கட்டழகி சிட்டழகி
பட்டாம்பூச்சி பேரழகி
மாமனோட மனசுக்குள்ள
தூரல்தூவிப் போவதென்ன!
சின்னத்தாயி செல்லத்தாயி
சேதியென்ன சொல்லுதாயி!
நாவுதிரிச்ச வார்த்தையிலே
நரம்பெல்லாம் நோகுதடி
ஊர்வாய் கட்டிப்போட
கயிறொன்று கொண்டுதாடி!
வாழநார் எடுத்துவந்து
பூதொடுக்க வச்சிருக்கேன்
மாலையாய் கோர்ப்பதற்கு
வானம்விட்டு வாராயோ!
காக்கா கடி கடிப்பதற்கு
மாவுருண்டை கொண்டுவாடி
கூடிவாழும் எறும்புக்கும்
கொஞ்சமதில் கொடுப்போம் புள்ள!
குற்றுயிர் குலைஉயிரா
நண்டொன்று கண்டேனடி
தன்மகவே அதையுண்ணும்
கொடுமையும் பாத்தேனடி!
காலமது நம்மை விழுங்குமுன்னே
காத்திருக்கேன் வரவையெண்ணி
கட்டிப்போட்ட பரிசலாக .
ethaarththamaaka -
ReplyDeletekiraama kavithai!
arumai..!
அருமையான சொல்லாடல் சகோதரி. உங்களின் தளத்திற்கு வந்தாலே இந்த கிராமத்து வாசனையை நுகர முடிகிறது
ReplyDeleteBharathiraja film effect!
ReplyDeleteகாக்கா கடி கடிப்பதற்கு
ReplyDeleteமாவுருண்டை கொண்டுவாடி
கூடிவாழும் எறும்புக்கும்
கொஞ்சமதில் கொடுப்போம் புள்ள!//
எறும்புக்கும் கொடுத்து மகிழவது அருமை.
கவிதை அருமையாக இருக்கிறது.
காலம் போகும் முன் காதல் கை கோர்த்தல் வேண்டும்.
நல்ல கவிதை.
அருமையான கிராமத்துத் தென்றல் தழுவியது என்னை...
ReplyDeleteநன்றாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.
கூடிவாழும் எறும்புக்கும்
ReplyDeleteகொஞ்சமதில் கொடுப்போம் புள்ள///
பகிந்துண்டு வாழ்தல் என்பது இதுதானோ? அருமை
அவுத்து விட்டாச் சுத்திச் சுத்திப் போக ஆரம்பித்திவிடுமே!
ReplyDeleteநன்று
கிராமத்து மெட்டுக்கு ஏற்ற பாடலாய் வரிகள்
ReplyDeleteகுற்றுயிர் குலைஉயிரா
நண்டொன்று கண்டேனடி
தன்மகவே அதையுண்ணும்
கொடுமையும் பாத்தேனடி!
காலமது நம்மை விழுங்குமுன்னே
காத்திருக்கேன் வரவையெண்ணி
இது நல்லாருக்கு
கவிதை அருமையாக இருக்கிறது சசிகலா.
ReplyDelete“கட்டிப் போட்ட பரிசல்“ என்ன ஓர் அழகான தலைப்பு.
வாழ்த்துக்கள்.
த.ம. 4
அருமையான கவிதை!//காக்கா கடி கடிப்பதற்கு
ReplyDeleteமாவுருண்டை கொண்டுவாடி
கூடிவாழும் எறும்புக்கும்
கொஞ்சமதில் கொடுப்போம் புள்ள!// கவர்ந்த வரிகள்! நன்றி!
அருமையான கவிதை.
ReplyDeleteபடித்ததும் பரிசலில் செல்லும் ஆசை வந்துவிட்டது. ஒருதடவை கொக்கனேகல்லில் போயிருக்கின்றேன்.
காலமது நம்மை விழுங்குமுன்னே
ReplyDeleteகாத்திருக்கேன் வரவையெண்ணி
கட்டிப்போட்ட பரிசலாக .தென்றல் வீசுகிறது ..
மழைத் தூரலில் மண்ணின் வாசம் உங்கள் சொல்லாடலில் கிராமிய வாசம், கவிதை அருமை சகோதரியே
ReplyDelete''..காக்கா கடி கடிப்பதற்கு
ReplyDeleteமாவுருண்டை கொண்டுவாடி
கூடிவாழும் எறும்புக்கும்
கொஞ்சமதில் கொடுப்போம் புள்ள!..''
கிராம நினைவு ..ஓடுகிறது....
இனிய வாழ்த்து.
சசி ரெம்ப பிசி லேடியோ!...
வேதா. இலங்காதிலகம்.
மனதில் தோன்றிய மெட்டோடு தாளம் போட்டுப் பாட வைக்கும் வரிகள்.
ReplyDelete