பாவாடை ஏத்திச் சொருகி
படிக்கட்டில் ஆடி ஓடி...
பஞ்ச வர்ண கிளி ரசித்து
பாட்டுக்கு மெட்டெடுத்து
பனித்துளி படுத்துறங்க
பார்த்து ரசித்த மலர் வனம்
விரட்டிப் பிடித்த பட்டாம்பூச்சி
விரலிடுக்கில் ஓடிய மீனீனம்
விண்மீன் பிடித்திழுத்து
விரலுக்கு சொடுக்கெடுத்து
நிலாச்சோறுக்கு நீண்ட கைகள்
கதை கேட்டே உறங்கிய திண்ணை
விட்டுக் கொடுக்காத பிடிவாதம்
விட்டு விலகாத நண்பர் கூட்டம்
படுத்துறங்க அன்னை மடி
பகற்ப்பொழுதில் பள்ளிக்கூடம்...
கூட்டாஞ்சோறாக்கிய களத்துமேடு
வரப்போறம் வம்பிழுத்த ஒற்றைப்பார்வை
உணர்வில் கலந்த குறும்பை
ஒடித்துப்போட்ட அந்தப் பார்வை
எதுவும் நினைவில் இனி
வேண்டவே வேண்டாம்
எடுத்து செல் இல்லை
எனை எரித்துச் செல்!
//எடுத்து செல் இல்லை
ReplyDeleteஎனை எரித்துச் செல்!//
என்ன தாயீ
என்ன அப்படி ஒரு கோவம் !!
பின்ன யாரு வருவாகளாம் !
ஒன் கன்னத்துலே
வழியும் நீரை வழிச்சுப் போட ??
சுப்பு ரத்தினம்.
kadaisi!
ReplyDeletepidichi thalluthu!
nantri!
அருமை....!
ReplyDeleteயப்பாடி... எடுத்துச் செல். இல்லை எரித்துச் செல் என்று அறம்பாடுற அளவுக்கு கவிதாயினிக்கு என்ன கோபம்? நினைவுகள் தாம்மா வரம், சாபம் எல்லாம். இருக்கட்டும் அவை... வரிகள் அழகு!
ReplyDeleteகனல் தெறிக்கும் வரிகளில் அருமை கவிதை
ReplyDeleteஅவ்வித நினைவுகள் இல்லையேல் வாழ்வு பலநேரங்களில் ஒடிந்து விடும் அக்கா ..
ReplyDeleteகவிதை கலக்கல்
கடந்தகால வாழ்க்கை
ReplyDeleteநிகழ்கால நினைவு!
கூடவரும் இந்தநொடி
நாளைய தேடல்!
நாளைய கனவுகள்
இன்று முயற்சியாய்!
செம காண்ட்ல இருக்கீங்க போல நான் அப்பாலிக்கா வர்ரெen
ReplyDelete
ReplyDeleteசெல்லேதான் உலகம்.! ம்ம்ம்ம்ம்.....!
என்னமா கோபம்...!
ReplyDeleteவரிகள் அசத்தல்...
நினைவுகள் ஒவ்வொன்றும் இனிமையானவை...
ReplyDeleteஇறுதியில் கொலைவெறியுடன் முடித்துள்ளது ஏனோ...
முத்தாய்ப்பாய்ச் சொன்ன வரிகள்
ReplyDeleteஅருமையிலும் அருமை
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
குளத்து நீரில் அதிர்வலைகள் போல் நெஞ்சில் நீண்ட நினைவலைகள்! கவிதை வரிகள் அருமை!
ReplyDelete//எதுவும் நினைவில் இனி
ReplyDeleteவேண்டவே வேண்டாம்
எடுத்து செல் இல்லை
எனை எரித்துச் செல்!// ஏன் சகோ
இவ்வளவு கோபம்
சந்தோஷமான நினைவுகள்தான் வாழ்வின் உந்துசக்தி !
ReplyDeleteஎடுத்துசெல்லவும் முடியாது மீண்டும் அந்த தருணங்களை கொண்டுதரவும் முடியாது
ReplyDeleteகடைசி வரிகள்!வாவ்!
ReplyDeleteஉங்களின் கடைசி வரி என்னை மீண்டும் முதல் வரியை நோக்கி நகர்த்திச் செல்கிறது.
ReplyDeleteசிறகொடித்தப் பார்வையா அல்லது சினங்கொண்ட பார்வையா ஏன் இந்த கோபம்...உங்களுக்கு கோபமே வராது என்றல்லாவா நினைத்தேன். தலையில் அடிபட்ட பின் ஆள் மாறிவிட்டீர்களோ சசி
ReplyDeleteஎன்னக்கா மென்மையா ஆரம்பிச்சி இப்படி கோவமா முடிசிடீங்க.. உங்களின் நினைவுகள் எனக்கு படிக்கும் போதே தென்றலா வருடுகிறது.. அனுபவித்தவர்களுக்கு எப்படி வலியாகும்?? அழகான கவிதை!!!
ReplyDeleteகடந்து போன அல்லது கடந்து வந்த பசுமையான நினைவுகள் ஒரு நிறைவான பெருமூச்சினைதானே கொடுக்கும்..? கோபம் புதிதாய் தெரிகின்றது...! மேலும் ஹேமா சொன்னது சரியானது..!
ReplyDeleteஅருமை.
ReplyDelete//படுத்துறங்க அன்னை மடி
ReplyDeleteபகற்ப்பொழுதில் பள்ளிக்கூடம்...//
arumaiyaana ninaivukal vaalththukkal
விண்மீன் பிடித்திழுத்து
ReplyDeleteவிரலுக்கு சொடுக்கெடுத்து
அருமை அக்கா...
எப்படி கற்பனை செய்ய முடிந்தது................