Monday 10 June 2013

எதுவது ஏனிது ?

குளிரிது மிளிருது
தளிரது வளருது

மனமது தாவுது
மகிழ்வது தேடுது

நிகழ்வது புதியது
நீந்துது மிதக்குது

சிரிக்குது சிணுங்குது
சிறகின்றி பறக்குது

கனியுது கசியுது
கமழுது மணக்குது

கனவது நினைவது
எதுவது ஏனிது ?

28 comments:

  1. உம்ம்ம்ம்.....ஏதோ புரியுது குழம்புது

    ஆனாலும் படிக்க இனிக்குது

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் படிக்கிறவங்களுக்கு புரியாத மாதிரி எழுத ஆசை என்ன செய்ய வரமாட்டேங்குதே..

      Delete
  2. குது குதுன்னு குதூகலம் அளிக்கும் பதிவு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி ஐயா.

      Delete
  3. அழகான சிந்தனை... வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ.

      Delete
  4. தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. திண்டுக்கல் தனபாலன்


      தமிழ்மணம் +1 இணைத்து விடுவது... கருத்துக்கள் சொல்வது, உதவுவது, இப்படி பல நல்ல செயல்களை செய்கிறீர்கள் அது நல்லதுதான் ஆனால் அதற்கெல்லாம் நன்றி என்று பதில் சொல்லவாவது பதிவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுங்கள்...அதையும் நீங்களே சொல்லிவிட்டிர்களே நீங்கள் இங்கு

      Delete
    2. ஆமா நன்றியை நாங்க தானே சொல்லவேண்டும். மிக்க நன்றி சகோ.

      Delete
  5. Replies
    1. அது தான் தெரியவில்லை.

      Delete
  6. Replies
    1. மிக்க நன்றிங்க.

      Delete
  7. ஏதேது இந்தப் போடு ?

    ReplyDelete
  8. அதுவது அதுவது
    அதுதனோ இதுவது...

    ReplyDelete
  9. ஸ்ரவாணி//

    ஏதேது இந்தப் போடு ?//ஸ்ரவாணி அவர்களின் கருத்தே
    என் கருத்தும்
    அருமையான கவிதை
    மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
    வாழ்த்துக்கள்



    ReplyDelete
    Replies
    1. ஐயாவின் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

      Delete
  10. வருமது தருமது
    வசந்தத்தை தொடுமது
    தினமது வருவது
    கனவென தெரியுது.
    அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இதுவும் நன்றாகவே இருக்கிறது. நன்றிங்க.

      Delete
  11. கனவது நினைவது
    எதுவது ஏனிது ?

    கவியது ..இனிப்பது ..!

    ReplyDelete