Thursday 27 September 2012

சின்னச் சின்ன சிதறல்கள் !



இருளை அள்ளி 
முகப்பூச்சாய் பூசிக்கொள்கிறது
நிலவு.



முகப்பூச்சு தேவையில்லை
முன்னெதிரே நீயே நின்றுவிடு
வெட்கத்தைவிட வேறொரு
அலங்காரம் தேவையா ?




என் எண்ணங்களை மட்டுமல்ல
உன் எதிர்பார்புகளையும்
நிறைவேற்ற ஆயு(த்)தமாயிருக்கிறது
எழுதுகோல்.


28 comments:

  1. மூன்றுமே முத்தாய்ப்பாய் அமைந்து இருக்கிறது என்றால் அது மிகவும் சாதாரணமாக எல்லோரும் சொல்வது போன்று ஆகிவிடும். வேறு எப்படி சொல்வது என்றால் மூன்றினையும் இங்கு ஆராய்ந்து தெளிவாக படம்பிடித்து அதற்கான அழகு விளக்கத்தையும் ரத்தின சுருக்கமாக சொல்லி இருக்கும் சசி கலா உங்களுக்கு ஏகோபத்திய என்னுடைய வாழ்த்தினை தெரிவித்துக்கொள்வதோடு உங்களின் ஆழ்ந்து சிந்திக்கும் அற்புத திறனுக்கும் என்னுடைய தனிப்பட்ட பாராட்டும் கூட... மேலும் தங்களின் அற்புத படைப்புகள் கூட....வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ஹய்யோ வெட்கம் பூசிய அந்தச் சின்னப் பெண்ணும் பையனும் கொள்ளை அழகு, மூன்றாவதாய் வடித்திருக்கும் கவிதை அழகு. நிலவும் அது சார்ந்த கவிதைகளும் என்றும் அழகு. ஆக மொத்தத்தில் பதிவே அழகு தென்றல்.

    ReplyDelete
  3. கவிதையும் அழகு.நடுப்படமும் அழகோ அழகு

    ReplyDelete
  4. படங்களும் கவிதையும் மிகவும் அழகு... அருமை...

    இரண்டாவது படம் சூப்பர்ப்...

    ReplyDelete
  5. ஆழமான சிந்தனை
    அற்புதமான கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வெட்கத்தைவிட
    சிறந்த அலங்காரம்
    எதுவும் இல்லை சகோ

    கவிதையும் புகைப்படமும் அழகு

    ReplyDelete
  7. குட்டி பாப்பாவோட நிலா முகத்தில வெட்கம் என்னமா தெரியுது....அழகு பாப்பா..கவிதையும் ரொம்ப அழகு சகோ..

    ReplyDelete
  8. வெட்கத்தை விட சிறந்த அலங்காரம் உண்டா
    அருமை

    இரண்டாவது படமும் அதற்கான வரிகளும் ரசிக்க வைக்கின்றன

    இது போல் படங்களுக்கான கவிதைகள் அவ்வபோது எழுதுங்கள் நன்றாக இருக்கிறது

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. கவிதையும், படமும் அருமை...

    ReplyDelete
  10. குட்டிப்பாப்பா சூப்பரு

    ReplyDelete
  11. அழகிய நடப்புக் கவிதை

    ReplyDelete
  12. நிறைவேற்ற ஆயு(த்)தமாயிருக்கிறது
    எழுதுகோல்.
    >>
    ஆனா, நாங்க ஆயத்தமாக கொஞ்சம் அவகாசம் குடு தாயி

    ReplyDelete
  13. மூன்றும் நிலவுக்கு மட்டும் கூட பொருந்தும் வண்ணம் இருப்பது அற்புதம்.

    ReplyDelete
  14. இருளை பூசும் நிலவும் ,வெட்கம் பூசிய முகமும் அழகான கற்பனைகள் ....

    ReplyDelete
  15. படங்களுடன் படத்திற்கான கவிதையும் மிக அழகு அக்கா!

    ReplyDelete
  16. எழுதுகோலின் ஆயத்தம்
    தமிழுக்கு பொக்கிஷம்!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. கவிதை படமெல்லாம் அழகு ஓ.கே. நல்வாழ்த்து.
    என்ன வர வர கவிதைகள் சிறிதாகிக் கொண்டு வருகின்றனவே...
    பழைய சசியாகலாமே.
    அதுக்காக மிக நீட்டமாக அல்ல ஸ்ரான்டாட் அளவு வேண்டாமோ!..
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  18. சின்னசின்ன வரிகளிலும் உமது சிந்தனை அருமை

    ReplyDelete
  19. ஒவ்வொரு வரிகளும் அருமையான சிந்தனை !...
    மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
  20. வெட்கம்தான் சிறந்த அலங்காரம் ஆனா ஒரு சில பெண்களுக்குதான் அது வருகிறது அதிலும் இந்த காலப் பெண்களுக்கு வருவதில்லையே....

    ஒவ்வொரு வரிகளும் அருமை

    ReplyDelete
  21. அழகான கவிதை..
    படங்களும் அழகு

    ReplyDelete
  22. ஆஹா அற்புதம் . சிறிய வரிகளுக்குள் புதைந்திருக்கும் ஆழமான கருத்துகள் மனத்தைக் கொள்ளை கொள்கின்றது

    ReplyDelete
  23. குட்டிக் குட்டியாய் அற்புதம் !

    ReplyDelete