Monday 31 December 2012

புத்தாண்டே வருவாய் !



அகிலம்தானே சுழல்தல்போல்
ஆக்கமது சுழன்றாடின் நன்று!

இமயம் உயர்ந்து நிற்பதுபோல்
ஈரம் இதயம்வாழினது மேன்மை!

உயிரில்லா வானம் பொழிதல்போல்
ஊருயர நாமுழைப்பினது தியாகம்!

எங்குமன்பு மட்டும் கோலோச்சின்
ஏணியாகுமே உறவென்ற பாசம்!

ஐயமில்லா நட்பு வந்து கூடினதுவே
ஒருநாளுமொழியா விதிசெய்யுமே!

ஓரணியாய் நன்மையது கைகோர்ப்பின்
கடலளவாய் மெய்யெழுந்து நமைஆளுமே!

காலத்தின் ஓட்டம் கவிதைகள் பாடட்டும்
புதுமலராய்ப் நற் புத்தாண்டு பூக்கட்டும்!

நறுமணம் மட்டும் வாழ்வை சூழட்டும்!
இல்லாதார் புதுவாழ்வேந்தி உயரட்டும்!

உள்ளாரிரங்கி மனமுவந்து ஈயட்டும்!
கல்லார்கு கல்விகிடைக்க வழிபிறக்கட்டும்!

பெண்டிர் தம்முரிமை பெற்றுயரட்டும்!
தீமைகள் தோற்கட்டும் நன்மை ஜெயிக்கட்டும்!

புத்தாண்டே நீவருவாய்-கண்திறவாய்
நாடும் வீடும் இயற்கையும்வாழ வரமளிப்பாய்!

பாசத்துடன் நேசத்துடன் அன்புடன் வாழ்த்தோடு
                                             தென்றல்.......

17 comments:

  1. என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்

    ReplyDelete
  2. புத்தாண்டு வாழ்த்துக்கள்! அருமையான வாழ்த்து கவிதை! நன்று!

    ReplyDelete
  3. பகிர்வுக்கும் - பதிவுக்கும் நன்றி !

    ஒவ்வொரு நாட்களும் நம் ஒவ்வொருவருக்கும் புதிய நாட்களே...

    எல்லா நாட்களும் அனைவருக்கும் புதிய நாட்களாகவும், நன்மை தருவதாகவும் அமையட்டும் !

    ReplyDelete
  4. நாடும் வீடும் இயற்கையும் வாழ வரமளிப்பாய்!

    இறைவன் வரமளிக்கட்டும்

    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. உங்களுக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி !.....

    ReplyDelete
  6. புத்தாண்டை வரவேற்போம். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. புத்தாண்டை வரவேற்க்கும் உங்களது கவிதை இனிமை. புது வருடத்தில் தோல்வி மேகங்கள் விலக வெற்றிச்சூரியன் சுடர்விட வாழ்த்துகள் சகோதரி

    ReplyDelete
  9. அழகான கவிதை...
    மறுபடியும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கவிதாயினி

    ReplyDelete
  10. என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. புத்தாண்டே நீவருவாய்-கண்திறவாய்
    நாடும் வீடும் இயற்கையும்வாழ வரமளிப்பாய்!

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. அழகான வார்ப்பு !
    வளமும் நலமும்
    பெற்று உயர்வாய்
    தோழியே !
    வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  13. புத்தாண்டே நீவருவாய்-கண்திறவாய்
    நாடும் வீடும் இயற்கையும்வாழ வரமளிப்பாய்!

    // நற்சிந்தனை! தங்களுக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
  14. புன்னகைச் சூடிமலர்ந்த
    புத்தாண்டே உன்னால்
    எம்நகைச் செழிக்க உன்
    ஆசிதனை அருள்வாய்!
    நட்பே பாசமே பண்பே
    அன்புத் திருவுருவேயென்
    ஆலயமணி விளக்கே கண்
    மணியாம் பூமலரேத் தேனே
    மானே தெவிட்டாத கவிதைப்
    பேரின்பமே ஏற்றமிகு எழிலே
    இசைப்பாட்டே இறைவனின்
    மாசில்லாப் படைப்பே நேசமே
    எம்பயணத்தின் பாசத்துணையே
    வண்ணங்கள் வந்தணிய நல்
    எண்ணங்கள் வாழ்வாக உறவாய்
    நன்மையுமைத் தேடிவர நீவிர்
    நிம்மதியின் கரம்கோர்க்க நான்
    நாமாயிணைந்து ஏற்றம்பெற
    வாழ்த்தினன் வணங்கினன்
    வாழ்க வளர்க வெல்கவென்றே!
    புதுவருடம் வாழ்வில் பூமணமாய்
    மணத்து மகிழ்வாய் ஒளிவீசட்டும்!!

    ReplyDelete

  15. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. புத்தாண்டிற்கான நல்லதொரு சிந்தனையை கவிதை மூலம் சொல்லி இருக்கிறீர்கள்.
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete