காற்றின் அசைவில்
ஒவ்வொன்றாய் உதிர்க்கும்
ரோஜா இதழாய் உன் வார்த்தைகள்
முழுவதுமாய் உதிர்த்துப்பார்க்க
ஆசையில்லை மௌனத்தையே
கொடு போதும்.
**************************************************
- உன் மவுனத்திற்கான
அர்த்தத்தை தேடுவதிலேயே
என் ஆயுள் கழிந்துவிடும் போல.
*****************************************************
தென்னங்கீற்றசைய
மெத்தையாய்
உன் மடியிருக்க
எதையாவது
பேசித் தொலைக்காதே
காதலுக்கு மயக்கம்
தெளிந்து விடும்.
*******************************************************
உன் மௌனம் தான்
என்னில் ....
கோபத்தையும்
வெட்கத்தையும்
ஒரு சேர கொடுத்துவிடுகிறது.
எல்லாக் கவிதையிலயும் தென்றல் வீசிச் செல்கிறதே
ReplyDeleteவருக வருக நண்பரே.. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன்.
Deleteமௌனமாய் போய் விடலாம் என்றுதான் நினைத்தேன் தோழி
ReplyDeleteமனசு தான் கேட்க்கவில்லை கவிதை அருமை !..என்று மட்டும்
சொல்லி விட்டுப் போய் விடுகின்றேனே :) வாழ்த்துக்கள் தோழி
மேலும் தொடரட்டும் இனிய கவிதை வரிகள் .
தோழி நமக்குள் ஏன் மௌனம்... ஏதேனும் நான் பிழை செய்துவிட்டேனோ ?
Deleteமௌனம் கூட என்னவெல்லாம் செய்கிறது...! வாழ்த்துக்கள் சகோதரி...
ReplyDeleteமௌனம் தான் சகோ எல்லாம் செய்கிறது.
Deleteஉன் மவுனத்திற்கான அர்த்தத்தை தேடுவதிலேயே
ReplyDeleteஎன் ஆயுள் கழிந்துவிடும் போல.
மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்..!
தென்றலே பாராட்டுக்கள்..!
மௌனத்தை மொழிபெயர்க்க முடியாமல் தான் இப்படிங்க.
Deleteமௌனம் கவிதையில் பேசிவிட்டது.
ReplyDeleteவாழ்த்துக்கள் சசிகலா.
அப்படியா ? மிக்க மகிழ்ச்சி தோழி.
Deleteகலக்கல் கவிதை ஒவ்வரு வரியிலும் காதல் பேசுகிறது
ReplyDeleteரசித்து கருத்திட்டமைக்கு நன்றிங்க.
Deleteவாழ்த்துக்கள் சசிகலா.
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Delete
ReplyDeleteதென்னங்கீற்றசைய
மெத்தையாய்
உன் மடியிருக்க
எதையாவது
பேசித் தொலைக்காதே
காதலுக்கு மயக்கம்
தெளிந்து விடும்.
உங்கள், "காதல் நனைத்த செல்லமான கோபம்" ரசிக்க வைக்கிறது தோழி! அழகு!!
ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிங்க.
Deleteதேனென இனித்தது தென்றலின் கானங்கள்
ReplyDeleteஊனோடு உயிரும் உருகிடவே!.
மிகமிக அருமை.
வாழ்த்துக்கள் தோழி!
த ம.6
மிக்க மகிழ்ச்சி தோழி. தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியும்.
Deleteகவிதைகள் அனைத்தும் அருமை தோழி.
ReplyDeleteஇவ்வரிகளை மிகவும் இரசித்தேன் .
"உன் மவுனத்திற்கான
அர்த்தத்தை தேடுவதிலேயே
என் ஆயுள் கழிந்துவிடும் போல."
மிக்க மகிழ்ச்சிங்க. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றியும்.
Deleteகவிதைகள் எல்லாம் ரசிக்க வைத்தன என்றாலும் மூன்றாவது மனதை மயக்கி கட்டிப் போட்டு விட்டது சசி! அட்டகாசம்!
ReplyDeleteமிக்க மகிழ்ச்சிங்க சகோ. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றியும்.
Deleteஅருமையான கவிதைத் தூறல்கள்.. நன்றி,,,
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteநல்ல கவிதைகள்.....
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி தென்றல்.
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteமெளனம் பேசியதே கவிதையாய், வருடி செல்லும் தென்றலாய்
ReplyDeleteபார்வை ஒன்றே போதுமே ! பேச்சு எதற்கு?
ஆமாங்க.. அழகான பாடலை நினைவு படுத்தியது உங்கள் பின்னூட்டம்.நன்றி தோழி.
Deleteஅனைத்து கவிதைகளும் அழகு...
ReplyDeleteஅனைத்து குறுங்கவிதைகளும் மிக அற்புதம் தென்றல்
ReplyDelete