சோம்பல் முறித்து
வரும் சூரியனும்
சோலைப்பூவை முகர
வரும் வண்டினமும்
மனதை மயக்கும்
மெல்லிசையும்
தொட்டழைக்கும்
தென்றலும்....
மெட்டெடுக்கும்
இலையசைவும்
தோகைவிரித்தாடும்
மயிலும்....
தொய்வில்லாதோடும்
ஆற்றுப்படுகையும்
வாழ்வு தாபத்தோடு
ஓடும் மீனும்...
தாவியணைக்கத்துடிக்கும்
கொக்கும்....
தத்தி நடக்கும் வாத்தும்
மழலை தரையில்
பழகும் நீச்சலிலும்
அன்பாய் தலைக்கோதும்
மரக்கிளையிலும்
அடித்தோடி மறையும்
அலைக்கடலிலும்
இவைகளுடனான
என் ஸ்பரிசம்
நீங்காதிருக்கவே....என்னோடு
நெருங்கவிடாதிருக்கிறேன்
உனதன்பை.
Nice kavithai
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteஎன்னவொரு காரணம்
ReplyDeleteஅன்பென்ற ஒன்றினை
இழந்தால் மட்டுமே இவை
அத்தனையும் பெறமுடியுமோ..
அழகாகத்தான் இருக்கிறது
சொன்ன அத்தனையும்
இதுதான் உலக நியதியோ
பாராட்டுக்கள் தங்களுக்கு...
வாழ்வியிலை அப்பட்டமாக
எல்லோரும் அறிய தெளிவாக
விளக்கிய தங்களுக்கு அனைத்தும்
கிடைக்கவே என் அன்பான வாழ்த்துக்கள்...
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteகவிதையை இரசித்தேன். வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deletegood kavithai
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteஅழகிய சிந்தனை வாழ்த்துக்கள் சகோதரி ......
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteரசிக்கும் வரிகளில் ஆழமான அன்பு....:)
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteம்..சிறப்பு..
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Delete
ReplyDeleteஇயற்கையை சொல்லும் வரிகள் ரசித்தேன் வாழ்த்துக்கள்
கவிதை அழகு சகோதரி
ReplyDeleteஅதீதமான அன்பை சொல்லும் அழகான கவிதை. அருமை.
ReplyDeleteஉனது அன்பு என்பது காதலைக் குறிக்கிறதா? காதல் வந்தால் உலகமே மறந்து விடும் என்று காதலின் சிறப்பைச் சொல்கிறது கவிதை, சரியா? :))
ReplyDeleteதென்றலே தென்றலாய் உள்ளது
ReplyDeleteரசிக்க வைக்கும் வரிகள்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
tm6
நல்ல வரிகள். இனிய வாழ்த்து.
ReplyDeleteஏன் இயற்கையை அனுபவிக்க ஒரு அன்பை நிராகரிப்பதா?....
நெருங்க விடாது விலக்குவதா????
வேதா. இலங்காதிலகம்.
அன்பைவிட...
ReplyDeleteஇவையெல்லாம் அழகா சசிகலா...?
எப்போதும்போல சிறப்பு சசி !
ReplyDelete
ReplyDelete/// இவைகளுடனான
என் ஸ்பரிசம்
நீங்காதிருக்கவே....என்னோடு
நெருங்கவிடாதிருக்கிறேன்
உனதன்பை.//
வளம் செறிந்த கற்பனை ! அழகு நன்று!
சொல்லிச் சென்றவிதமும்
ReplyDeleteமுத்தாய்ப்பும் மனம் தொட்டது
தொடர வாழ்த்துக்கள்
ada daa....
ReplyDelete