நினைவுப் பரிசென எதுவும்
நாம் பகிர்ந்து கொண்டதில்லை !
நினைவால் கூட நாம்
பிரிந்திடுவோம் என்று
நினைத்ததுமில்லை.
கண் பட்டுப் போனதுவோ.
நாம் கூடி நின்று பழகிய
காட்சிகள் பொய்யானதுவோ.
பஞ்சனை தாங்கும் கண்ணீரை
நெஞ்சனையில் தாங்க
வாராயோ...?
தொண்டைக்குழி
அடைத்திடுதே தோள்
தட்டி ஆறுதல் கூறாயோ ?
காலமெலாம் பார்த்திருக்க
கலங்கரை விளக்கமென-உனை
நான் நினைத்தேன்...
கண்கலங்க விட்டுவிட்டு
போனதெங்கே பூமகளே
நினைந்துருகி சாவதற்கோ
நினைவதனை விட்டுச்சென்றாய்.
மனமுருகி அழைக்கின்றேன்
மனமிலலையோ வந்து சேர.
என் தேடலுனக்கு இனித்திடுதோ
ஓடி ஓடி ஒளிகின்றாய்.
கரை சேர்க்கும் ஓடமிங்கே
நீயெனக்கு ஆனபின்னே
மூழ்கவிட்டு போனதெங்கே...
தாயில்லா பிள்ளையிவள்
தயவில்லையோ தாரகையே.
தஞ்சமென மடிசேர
தவமிருக்கேன் தரணியிலே.
// தாயில்லா பிள்ளையிவள்
ReplyDeleteதயவில்லையோ தாரகையே.
தஞ்சமென மடிசேர
தவமிருக்கேன் தரணியிலே.//
மிக கவர்ந்த வரிகள்..
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Delete//கண்கலங்க விட்டுவிட்டு
ReplyDeleteபோனதெங்கே பூமகளே
நினைந்துருகி சாவதற்கோ
நினைவதனை விட்டுச்சென்றாய்...//
கவிதை அருமை...
வாழ்த்துக்கள்.
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteஉருக்கமான உணர்சிகரமான கவிதை...!!!
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteஅருமையான கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteஅழகான கவிதை...
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteகாலமெலாம் பார்த்திருக்க
ReplyDeleteகலங்கரை விளக்கமென-உனை
நான் நினைத்தேன்...
உணர்வில் உருக்கம் உள்ளத்தில் பெருக்கும்!
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா .
Delete//தஞ்சமென மடிசேர
ReplyDeleteதவமிருக்கேன் தரணியிலே.//
நெஞ்சைத் தொடும் வரிகள்!!
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteஉங்களை புரிந்து சீக்கிரம் வருவாங்க அக்கா
ReplyDeleteநன்றி சகோ.
Deleteநல்ல வரிகள்...
ReplyDeleteகவிதைப் பகிர்வுக்கு நன்றி.
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteநயமான கவிதை.
ReplyDelete(நடுவில் கவிதைநாயக ஆண்/பெண் குழப்பம் வருகிறது:)
நான் தேடும் என் சிநேகிதிக்கே இக்கவிதை...
Deleteநீங்கள் உருகி எழுதிய அழகான கவிதையை படிக்கும் போது மனமும் உருகிவிடும் போல இருக்கிறது சகோ
ReplyDeleteஅவளுக்கு கேட்கவில்லையே..
Deleteநல்ல உருக்கமான கவிதை.
ReplyDeleteகவிதை அருமை.
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteமுதலில் ' அவர் ' போலவும்
ReplyDeleteமுடிவில் ' மகள் ' போலவும்
தெரிகிறது . நெகிழ்ச்சி !
.
எல்லாமுமாய் என் சிநேகிதியே இருக்கிறாள் தோழி.
Deleteஎந்த அன்பின் பிரிவிற்கும் பொருத்தமான கவிதை ...அருமை....
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteரசித்தேன்...
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteதென்றலின்
ReplyDeleteவருகையாய் வருடும் கவிதை ..!
azhakaana kavithai..
ReplyDelete