ்வளவு சாதாரணமாகிவிட்டதா... திருமணம்...
ReplyDeleteஎல்லோரும் அதற்காக எவ்வளவோ செலவுகள் செய்து முடியாமல் கஷ்டப்படுகிறார்களே... அதை சுலபமா சொல்லிட்டீங்க... இப்படி நடந்தால் மூப்பெய்தி திருமணம் நடக்காத பெண்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்குமே....சொல்லியிருக்கும் உட்கருத்து வாழ்த்துக்குரியது. எளிமையான நடை... பாராட்டுக்கள் சசி கலா நல்லதொரு கிராமிய மனம் வீசும் வரிகளை சீராக கோத்ததற்கு...
அவ்வளவு சாதாரணமாகவும் உள்ளது எது கொடுத்தாலும் பின்னே போகாத பெண்களும் இருக்காங்க. நான் சும்மா கவிக்காக எழுதியதுங்க நிஜத்தில் இப்படி இருக்க முடியுமா?
Deleteகவிக்காக என்றால் பரவாயில்லை... சசி கலா. தாங்கள் சொன்னதை ஏற்றுக்கொள்ளலாம்... எனக்கும் அதுதான் யோசனை...ஏனென்றால் கவி என்பது இல்லாததை சொல்வதில்லை... இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று சொல்வதுதான்... ஏதோ உங்களால் முடிந்த சேவைப்பணி... வாழ்த்துக்கள்...
Deleteஆஹா... அருமை... வரிகளை படிக்கும் போது "ஒத்த ரூபா தாரேன்.." பாட்டு ஏனோ ஞாபகம் வந்தது...
ReplyDeleteதொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி… (TM 3)
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteஆமாம் பழைய பாடல்கள் நினைவுக்கு வருகிறது சசி.
ReplyDeleteநல்ல நாட்டுப் பாடல் வரிகள்.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.
Deleteகிராமிய மணங்கமழ்கிறது
ReplyDeleteஐயாவின் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.
Deleteத.ம.4
ReplyDeleteஅசத்தல்.
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.
Deleteஅழகி அழகு...
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.
Deleteஅருமையான கவிதை (TM 7)
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.
Deleteவிளக்கேற்றும் கவிதை நன்றாக இருந்தது. என்னுடைய வலைப்பூவில் ஒத்தை மாட்டு வண்டி, இதுவோ சுதந்திரம் என 2 பதிவுகள் இட்டுள்ளேன்!
ReplyDeleteநேரம் கிடைக்கும்போது படிக்க வேண்டுகிறேன்!
-காரஞ்சன்(சேஷ்)
Deleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.
அழகான கிராமிய பாடல்! அசைபோட வைக்கும் சொற்கள்! அருமை!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
பிரபு தேவாவின் புதுக்காதலியும் நயனின் சீண்டலும்
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_16.html
நான் ரசித்த சிரிப்புக்கள்! 17
http://thalirssb.blogspot.in/2012/08/17.html
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.
Deleteபழங்களை வாங்கி தந்து பெண்களை கவரும் கவிதை... நன்று
ReplyDeleteஆமாம் சகோ வார்த்தையாலும் கவரத் தெரிந்தவர்கள் அல்லவா?
Deleteகவியுலக பதிவரசி
ReplyDeleteநிறை குறைகளை சொல்லிவருகிறேன்
ஆனால் குறையில்லாமல்
எழுதிவருகிறாய்
அதனால் பதிவர்களால் பாராட்டு பெற்ற நீ
பதிவர்கள்கூட்ட்டத்தில் பல ஆண் சிங்கங்களுக்கு மத்தியில்
ஒரு பெண் சிங்கமாக வலம் வருகிறாய்
நேரில் வந்து வாழ்த்து சொல்லும் தூரத்தில் நீங்கள் இல்லாததால்
தூரத்தில் இருந்தே வாழ்த்துகிறேன்.
வாழ்க வளமுடன்
கிராமியப் பாணியான கவிதைகள் மிக அருமை
தங்கள் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteஅல்வாவும் பூவும் வாங்கி கொடுத்து மயக்கும் உலகில் இந்த காதலன் பழம் வாங்கி கொடுத்து வரவழைக்கிறான்.. காரணம் ஜங்க் புட் சாப்பிட்ட்டு அவன் காதலி பெருத்து இருப்பதுதான் காரணமோ?
ReplyDeleteஆமா ஆமா ஆரோக்கிய காதலாம்.
Deleteமனதை நிறைக்கும் செம்மாந்து வீசும் செழிப்பான வரிகள்... உள்ளம் நிறைய ரசித்தேன் அக்கா ..
ReplyDeleteஎன் வணக்கங்களும் , வாழ்த்துக்களும் .//
நன்றி சகோ.
Deleteவிளக்கேத்தக் கூப்பிட இவ்ளோ வர்ணனையா...அழகுதான் !
ReplyDeleteஇப்படி கூப்பிட்டாத்தானே நீங்களும் வருகை தருகிறீர்கள்.
Deleteman vaasam...
ReplyDeleteநன்றி சகோ.
Deleteஎளிமையான வரிகளில் அருமையான கவிதை. கிராமிய நடையில் வரும் கவிதைகள் எல்லாமே படிக்க அழகுதான். இப்போதும் அப்படியே.
ReplyDeleteவசந்தத்தின் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி வசந்தமே.
Deleteகிராமத்து வரிகள்,மண்வாசனையுடன் பழவாசனை நாசியில் உரசுகிறது சகோதரி!வாழ்த்துக்கள்
ReplyDeleteஉண்மைவிரும்பி.
மும்பை.
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க.
Deleteஅழகிய கிராமத்துக் கவிதை ..நல்லாயிருக்கு சகோ ..
ReplyDeleteநன்றி சகோ.
Delete