பூபோட்ட தாவணியில்
புது மஞ்சள் சிரிக்குதடி
தீபாவளியும் போச்சுதடி
தினுசா தான் அசத்துறியே..
புதுசாத்தான் உடுத்திகிட்டு
பொம்மலாட்டம் போடுறியே
திசையளந்தது போதுமடி
கொஞ்ச(சு)மெனை திரும்பித்தான்
பாரேன்டி.....
காத்திருக்கிறேன் காவகாரனாட்டம்
போவதெங்கே நீயும் ஓடும்
தண்ணியாட்டம்....
மனசக் காட்டத் தெரியளடி
நானும் அலைந்தேனே
குடிகாரனாட்டம்...
சந்தையிலே பார்க்கையிலே
சொந்தமாக்க துடிக்கிறேனடி
பந்தபாச உள்ளவந்தான்-நானும்
பரிசம் போட வரட்டுமா ?
முன்னே பின்னே வந்து நின்னு
பல் இளிக்க தெரியாதேடி-நீ
போகும் வழி பூத்திருக்கேன்
போதை தரும் பார்வையைத்தான்
தூதுவிடேன்....!
adengappaaaaaa.....
ReplyDeletenalla kavithai!
நன்றிங்க.
Deleteஇப்படி சொல்லியுமா இறக்கமின்னும்
ReplyDeleteபிறக்கவில்லை இந்த அப்பாவியின்
மேல் யோசித்து பார்க்கவும் நேரமில்லை
சீக்கிரமா முடிவு பண்ணி சேரும் நாளை
சொன்னாலே சொந்தமோடு உன்னை
நீ வாழும் வீட்டிற்கு அழைத்து வந்து
இருவரும் வாழ்வோம் இன்பமாக என்றுமே...
அத்திருநாளை பார்த்து காத்து நின்னேனடி
மனதுள் வைத்த எண்ணத்தை வெளியில்
சொன்னால் தானே எதுவுமே தெரியுமடி...
பேசாத காதல் என்றும் சொர்கத்தை சேராது
பேசினால் தானே அன்பிற்கும் பலனுண்டு
அந்த பலனை நீ தரும் நாளே எனக்கு திருநாள்...
தொடராக எழுதினேன் அருமையாக இருக்கிறது
ஆரம்பமும் முடிவில்லா முடிவும் சசி கலா
அழகாக சொல்லியிருக்கும் விதம் பாராட்டுக்கள்
வளரட்டும் இதுபோன்ற விதவிதமான படைப்புகள்
அத்தனையும் ஆரவாரமில்லா திருவிழாக்கள்...
ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிங்க.
Deleteஇன்னுமா தாவணிகள் இருக்கு???
ReplyDeleteஒரு காலத்தில் தாவணிதான் தமிழக பெண்களின் அடையாளமாக இருந்தது
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா என்று சிவாஜி உருகியதும்
பாவாடைக் கனவுகள் பாக்ஜியராஜ் பட டைட்டில்களும் அதுலாம் ஒரு காலம்
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteகிராமத்து பாடல்..சிறப்பு.
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteஇந்த பக்கம் இன்னைக்கு காதல் மணம் பயங்கரமா வீசுதே ...அக்கா
ReplyDeleteஅப்படியாப்பா ?
Deleteபார்வை மட்டும் போதுமே...!
ReplyDeleteஅழகிய வரிகள்...
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteவரிகள் அழகு...
ReplyDeleteரசித்தேன்...
tm5
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteகிராமிய மணம் வரிகளில் துள்ளி விளையாடுகிறது பாராட்டுக்கள்
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteபார்வைகள் தீண்டிக் கொண்டால்
ReplyDeleteபூமாலை சூட்டிக் கொள்ளதான்
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteபாவாடை,தாவணி கதைகளிலும் கவிதைகளிலும் தான் படிக்க முடியுது..பார்க்க முடியலை..காதலை கொஞ்சு தமிழில் கெஞ்சியும் கொஞ்சியும் கேட்கும் கவிதை..அருமை சசி.
ReplyDeleteநன்றி சகோ.
Deleteகாதல் தூது......அட
ReplyDeleteதங்கச்சிக்கு ஒரு பாவாடை தாவணி பார்சல்
ReplyDeleteஅழகிய காதல் தூது சகோ....
ReplyDeleteமனம் மயக்கும் பாடல் சகோதரி...
ReplyDeleteகிராமதுது காதல் பொறுமையானது நேர்மையானது அவசரமில்லாதது
ReplyDeleteதாவணிக்கனவுகள்! இரசித்தேன்! நன்றி!
ReplyDeleteதாவணிக்கனவுகள்! தாலாட்டும் நினைவுகள் ஆவனிப் பிறக்கட்டும் அழகுமலர் மணக்கட்டும்
ReplyDeleteஅன்புடையீர்,
ReplyDeleteவணக்கம்.
நல்லதொரு அழகான படைப்பு. மிகவும் ரஸித்தேன். பாராட்டுக்கள்.
தங்களின் வலைத்தளம் பற்றியும்
தங்களின் ஓருசில பதிவுகள் பற்றியும் இன்று
நம் “யுவராணி தமிழரசன்” அவர்களால்
வலைச்சரத்தில் பெரிதும் பாராட்டிப்
பேசப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளது.
இணைப்பு இதோ:
http://blogintamil.blogspot.in/2012/11/2.html
இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.
தங்களுக்கு என்
மனமார்ந்த பாராட்டுக்களும்
அன்பான வாழ்த்துகளும்.
அன்புடன்
வை.கோபாலகிருஷ்ணன்
gopu1949.blogspot.in .
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா. வலைச்சரமும் சென்று வந்தேன் மகிழ்ந்தேன் நன்றியையும் உரைத்தேன்.
Deleteபார்வையாலே துாது...
ReplyDeleteம்ம்ம்.... நடக்கட்டும்.
கவிதை அழகாக இருக்கிறது சசிகலா.
முன்னே பின்னே வந்து நின்னு
ReplyDeleteபல் இளிக்க தெரியாதேடி
அழகான சந்த நயத்துடன் எழுதுவது உங்களுக்கு வெகு இயல்பாய் அமைந்துவிடுகிறது சகோதரி