எண்ணங்களைப் பகிர்ந்து எழுத்துக்களால் அறிமுகமாகி வலையில் வலம் வந்த சகோதர மற்றும் நட்பின் உறவுகளை சந்திக்க வாய்ப்பளித்த மாபெரும் விழாவான
-- பதிவர் சந்திப்பை நம் யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத , மகிழ்ச்சி தரும் விழாவாக நடந்தது. புலவர் ஐயா அவர்களின் உரையைப் போல நம் இல்ல விழாவினைப் போல அவ்வளவு ஆர்வத்துடனும், அன்புடனும் மீண்டும் மீண்டும் பேசி மகிழ்ந்தோம். இனி வரும் சந்திப்புகள் எத்தனை இருந்தாலும் முதல் சந்திப்பை அசைபோட வைக்கும் விதமாக புகைப்படங்கள் மற்றும் பதிவுகள் மூலமாக அனைவரும் வெளியிட்டு மகிழ்ந்தோம். எனினும் அன்றைய விழாவினை காணொளியில் கண்டு மகிழ சகோதரர் மதுமதி தம் கடும் உழைப்பினாலும் ஆர்வத்தினாலும் தயாரித்து நமக்கு பகிர்ந்தளித்து சில தினங்களாக நம்மையெலாம் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி வருகிறார் என்பது மிகையாகாது. அந்த மகிழ்வான தருணத்தில் தான் எனது முதல் கவிதை வெளியீடும் நிகழ ஆர்வம் கொண்டு எனது விருப்பத்தை புலவர் ஐயா மற்றும் சென்னைப் பித்தன் அவர்களிடமும் சகோதரர் மதுமதி மற்றும் கணேஷ் அவர்களிடமும் கூறிய போது மிக்க மகிழ்வுடன் சம்மதித்து உடன் இருந்து ஊக்கமளித்து புத்தக வெளியீட்டை அன்றைய தினம் வெகு சிறப்பாக எனது வாழ் நாளில் மறக்க முடியாத நிகழ்வாக நடத்திக் கொடுத்த தாய் நாடு மக்கள் அறக்கட்டளை நிறுவனத் தலைவருக்கும் பதிவர் சந்திப்பிற்கு வருகை தந்து நூலினை வெளியிட்ட பட்டுக்கோட்டை பிராபாகர் அவர்களுக்கும் நூலினைப் பெற்றுக் கொண்ட சேட்டைக் காரன் அவர்களுக்கும் குறிப்புரை வழங்கிய கணக்காயர் அவர்களுக்கும் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்து அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் சகோதர சகோதரிகளுக்கும் விழாவிற்கு வருகை தந்து வாழ்த்திய அன்புள்ளங்களுக்கும் ......
உயிர் கொடுத்த தாய்தந்தைக்கும்
உதிரத்தில் கலந்த தமிழுக்கும்
உன்னத நட்புக்கும் உடன் பிறப்புகளுக்கும்
உடனிருந்த உறவுகளுக்கும்
காதலீந்த கணவருக்கும்
கனவையும் ரசித்த மழலைகளுக்கும்
காட்சியாய் விரிந்த இயற்கைக்கும்
மண் வாசமிட்ட மழைக்கும்
மழை தந்த மரங்களுக்கும்
மன்னவனாம் சூரியனுக்கும்
மயங்க வைத்த நிலவுக்கும்
மின்னிச் சிரிக்கும் விண்மீன்களுக்கும்
எனது மன மார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்றைய நிகழ்வை காணொளியாக பகிர தயாரித்துக் கொடுத்த மதுமதி சகோவிற்கு மீண்டும் மீண்டும் நன்றி கூறி காணொளியைப் பகிர்கிறேன்.
வலைத்தளத்தில் எழுதிய ஆக்கங்கள் புத்தகமாக வெளிவருவது மகிழ்ச்சிக்குரியவை !
ReplyDeleteமேலும் இதுபோன்ற பல புத்தகங்கள் எழுதி, உங்கள் எழுத்து சமூக மேம்பாட்டிற்க்கு உறுதுணையாக இருக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திவனாக...
சகோதரிக்கு வாழ்த்துகள் !
புத்தகம் கிடைக்குமிடத்தை தெரியப்படுத்த மறந்துடாதிங்க :)
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteநல்ல கவிதைத் தொகுப்பைத் தந்த தங்களுக்கும் மனமார்ந்த நன்றி!
ReplyDeleteதங்களின் ஆசி நேரில் கிடைக்கப் பெற்றமைக்கு நன்றிங்க.
Deleteஅக்கா வாழ்த்துகள் !
ReplyDeleteமிகுந்த மகிழ்ச்சி நன்றி சகோ.
Deleteவாழ்த்துக்கள். மேலும் இதுபோன்ற எண்ணில்லா
ReplyDeleteபுத்தகங்கள் வெளிவர...
தங்கள் வருகையும் உடனிருந்து பாராட்டிய பாங்கும் மகிழ்வுக்குரியது நன்றி நட்பே.
Deleteமதுமதி சாரும் பல காணொளிகளி இன்றைய பதிவில் பகிர்ந்துள்ளார்...
ReplyDeleteஎல்லாவற்றையும் இன்னைக்கு பார்த்தே தீருவேன் :)
பாருங்க எல்லையில்லா மகிழ்வு தரும் நிகழ்வு.
Deleteசிறப்பு வாய்ந்த வலைப்பதிவர்கள் விழாவில் சிறப்பானதொரு நூல் வெளியீட்டு விழா.
ReplyDeleteமென்மேலும் தமிழ் அன்னைக்கு புகழ் சேர்க்கும் நல்கவிதை நூல்களைப் படைக்க வாழ்த்துகள் சசி
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Delete
ReplyDeleteபதிவர் சந்திப்பை நேரலையில் ஒளிபரப்பியபோது என் கணினியில் சிக்கல் இருந்ததால் காண இயலவில்லை. இப்போது அந்தக் குறை தீர்க்க இந்தக் காணொளி வழி செய்துள்ளது. சசிகலாவுக்கு வாழ்த்துக்கள். வலையில் உங்கள் கவிதைகளைத் தவறாமல் வாசிப்பவன் நான். மேலும் நல்ல கவிதைகளை இயற்றி புத்தகமாக வெளியிட ஆண்டவன் அருளட்டும்.
தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
Deleteபாராட்டுக்கள். வாழ்த்துகள். மேலும் மேலும் பல்வேறு கவிதைத் தொகுப்புக்கள் வெளியிடவும் வாழ்த்துகள்.
ReplyDeleteதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
Deleteஉங்களது நன்றியுரைக் கவிதை அருமை மேடம்.. புத்தக வெளியீட்டிற்கு எனது வாழ்த்துக்கள்..
ReplyDeleteதங்கள் வருகையும் ரசித்து பாராட்டியது கண்டும் மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteவாழ்த்துக்கள் சசிகலா.
ReplyDeleteவலைத்தளத்தில் எழுதிய ஆக்கங்கள் புத்தகமாக வெளியிட்ட அருமையான முயற்சிக்கு பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteமேடம்!தங்களது இரு பதிவுகளை இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன். வாருங்கள்!http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_21.html நன்றி!
ReplyDelete