உன்னிடம் கோபிப்பதாய்
நடிக்கக்கூட
எத்தனை ஒத்திகை
தேவைப்படுகிறது.
விடுவிப்பதாய் நினைத்து
விரட்டிப்பிடித்ததில்
விம்மிக்கொண்டிருக்கிறது
பட்டாம்பூச்சி.
ஒதுங்கி நின்றாலும்
உரசி சிரிக்கிறது
சாரல்.
எல்லாமே நன்றாய்
நடந்து கொண்டிருக்கும் போது
நான் மட்டும் ஏன்
இறகில்லாமலும் பறந்து கொண்டிருக்கிறேன்.
எனக்கு பிடித்ததெல்லாம்
உனக்கு பிடிக்காமலும்
உனக்கு பிடிக்காததும்
எனக்கு பிடித்துப் போக
என்னை மட்டும் உனக்கு
பிடித்திருப்பதாகவே...
நினைத்துக்கொள்கிறேன்
நம்பிக்கை தான் வாழ்க்கையாம்.
தவிர்ப்பதற்காக
நீ தவிப்பதையே
தாங்க முடியாதவள் நான்.
இந்த சசியை
ReplyDeleteநடு நிசியிலே
எழுப்பி
பசிக்கலயா என
வினவியது வானத்து நிலா.
பசியா ! எனக்கா ?
எனக்கிருப்பதெல்லாம்
எப்பவுமே ஒரே
பசி . அவன் நினைவுகளை
ரசிப்பதும்
புசிப்பதும் தான் எனக்கெப்பவுமே
ருசி. ...என்றாள்.
சீ ...
வெட்கத்துடன்
வெண்ணிலா
மறைந்தது
மேகங்களுள்.
சுப்பு தாத்தா.
பின்னூட்டமா அழகான கவிதை வரும் என எதிர்பார்த்தேன் சசியை கிண்டல் செய்வதாக வந்த வரிகளும் சிறப்பு ஆனால் ஒரு மாறுதல் எனக்கிருப்பதெல்லாம் தமிழ்ப் பசி.
Deleteபாக்கெட் மணி வேணும்னா கேட்டு வாங்கிகோனும்.... மொபைல் ரீச்சார்ஜ் பண்னனுமா நேரடியாக் கேட்டுக்கோனும்.... இப்படி கவிதை எழுதி...ஐஸ்வச்சி, ஏமாத்தி வாங்கக்கூடாது..... :-))))
ReplyDeleteஆமா ஐஸ் வச்சா சளிபிடிக்குமாம் அதான் கவிதை ஹஹ.
Deleteகாதல் ததும்பும் வரிகள், எதுக்கும் அவருக்கு ஒரு மிஸ்ட் கால் போட்ருங்கோ. :)
ReplyDeleteநீங்களுமா நடத்துங்க.
Deleteதுளித்துளி - 2.
ReplyDelete1) எத்தனை ஒத்திகை பார்த்தாலும் அத்தனையும் பொய் என்பதை காட்டிகொடுத்துவிடும்... உண்மையான அன்புக்கு பொய்யாககூட நடிக்கத் தெரியாது.
2) பிறருக்கு நாம் செய்யும் உதவி கூட அவர்களை எந்தவிதத்திலும் சங்கடபடுத்தி விடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நெருடலாக அவர்களுக்கு இருந்துவிடக்கூடாது.
3) நம்மீது அன்பு கொண்டவர்கள் நாம் வெறுத்தாலும் கூட அவர்கள் நம்மை விட்டு விலகாமல் அன்போடு இருப்பார்கள்.
4) என்னையும் மீறிய ஒரு ஆர்வத்தோடு கூடிய ஆசை என் உள்மனது ஏதோ ஒன்றை தேடிக்கொண்டுதான் இருக்கிறது. அதற்கு கிடைக்கும்வரை... அதை என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை.
5) இப்படியும் ஒருவகை அன்பு செலுத்தும் உள்ளங்கள் எத்தனையோ இருக்கத்தான் செய்கின்றன.
இதனை கண்மூடித்தனமானது என்றுகூட பார்ப்பவர்கள் சொல்வார்கள்.
6) நம்மேல் அளவுக்கு அதிகமாக அன்புள்ளவர்கள் ஆனந்த சிரிப்பில் நம் விழியில் நீர் வந்தாலும் அதைக்கூட தாங்க மாட்டார்கள். தெரிந்தும் அவர்களால் கட்டுப்படுத்த முடியாது.
ஆறுமே அருமை சசி கலா...எண்ணிக்கையிலும் வளர்ந்து எண்ணத்திலும் வளர்ந்து வானையும் தாண்ட வேண்டுகிறேன் தங்களை மனதார வாழ்த்தியும் பாராட்டியும்.
அழகிய வரிகள் நன்றிங்க.
Deleteசின்னச் சின்னப் பூக்கள். நன்று.
ReplyDeleteநல்லதா போச்சி இங்க எதுவும் கிண்டல் இல்ல.
Deleteகாதலை தெரிவிப்பதிலும் தெரியப்படுத்துவதிலும் ஒரு ஆணுக்கு மட்டுமே கவிதைத்தனமாக யோசிக்கத் தெரியும் என்று நினைத்திருந்தேன். ஆணுக்கு நிகராக ஒரு பெண்ணாலும் தன்னவனிடம் உள்ள காதலை இவ்வளவு அருமையாக வெளிப்படுத்த முடியும் என்பதை நிரூபித்த கவிதாயிணி வாழ்க வாழ்க.
ReplyDeleteபடங்களுக்கான வரிகள் வெளிப்பாடு அருமை
ReplyDelete1,3, 6 கவிதைகள் நல்லாருக்கு
எல்லாமே நச்...நச்...ரகம். அருமை.
ReplyDeleteமுதல் மூன்று மிகவும் அருமை...
ReplyDeleteகோபம், சாரல், தவிப்பு அருமை சகோ.........
ReplyDeleteஎல்லாமே நன்றாய்
ReplyDeleteநடந்து கொண்டிருக்கும் போது
நான் மட்டும் ஏன்
இறகில்லாமலும் பறந்து கொண்டிருக்கிறேன்.
///////////////////////////////////////////////////
ஒரு வேளை காதல் அப்பிடி இப்பிடி என்னு போயிட்டீங்களோ...:)
அழகான வரிகள் அக்கா
கல்யாணம் ஆன பெண்கள் காதலில் விழுவதற்கு நேரம் இருக்காது காரணம் அவர்கள் எப்போதும் மோதலில் ஈடுபட்டு கொண்டிருப்பதால்
Delete//நான் மட்டும் ஏன்
ReplyDeleteஇறகில்லாமலும் பறந்து கொண்டிருக்கிறேன்///
எனக்கு தெரிந்து தேவதைகள்தான் இறகில்லாமல் பறந்து கொண்டிருக்கின்றன அப்ப நீங்க????
ஒதுங்கி நின்றாலும்
ReplyDeleteஉரசி சிரிக்கிறது
சாரல்.//
நல்ல அழகான கற்பனை
அத்தனை குட்டி கவிதைகளையும் ரசித்தேன்... பாராட்டுகள்.
ReplyDeleteமிக ரசித்தேன்!
ReplyDeleteஅடடா... அடடடடா....அடடடடா
ReplyDeleteபுல்லரிக்குது சசிகலா.
எனக்கு பிடித்ததெல்லாம்
ReplyDeleteஉனக்கு பிடிக்காமலும்
உனக்கு பிடிக்காததும்
எனக்கு பிடித்துப் போக
என்னை மட்டும் உனக்கு
பிடித்திருப்பதாகவே...
நினைத்துக்கொள்கிறேன்
நம்பிக்கை தான் வாழ்க்கையாம்.
மிகவும் சிறப்பான கருத்து .தொடர
வாழ்த்துக்கள் சகோதரி.....
ReplyDeleteகவிதைப் புயலே
கற்பனை வயலே
எழுது எழுது
இன்னும் எழுது
எல்லாமே நல்லாயிருக்கு; ரொம்பவும் பிடிச்சது பட்டாம்பூச்சி! :-)
ReplyDeletekaathal kavikal!
ReplyDeletearumai!