திறந்திருக்கும் கதவினை
பார்த்தபிறகாவது...
தெரிந்திருக்க வேண்டும்
திருடுவதற்கு ஏதுமில்லையென...
அங்குமிங்கும் பார்த்தபடி
மெல்லென அடி வைத்து
எத்தனை எத்தனை ..
புலனாய்வு செய்த பின்னும்
ஏதுமில்லையென்றானபின்.
சோர்ந்து விடாது
அடுத்து வெளியேறும்
முயற்சியில் தீவிரம்
காட்டிக்கொண்டிருந்தது பூனை.
சீறிப்பாய்ந்த லாவகத்தில்
சிக்கியிருக்கக் கூடும்.
வாசல் கம்பிகளுக்கு நடுவே..பூனை
அதனை எப்படியாவது
விடுவிக்கும் நோக்கில் நானும்
என் பார்வையில் இருந்து
தப்பும் நோக்கில் அதுவும்.
நோக்கு வர்மத்தால் சில பல
புரிதல்கள் நிகழ்ந்தபடி.
கவிதையும் பூனைக்குட்டியைப் போலவே அழகாக உள்ளது. பாராட்டுக்கள்.
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.
Deleteசரி, சரி சீக்கிரம் புரிய வச்சு அந்த பூனையை காப்பாத்துங்க மேடம்!
ReplyDeleteஅதுவே என்னிடமிருந்து தப்பி ஓடிவிட்டதுங்க.
Deleteபாவங்க.. பூனைன்னு பூனைய தானே சொன்னிங்க.. ஏன்னா நேத்து பதிவர் ஒருவர் கவிதையை படித்துவிட்டு பின்னூட்டம் போட்ட பிறகு தானே தெரிந்தது.. அது திவ்யா- இளவரசன் பற்றிய கவிதையாம்.. நமக்கு ஒன்னும் புரிய மாட்டீங்குது.. அதான் கேட்டேன்..
ReplyDeleteகவிதையை போலவே பூனையின் படமும் அருமை..
என்னுடைய வரிகள் எளிமையானவை.. இது படிப்பவர்களுக்கே தெரியும்.
Deleteதப்பித்தால் சரி...!
ReplyDeleteதப்பி விட்டதுங்க.
Deleteகண்ணிலிருந்து தப்பிய பூனை கவிதையிலிருந்து தப்பவில்லை போல!
ReplyDeleteஆமாங்க. சரியாக சொல்லிவிட்டீர்கள்.
Deleteஅழகான கவிதை தோழி...பூனை கடைசியில் தப்பிப் போனதா இல்லையா?
ReplyDeleteஅதனுடைய முயற்சியிலேயே தப்பி விட்டதுங்க.
Deleteஉயிர்காக்க ஓடி உணர்விழந்த பூனைக்கு
ReplyDeleteதுயர்களைய தொடர்ந்த நோக்கு.
அருமை! வாழ்த்துக்கள் தோழி!
உயிர்காக்க ஓடி உணர்விழந்த பூனை
Deleteதுயர்களைய நோக்கு தொடர்ந்து!
எங்கங்க நோக்க ஓடிப்போச்சிங்க.
Delete
ReplyDeleteவணக்கம்!
தமிழ்மணம் 5
நோக்கும் கலையை நுவலும் கவிபடித்தேன்
போக்கும் துயரைப் புடைத்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.
Deleteethaartham ...
ReplyDeleteazhaku..
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க .
Deleteஅழகான புரிதல்! அழகான கவிதை! பாராட்டுகள் சசி.
ReplyDeletelife of pi திரைப்படம் நினைவுக்கு வந்தது.
திறந்திருக்கும் வீட்டுக்குள் எதுவுமிருக்காது என்று இனியேனும் அந்தப்பூனை தெரிந்துகொள்ளட்டும்.
ஆமாங்க தோழி என்ன முயன்றும் அதனிடம் சொல்ல தெரியவில்லை எனக்கு.
Deleteஅருமை, சசிகலா.
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteபூனை படம் நல்லா இருக்கு..... ! கவிதையும் தான்!
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க .
Deleteநோக்கு வர்மத்தால் சில பல
ReplyDeleteபுரிதல்கள் நிகழ்ந்தபடி கவிதை வசீகரித்தது ..
பாராட்டுக்கள்..
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க .
Deleteநோக்கு வர்மத்தால் சில பல
ReplyDeleteபுரிதல்கள் நிகழ்ந்தபடி//
அனைத்து விஷயங்களிலும்
பொருத்திப்பார்க்க அதிகப்\பொருள் தரும்
அருமையான ஆழமான அர்த்தமுள்ள வரிகள்
தொடர வாழ்த்துக்கள்
.
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.
Deleteநன்றிங்க ஐயா.
ReplyDelete” நோக்கு வர்மம் “ – புதிய சொல்லாடல். அதன் அர்த்தம் என்னவென்று தெரியாத நிலையில் அகராதிகளை, புரட்டிப் பார்த்தும் ஒன்றும் தோன்றவில்லை. வன்மமான நோக்கு என்றே பொருள் கொள்ள வேண்டியதாயிற்று. பூனையின் பார்வையில் வன்மம், உங்கள் பார்வையில் இரக்கம். கவிதை வரிகளை ரசித்தேன்.
ReplyDeleteபார்வையை ஒரே இடத்தில் நிறுத்தி அதன் மூலம் விளைவுகளை உண்டாக்குவதே “நோக்கு வர்மம்”
Deleteஇப்படி இணையத்தில் படித்ததே..
இக்கவிதை ஒரு பூனையை பார்த்துக்கொண்டிருந்ததால் எழுதியது அவ்வளவே.
நோக்கு வர்மம்! அழகு! பூனையின் திருட்டிலும் ஒரு புதிய கவிதை படைத்த கவிதாயினிக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteஅழகான கவிதை... எளிய நடையில் உள்ளது...
ReplyDeleteஎப்படியாவது
ReplyDeleteவிடுவிக்கும் நோக்கில் நானும்
என் பார்வையில் இருந்து
தப்பும் நோக்கில் அதுவும்.
நோக்கு வர்மத்தால் சில பல
புரிதல்கள் நிகழ்ந்தபடி.
நல்லாருக்குங்க வரிகள் வாழ்த்துக்கள்
உங்களின் கவிதை எனது தளத்தின் வாரத்தொகுப்பில் இந்த வாரம் முதலிடத்தைப்பிடித்திருக்கிறது... தொடர்ந்து இன்னும் பல அற்புத படைப்புகளைத்தர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
ReplyDelete