பச்சைப் பசுந்தளிர் உதிர்வோப் பண்பாடு-தீய
இச்சையின் இம்சையில் அழுகியதோ இதயம்!
பகலை இரவாள்வதோப் பகைமை இனிமை
உறவையதடித்துப் புசித்து பசியாறுமோ நாளும்!
முயற்சியது மூலை முடங்கியழுதுக் கிடக்க-துயில்
முந்தானை விரித்தே மடமையாய் வந்தாண்டிடுதே!
நல்லதென்றக் கரு உருபெறாமல் போகுமோ-நன்மை
கருவழிந்த பிண்டமாகி மண்ணில்போயது சேருமோ!
இமையது மூடின் பொய் நினைவாகி வாழுமோ-கனவு
தினம் நம்பிக்கை விதைத்து கனவாகவேயது ஓயுமோ!
கற்றாழைச்செடி ரோஜா மலரையிங்கு ஈன்றிடுமோ
அறியுமுன் பொருளுரைத்தே மனமிங்கே வேகலாமோ!
கொண்டதெல்லாம் கொடுமதியோ பொய் வாழ்வில்
கண்டு நிற்பதெலாம் கண்ணீர்ப் புயல் மழைதானோ!
வடிவமெலாம் பனியாகி நிழலாகி உருமாறி போனதோ
உரத்துக்குமாகா நாயினங் கீழான மனித உடலின் வாழ்வு.
உலகாளுதல் கூடுமோ அறியாமை அழிமதிதான் வாழுமோ!
கொற்கை வேந்தனுமே வெட்டியான்கை எரிபொருளாய்
மண்பாண்டமுருகி வடிவங்கள் வேறுவேராய் வேறில்லை!
சேமித்தலொன்றுண் டதுவே நாளை நம் பெயர் சொல்லும்.
அன்புள்ள மனம் தனில்வாழும் அறமன்றி வேறேதுமில்லை!
அன்பைத்தேடி நாடி யோடின் அதுபுனிதம் அறிதல் மேன்மை!!
வணக்கம் சகோ
ReplyDelete//அன்பைத்தேடி நாடி யோடின் அதுபுனிதம் அறிதல் மேன்மை!!//
ReplyDeleteகடைசி வரி என்றாலும் கவனத்தை ஈர்த்த வரி. வாழ்த்துக்கள்!
// அன்பைத்தேடி நாடி யோடின் அதுபுனிதம் அறிதல் மேன்மை!!//
ReplyDeleteஇறுதியில் நச் !
தொடர வாழ்த்துகள்...
அருமை சசி.
ReplyDeleteபுரிந்து கொள்வதற்கு முயற்சிக்கிறேன்..
ReplyDeleteநம்ம கொஞ்சம் டியூப் லைட்டுங்கோ
என்ன புரியல...!
Deleteஎன்ன புரியல...!
Deleteஅன்புள்ள மனம் தனில்வாழும் அறமன்றி வேறேதுமில்லை!
ReplyDeleteஅன்பைத்தேடி நாடி யோடின் அதுபுனிதம் அறிதல் மேன்மை!!
அருமையான கருத்து !...மிக்க நன்றி தோழி பகிர்வுக்கு .
// அன்புள்ள மனம் தனில்வாழும் அறமன்றி வேறேதுமில்லை!//
ReplyDeleteஅவ்வற வாழ்வோருக்கெல்லாம் வீடு இறை தனியே இல்லை.
சசிகலா அவர்களின் கவிதை
இன்று முழு நிலவு.
முழுவதும் அழகு.
சுப்பு ரத்தினம்.
@ சுப்பு தாத்தா.
தினம் நம்பிக்கை விதைத்து கனவாகவேயது ஓயுமோ!
ReplyDeleteநயமான வரிகள்.
கவிதை நன்று.
//அன்புள்ள மனம் தனில்வாழும் அறமன்றி வேறேதுமில்லை!
ReplyDeleteஅன்பைத்தேடி நாடி யோடின் அதுபுனிதம் அறிதல் மேன்மை!!//
அருமை அருமை!
உண்மை ,\\அன்புள்ள மனம் தனில்வாழும் அறமன்றி வேறேதுமில்லை!
ReplyDeleteஅன்பைத்தேடி நாடி யோடின் அதுபுனிதம் அறிதல் மேன்மை!!//
தங்கள் வழக்கமான பாணியில் இருந்து சற்று வித்தியாசமாக உள்ளது கவிதை.நன்று.
ReplyDelete//கொண்டதெல்லாம் கொடுமதியோ பொய் வாழ்வில்
ReplyDeleteகண்டு நிற்பதெலாம் கண்ணீர்ப் புயல் மழைதானோ!
யோசிக்க வைத்தது.
அருமை.
ReplyDeleteஅருமை.
ReplyDeleteதமிழ் வரி வடிவில் மாற்றமிது முன்னேற்றமோ!.
ReplyDeleteநன்று!
வாழ்த்து!
வேதா. இலங்காதிலகம்.
அன்பினாலே உண்டாகும் இன்பநிலை அதை
ReplyDeleteஅணைந்திடாத தீபமாக்கும் பாசவலை
- பாடல்: மருதகாசி ( படம்: பாசவலை)
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை இல்லாதபடியினால், உங்கள் பதிவுக்கு என்னால் ஓட்டு போட இயலவில்லை.
ReplyDeleteதங்கள் பாணியிலிருந்துவித்தியாசமான பாணியில் ஒரு அருமையான
ReplyDeleteகவிதையைத் தந்தது அருமையாக உள்ளது
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 8
ReplyDeleteதமிழ்மணம் ஓட்டுப்பட்டையை மீண்டும் இணைத்ததற்கு நன்றி! வழக்கமாக நான் உங்கள் பதிவிற்கு தமிழ்மணத்தில் இடும் வாக்கை பதிந்து விட்டேன்.
ReplyDelete