வண்ணமாய் வானில் தோன்றி
எண்ணமாய்த் தோகைவிரித்து
உயிராய்கனவில் பாட்டுப்பாடி
காற்றாய் மூச்சில் கலந்தவளே!
மழைத்துளியாய் மண்ணில் வீழ்நது
பனித்துளியாய்ப் பூவில் வாழ்ந்து
மேகமாக வெண் பட்டாடையணிந்து
துணையாக வழி நடந்தக் கண்ணே!
காலையில் கதிராய் ஒளிர்ந்தாய்
அந்தியில் நிலவாயப் பூத்தாய்
வானிலே மின்மினிப் பூச்சாய்
கடலிலே சிப்பியில் முத்தாய்!
மழலையின் மொழியிசைப் பாட்டாய்
குமரியின் கொஞ்சும் பூந்தமிழாய்
எத்தனைப் பார்வைகள் உன்னில்
அத்தனையும் கவிதையாய் என்னில்!
எழுத்தெடுத்துக் கோர்த்துப் பார்த்தேன்
வார்த்தையாய் வந்து நின்றாய்
வார்த்தையை சேர்த்துப் பார்த்தேன்
அங்கும் காவியத் தமிழாய் நீ!
எனக்கொன்றும் வேண்டாம் தாயே!
நீ மட்டும் போதுமென் தமிழே!
வருவாயா தங்கத்தேரே வரம்
தருவாயா எந்தனுயிர் வாழ்வின் வரமே!
தமிழை கருவாக்கிக்கொண்டீர்களா..பிரமாதம் போங்க..
ReplyDeleteமுதல் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.
Deleteநல்ல கவிதை சகோ! (TM 3)
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.
Deleteஎனக்கொன்றும் வேண்டாம் தாயே!
ReplyDeleteநீ மட்டும் போதுமென் தமிழே!
வருவாயா தங்கத்தேரே வரம்
தருவாயா எந்தனுயிர் வாழ்வின் வரமே!
கருவாகி, அன்னை தமிழால் உருவாகி
இன்று 300ம் பதிவு ஈடும் என் சகோதரியே
தமிழ் வளர்த்து தரணி புகழ் கொண்டு
மேலும் வாழ்க, தமிழால் வளர்க
என மனமாற வாழ்த்துகிறேன்
அன்பு சகோதரன்
ஜோ.................
அண்ணாவின் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றி அண்ணா.
Deleteஎழுத்தெடுத்துக் கோர்த்துப் பார்த்தேன்
ReplyDeleteவார்த்தையாய் வந்து நின்றாய்
வார்த்தையை சேர்த்துப் பார்த்தேன்
அங்கும் காவியத் தமிழாய் நீ!//
தமிழ்தாய் வரம் தந்து விட்டாளே!
இவ்வளவு அழகாய் கோர்த்து மாலை அணிவித்தால் மகிழ்ந்து வரம் கொடுக்காமல் இருப்பாளா தமிழதாய்.
தங்கள் மகிழ்வே எனது மகிழ்ச்சி சகோ.
Deleteதமிழ்த் தாயை பாடுபொருளாய் கொண்டீர்கள்... வரம் கேட்கிறீர்கள் வாழ்வ்வளித்தவள் வரம் தராமல போய் விடுவாள்... முத்திரை பதித்த முன்னூறாவது பதிவு சிறப்பு TM4
ReplyDeleteதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteதமிழ்த் தாய் மட்டும் அல்ல நாங்களும் அகம்
ReplyDeleteகுளிர்ந்து போனோம் கவி கண்டு.
அப்படியா சகோ மிக்க மகிழ்ச்சி.
Deleteதமிழ் தாயின் மீது உள்ள பற்று பாசம் ,நேசம் ,ஒவ்வொரு வரிகளிலும் அழுத்தமாக தெரிகிறது சகோ..
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.
Deleteதமிழுக்கு மேலும் ஒரு சிறப்பு சேர்க்கும் கவிதை சகோதரி... நன்றி...
ReplyDeleteதொடருங்கள்... வாழ்த்துக்கள்... (TM 7)
அப்படிச் சொல்லுங்க...!(இது என் தளத்தில் !)
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteஅற்புதமான எழுத்துக்கள்... தொடருங்கள்...
ReplyDeleteவருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteதமிழ்
ReplyDeleteதாய் பாசம்
ம்ம்ம்....அருமை சகோ
வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Delete
ReplyDeleteதென்றல் கவிதைப் புயலாகி விட்டதோ !!!?
சா இராமாநுசம்
எதனோடும் சேர்த்து பேசலாமே என் இனிய தமிழ் மொழியை...
ReplyDeleteஅத்தனையும் மேலும் அழகு சேர்க்கும் என் கன்னித்தமிழுக்கு...
தாயின் அரவணைப்பின் சுகமும் நம் தமிழ் மொழி கொடுக்குமே...
பிள்ளைகளின் மழலையிலும் விஞ்சி நிற்பது என் தமிழ் அல்லவா...
தன்னை கற்று தெரிந்தவனை புகழ் எனும் உச்சிக்கு கொண்டு செல்லுமே...
எப்படி எல்லாம் நாம் அதை படுத்தினாலும் நம்மை காக்கும் தமிழ்...
உறவாய் நட்பாய் நம்மோடு பின்னி பிணைந்த உயிர் அல்லவா தமிழ்...
எத்தனை இனம் இருந்தும் நம்மை தனித்துவமாய் காட்டும் ஒரே மொழி...
அத்தகைய நம் மொழியை நம் உயிரை விட மேலாக மதிப்போம்...
அதற்கொரு பங்கமென்றால் நம் உயிரையும் கொடுத்து காப்போம்...
அழகாக சொன்னீர்கள் சசி கலா. உங்களுக்கு எனது உள்ளப்பூர்வமான பாராட்டுக்கள்.. என்றும் தமிழ் போல் தாங்கள் எல்லையில்லா ஒரு வாழ்வை நீடூடி வாழ்ந்து குறைவேதும் இல்லாமல் நிறைவாக வாழ வாழ்த்துகிறேன்....
அசத்தல்.
ReplyDeleteஎனக்கென்று எதுவும் வேண்டாம். உன் பொன் தமிழ் கவிதைகளே போதும்.....:-)
ReplyDeleteதமிழோடு தொடருங்கள்
ReplyDeleteதமிழ் சுரக்கும் வரிகள் .. சிறப்பான படைப்பாக்கம் என் நன்றிகள் அக்கா
ReplyDeleteசிறப்பான கவிதை! அழகான வரிகள்! பாராட்டுக்கள்!
ReplyDeleteஇன்று என் தளத்தில் தயக்கம் ஏன் தோழா?
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_13.html
கவிதை அழகு!பொருளும் அழகு!
ReplyDeleteதமிழுக்கு தாங்கள் சூட்டிய ஒவ்வொரு அலங்காரமும் அழகு அக்கா! தாங்கள் தமிழ் மேல் கொண்ட காதல் தங்களது ஒவ்வொரு எழுத்திலும், ஒவ்வொரு வார்த்தைகளிலும், ஒவ்வொரு வரிகளிலும், வார்த்தை பிரயோகங்களிலும் பொதிந்து கிடக்கிறது! வாழ்த்துக்கள் அக்கா!
ReplyDeleteதமிழுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை ....மிகவும் பிரமாண்டமானது
ReplyDeleteஒவ்வொரு கவியிலும் தமிழைப் பற்றி சொல்லாத வார்த்தைகள் இல்லையென்றே சொல்லலாம் போலுள்ளது
கண்ணே மணியே முத்தே என்று குழந்தைக்குத் தாய்பாடும் தாலாட்டு போல் தமிழை வர்ணித்த வார்த்தைகளில் சொக்கினேன். பாராட்டுகள் சசிகலா.
ReplyDeleteமழலையின் மொழியிசைப் பாட்டாய்
ReplyDeleteகுமரியின் கொஞ்சும் பூந்தமிழாய்
நண்பியே மிகவும் இயல்பான வரிகள்,தங்களுக்கு வாழ்த்துக்கள்