சொர்க்கத்தில் நிச்சயித்த
திருமணமும் சோகத்தீயில்
மாய்ந்தழியும் நிலை ஏனோ ?
வசந்தமாயத் தொடங்கிய
காதல் கல்யாணங்களும்,
நீதிமன்றத்தில் நிற்பதும் ஏனோ ?
திருமணமும் சோகத்தீயில்
மாய்ந்தழியும் நிலை ஏனோ ?
வசந்தமாயத் தொடங்கிய
காதல் கல்யாணங்களும்,
நீதிமன்றத்தில் நிற்பதும் ஏனோ ?
புரிதல் இல்லாத உறவுகள்,
நிறைவில்லா மனங்கள்
பூசலாய் முடிவுரைகள்!
வியாபாரத்தில் போட்டி,
வீடுகளில் அதற்குமேலாய்
தொடரும் சண்டைகளால்,
முடிவுகள் முன்னுரையில்!
நகமும் சதையுமென,
கண்ணின் இமைகளாய்,
உயிரோடுஉயிராக
வாழ்ந்த உறவுகளே ,
பிரியும் நிலை ஏனோ ?
ஆணும் , பெண்ணும்
சமமென்று வாழும்நிலை
மலர்ந்த பின்னும்
தீராத சண்டைகள்
ஓயாத ஒழுக்கு போல
சமத்துவத்தின் பாதை இங்கே
சாக்கடையாய் போகுமெனில்
வருங்கால சந்ததிகள்
தடம் புரளுமே ..
வழிகாட்டும் உறவுகளே
தடம் மாறிக் கண்ணீரில்
சம உரிமைப் போராட்டமாய்
இல்லமெங்கும் யுத்தங்கள்
இன்றைய சமூக மாற்றம்
பொறாமையின் விளைநிலமாய்
அடிமை விலங்கொடியும நேரம் ,
எதிராய் எழும்பிநின்று,
தலைவிரித்தாடும்,’ஆதிக்கவெறி’
இல்லமெனும் சரணாலயத்தில்
அன்பு செடி பட்டுப்போய்,
அடிமை சாசனம் எழுதிவிட,
இரண்டு ஜோடிப்பறவைகளும்,
போட்டி போட்டு மடிகின்ற,
புயல்வாழ்வு தேவைதானா?
போட்டா போட்டியென,
விட்டுக் கொடுக்க
மனமில்லாதவர்கள்
விட்டுப் பிரிய சம்மதப்பட்டு
பட்டமரமாய் போகலாமா?
ஈகோவைத் துறந்தால் வசநத வாழ்வு கிட்டிவிடும்தான். அருமையான கவிதை. மிக ரசித்தேன். நன்று.
ReplyDeleteபுரிதல், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாமையே குடும்ப உறவுகள் சிதைவதற்கு காரணம். பதிவு அருமை...
ReplyDeleteகணேஷ் ..
ReplyDeleteவருக வசந்தமே தங்கள் உடன் வருகை கண்டு மகிழ்ந்தேன் . எனது மனமார்ந்த நன்றி .
S.கௌதம்..
ReplyDeleteஉணருவார்களா ? தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
வணக்கம்! முட்டிக் கொண்டு மடிபவர்களிடம், விட்டுக் கொடுக்கும் பண்பு இல்லாததுதான் இத்தனைக்கும் காரணம் என்பதனை அருமையாய்ச் சொல்லி விட்டீர்கள்
ReplyDeletesariyaana seruppadi!
ReplyDeletepurithal illaatha thampathikalukku!
arumai!
இங்கே யார் முதலில் விட்டுக்கொடுப்பது
ReplyDeleteஎன்ற ஈகோ தான் வசந்தத்தை வதக்கி விடுகிறது சசிகலா.
புரிதல்விட்டுக் கொடுத்தல் இதெல்லாம் இல்வாழ்க்கையில் முக்கியம்.இல்லையெனில் இல்லாத வாழ்க்கைதான்!
ReplyDeleteஅருமை சகோ!
விட்டுகொடுத்தல் இல்லாத வாழ்க்கையில் நிம்மதி ஏது??
ReplyDeleteநல்ல கவிதை சசிகலா அவர்களே ..
இன்றைய காலப்போக்கில், அவசர உலகத்தில் நம்மைப்பற்றி, நம்மை சுற்றியுள்ளவர்களைப் பற்றி சிந்திக்க சிறிது நேரம் ஒதுக்கினாலே அனைத்தும் சரியாகும். எனவே வாழ்கையை அனுபவிக்கப் பழகுவோம்
ReplyDeleteகவிதை வரிகள் அனைத்தும் உண்மையான அனுபவமாய் உணர்ந்து படித்தேன் வாழ்த்துக்கள் சசிகலா..
புரிதலும்
ReplyDeleteவிட்டுக் கொடுத்தலும்
சகிப்புத்தன்மையும்
இல்லற வாழ்க்கையிலிருந்து வெளியேறுகையில்
உடைகிறது பந்தங்கள்
நல்ல கவிதை தோழி
தி.தமிழ் இளங்கோ ...
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
Seeni ....
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
AROUNA SELVAME ...
ReplyDeleteதங்கள் கருத்து உண்மையே .தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
சென்னை பித்தன் ....
ReplyDeleteஇல்லாத வாழ்வில் எதைத் தேடுகிறார்கள் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
Vishnu...
ReplyDeleteவிட்டுக்கொடுக்காததே நிம்மதி என நினைக்கும் மிருகங்கள் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
saravanandls ..
ReplyDeleteசிந்திக்க மறுக்கும் முகங்கள் . நன்றி சகோ .
செய்தாலி ..
ReplyDeleteதங்கள் பின்னூட்டம் மிகவும் சரியான உண்மையே .
தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
புரிதல் இல்லாத வாழ்க்கை. 35 வருடம் சேர்ந்து வாழ்ந்தவர்களிடம் கூட அந்தப் புரிதல் வருவதில்லை.
ReplyDeleteவிச்சு..
ReplyDeleteயாரவது ஒருத்தர் புரிஞ்சிகிட்டாலே போதுமே .
தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
இன்றைய நிலையில் அவசியம்
ReplyDeleteஅனைவரும் மனதில் ஏற்றுக் கொள்ளவேண்டிய கருத்தை
அழகிய கவியாகத் தந்தமைக்கு நன்றி
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Tha.ma 5
ReplyDelete// வாழும் காலம் கொஞ்சம்தான்
ReplyDeleteஇடையில் ஏன் பிரிவினைகள்!
வசந்த வாழ்வு வாழ்வதற்கு
விட்டுக் கொடுத்தால் தவறில்லை!//
இக்கருத்தை உள்வாங்கி நடந்தார்
விட்டுப்போகாது உறவுகள் வாழ்வும் கெட்டுப்போகாது
சா இராமாநுசம்
வசந்த வாழ்வுகள் வாழ விட்டுக்கொடுப்பது இங்கு நிறையவே குறைந்து போனது.ஈகோவும்,நமது கலாச்சார பதிவும் செய்யும் வேலைகள் இதற்கு முழு முதற்காரணமாய்/நல்ல பதிவு வாழ்த்துக்கள்.
ReplyDeleteசில குடும்பங்களில் மனம் விட்டுக் கதைத்துக்கொள்வதில்லை.இதுவே பிரச்சனைக்கு அடிப்படை.பிரிவு வரைக்கும் கொண்டு வந்து விட்டுவிடும் !
ReplyDeleteவணக்கம் !
ReplyDeleteஅழகிய நடையில்
இனிய வார்த்தைகளில்
அருமையான கவிதை !
கவிஞிக்கு பாராட்டுகள் !!
வசந்த வாழ்வு வாழ்வதற்கு நீங்கள் சொன்ன கருத்து கவி மிக்க நன்று அக்கா
ReplyDeleteஎளிய நடையில் விளங்க கூடியாதாக இருந்தது.
வாழ்க்கையை எளிமையாகவும் இன்பமாகவும் வாழும் வழிமுறையைக் கற்றுத்தரும் கவிதைக்குப் பாராட்டுகள் தென்றல்.
ReplyDeleteஇந்த வேகமான உலகத்தில் இருவரும் மனம் விட்டு பேச நேரம் கிடைப்பதில்லை. ஆனால் பல பதிவுகளை படித்து கருத்துக்களை இட நேரம் மட்டும் நமக்கு கிடைக்கிறது. அதனால் தம்பதிகள் வலைத்தளம் ஆர்ம்பித்து பதிவுகள் மூலம் தம் கருத்துகளை பறிமாறி கொள்ள வேண்டியதுதான்.
ReplyDeleteஉங்கள் கவிதையின் கருத்துக்கள் சிந்திக்க தூண்டுகின்றன. வாழ்த்துக்கள்
Ramani ...
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் ஐயா. தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
புலவர் சா இராமாநுசம் ...
ReplyDeleteஐயா தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
விமலன்..
ReplyDeleteதங்கள் கருத்து மிகவும் சரியானதே சிந்திப்பார்களா ? தங்களுக்கு எனது நனமார்ந்த நன்றி .
ஹேமா..
ReplyDeleteஆமாங்க ஹேமா பேசவும் கூலி கொடுக்கணுமோ ?
தங்களுக்கு எனது நனமார்ந்த நன்றி .
AMK.R.PALANIVEL ..
ReplyDeleteதங்களுக்கு எனது நனமார்ந்த நன்றி .
Esther sabi..
ReplyDeleteதங்கையே தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் .
கீதமஞ்சரி..
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
Avargal Unmaigal ..
ReplyDeleteஉண்மைதாங்க தங்கள் கருத்து யோசிக்கவேண்டிய செய்தியே .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
விட்டுக் கொடுக்க
ReplyDeleteமனமில்லாதவர்கள்
விட்டுப் பிரிய சம்மதப்பட்டு
பட்டமரமாய் போகலாமா?
-அருமையான வரிகள்
ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, விட்டுக்கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை!
நன்றி
-காரஞ்சன்(சேஷ்)
அன்பைப்பகிர்ந்து விட்டுக் கொடுத்துப் போனால் பிரிவு தேவையில்லை என அழகாய்ச் சொல்லிய கவிதை அதற்கு ஏற்ற காட்சிப்படங்கள்.
ReplyDelete