உன் மனவானில்
அமாவாசை என்று தெரியாது
வாசலில் தரிசனத்திற்கு
காத்திருக்கும் நிலவு நான்...
நிதர்சனம் உணராமையால்
என்னற்ற நட்சத்திரங்கள்
ஏளனப் பார்வையுடன்.
புழுங்கிக்கொண்டிருக்கிறேன்
உன் விரலிடுக்கில் இருந்து
வெளி வரமுடியாதபடி...
இடிச்சிரிப்பில்
மின்னலாய் உமிழ்ந்து போகிறாய்
என் மீதான வெறுப்பை
எனினும்...
உன்னில் வளர்ந்தும்
தேய்ந்தும் என் நினைவுகள்.
ஒப்பிட்ட விதம் அருமை !
ReplyDeleteதொடர வாழ்த்துகள்...
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteவளர்ந்தும் தேய்ந்தும் - ரசனைமிக்க வரிகள் ...
ReplyDeleteரசித்தமைக்கு நன்றி சகோ.
Deleteகாதலில் புரியாதபுரிதல் பற்றி கவிதை அருமை.
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteஅழகு... அருமை...
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
DeleteAaha!. good line...உன் மனவானில்
ReplyDeleteஅமாவாசை என்று தெரியாது..
Eniya vaalthu...
Vetha.Elangathilakam.
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deletearumai...!
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteபௌர்ணமிக்கும் சோகமுண்டோ
ReplyDeleteஅம்மாவாசைபோல் அமுகை!
பாசந்தான் அழிந்திடுமோ பாரில்
பாடையேறி நாம் போனாலும்!
உறவுக்கு மரணமுண்டு உணர்வு
மரித்திடுமோ உணர்வுள்ளவரை!
உடல் போயினும் நினைவுவேகாது
அனபு அன்பது அணையாதீபமது!
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteஅப்பாடி ஒருவகையாய் உங்கள் வலைப்பூவைக் கண்டுபிடித்து தென்றலின் சுகம் காண வந்துவிட்டேன்...:)
ReplyDeleteஅடடா அத்தனை சுகமாக இருக்கிறதே வருடிச்செல்லும் தென்றலாய்ப் பதிவுகள்.
ஒவ்வொரு வருடலையும் நிதானமாய் அனுபவிக்கவேண்டும். வருவேன் வந்து நுகர்வேன்.
அமாவசை முடிந்து மெல்லப் பிறை தலைகாட்டும் நேரந்தான் நானும் வந்திருக்கிறேன்...:)
புரிதல் புரிவதுதான் கடினம்
புரிந்துவிட்டால் பின்னர் பிரிவேது....
அருமையான கவி. சிறந்த சிந்தனை. உவமானங்கள் அற்புதம்.
நல்ல பதிவு + பகிர்வு! மிக்க நன்றி தோழி!
தங்கள் முதல் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteஉன் மனவானில்
ReplyDeleteஅமாவாசை என்று தெரியாது
வாசலில் தரிசனத்திற்கு
காத்திருக்கும் நிலவு நான்...
இந்த வரிகள் அருமையா இருக்கு
ReplyDeleteஉன் மனவானில்
அமாவாசை என்று தெரியாது
வாசலில் தரிசனத்திற்கு
காத்திருக்கும் நிலவு நான்...
ஆஹா... தொடக்கமே அருமை சசிகலா.
ஆனாலும் இது புரியாத புரிதல் தான்!
வாழ்த்துக்கள்.
//என்னற்ற நட்சத்திரங்கள்// எண்ணற்ற ....?
ReplyDeleteஉன்னில் வளர்ந்தும்
தேய்ந்தும் என் நினைவுகள்.
அருமையான எதார்த்த வரிகள் :)
என்னற்ற சரிதான்... எண்ணம் என்று நினைத்துவிட்டேன்
ReplyDeleteஅருமையான நடையில் அழகு கவிதை.
ReplyDeleteஇயற்கையை இணைத்த இனிய கவிதை
ReplyDelete"உன் மனவானில்
ReplyDeleteஅமாவாசை என்று தெரியாது.." அருமையான கவிதை.