குலுக்கிப்போட்டச் சோழியாட்டம்
குதித்தோடிப் போவதேன்
கொம்புத் தேனே..
விரட்டிப் பிடிக்க
எண்ணமில்லை
விட்டொழிய மனமுமில்ல..
உன் முன்னே
வண்டாட்டம் நிக்குரேன்டி
முன்னே வாடி சின்னப்புள்ள..
கன்னம் தொட்டுப் பேசப்போறேன்
கதவடைத்து காத்தா உரசப்போறேன்
உரக்கக் கூவி ஊர அழைத்திடாதே...
ஓடிப்போகவும் எண்ணமிடாதே..
சொக்கத் தங்கமென உன் உடலா?
சொர்ணமென்ன உன் பெயரா ?
சொக்க வைக்கும் உன்னழகே-வா
ஜோடியா தான் சேர்ந்திடுவோம் பேரழகே.
மவுனமென்ன மான்விழியே
மயங்கி நிற்பதென்ன தேன்மொழியே?
பதிலெனக்கும் சொல்லேன்டி
இல்ல பார்வையாலே கொல்லேன்டி.
எளிமையான சொற்களைக் கையாண்டு
ReplyDeleteபடைத்த அருமையான காதல் கவிதை
தொடர வாழ்த்துக்கள்
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.
Deleteபதிலேதும் சொல்லாத வார்த்தையை விட
ReplyDeleteஎனக்கொன்றுவிடு என்பது மேலாக தெரியுது
அழகாக சொன்னீர்கள் அன்பினை வெளிக்காட்டி
இதுபோல கொஞ்சி பேச ஆளிருந்துவிட்டால்
சொர்க்கம் என்பது இதைவிட வேறேதுமில்லை...
தெளிவான பதிவு..அழகான கொஞ்சல்..கெஞ்சல்..
பாராட்டுக்கள் தங்களுக்கு சசி கலா..வளருங்கள்...
தங்கள் வருகையும் விரிவான பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteமெட்டும் போட்டால் பிரபல பாடலாக மாறிடும் :)
ReplyDeleteவருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.
Deleteayyayo.....
ReplyDeleteippothaan naan-
vera vithamaa ezhuthuren....
intha kavithai ennai thiruppidumo....
arumai sako...
ஹா ஹாஹ அப்படியா மகிழ்ச்சிங்க.
Deleteவணக்கம் சகோதரி...
ReplyDeleteமானே தேனே என கலைவாணர் அவர்கள்
பாடிய பாடலொன்று நினைவுக்கு வருகிறது...
அழகான உருவாக்கம்..
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் அண்ணா. நன்றி அண்ணா.
Delete
ReplyDelete// கன்னம் தொட்டுப் பேசப்போறேன்
கதவடைத்து காத்தா உரசப்போறேன்
உரக்கக் கூவி ஊர அழைத்திடாதே...
ஓடிப்போகவும் எண்ணமிடாதே..//
கிராமியக் காதல் மணக்கிறது!
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.
Deleteஅழகான வரிகள். நன்றி
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteமுதல் வரியிலேயே மயக்குகிறது.
ReplyDeleteசின்னப்புள்ளே நிக்குறேண்டி போன்ற பேச்சு வழக்குச் சொற்களுக்கு இடையே அழைத்திடாதே எண்ணமிடாதே போன்ற சொற்களைத் தவிர்த்திருக்கலாமோ?
ஒரு இசையமைப்பாளரின் கையில் நல்ல மெட்டாகும் சாத்தியம் இருக்கிறது.
நன்றிங்க திருத்திக்கொள்கிறேன். தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன்.
Deleteரசிக்கவைக்கும் பாடல்! அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன்.நன்றிங்க.
Deleteபதிலை சொல்ல முடிஞ்சா பரிதவிக்க விடுவாளா? எக்கம்மான கவிதை
ReplyDeleteகாதல் ரசம் சொட்டுதே!
ReplyDeleteத.ம.7
"குலுக்கிப்போட்டச் சோழியாட்டம்....." அழகான ஆரம்பம்.
ReplyDeleteவர வர இந்த பக்கத்துல இளமை பொங்குது .. நாங்கெல்லாம் கடைய சாத்திட்டு வேண்டியதுதான் அக்கா கவிதை கலக்கல்
ReplyDeleteகாதல் பாடல் அருமை சசிகலா.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
சுவையா இருக்கு....
ReplyDelete