கல்வியில் அலட்சியம்
அறிவின்றி .....
பெற்றோர் மீது அலட்சியம்
உறவிழந்து ....
உறவுகள் மீது அலட்சியம்
தனிமையில் ...
காதல் மீது அலட்சியம்
தோல்வியில் ...
மொழி மீது அலட்சியம்
பொருளிழந்து ..
வேலையில் அலட்சியம்
முதல் இழந்து ..
பார்வையில் அலட்சியம்
காட்சியிழந்து ...
எதிர்கால அலட்சியம்
வாழ்வு கேள்வியாய் ..
சுற்றுப்புழ சூழல் அலட்சியம்
வீடே புழுதியாக ..
மனித நேய அலட்சியம்
மனங்கள் பாலையாக ...
சுகாதார அலட்சியம்
நாமே நோயாளியாக ..
சம்சார அலட்சியம்
உறவுகளில் விரிசலாக ...
மழலைகள் அலட்சியம்
வாழ்வு வெற்றுக் கூடாக ..
சாலை விதிகளில் அலட்சியம்
விதி முடியும் விபத்தாக ..
கண்களின் அலட்சியம்
குருடாக ...
லட்சியமில்லா வாழ்வில்
எல்லாமே அலட்சியமாய் ....!
ம் லட்சியமில்லா வாழ்வில் எல்லாமே அலட்சியம்தான் நேரும் அக்கா
ReplyDeleteஅலட்சியத்தின் விளைவுகள்,அருமையாய்!
ReplyDeleteமனதில் தைக்கும் வண்ணம் அலட்சியத்தின் வலியைச் சொன்னீர்கள் தென்றல். அதிலும் குறிப்பாக... வாழ்வு வெற்றுக் கூடாக... சாலை விதிகளில் அலட்சியம் என்ற வரிகள் அட்சர லட்சம் பெறும்.
ReplyDeleteTamilSmell என்னாச்சு தென்றல்? வாக்களிக்க முடியலை...?
ReplyDeleteஅலட்சியங்களை அக்கறையெடுத்து அலசிய விதம் அற்புதம் சசி !
ReplyDeleteஅலட்சியத்தால் உண்டாகும் இழப்புகளை அழகாகவே புரியவைக்கிறது கவிதை அழகுத்தமிழில். பாராட்டுகள் சசிகலா.
ReplyDeleteலட்சியத்தின் வீரியம் தெரிகின்றது அலட்சியத்தின் வலியில்..
ReplyDeleteகவிதைக்கு என் வாழ்த்துக்கள்
//லட்சியமில்லா வாழ்வில்
ReplyDeleteஎல்லாமே அலட்சியமாய் ....!//
இந்த வரிக்கு அந்த மாணவன் பேருந்தில் ‘பயணம்’ செய்யும் காட்சியே பொருத்தம். கவிதையும் இணைப்புப் படங்களும் அருமை.
அலட்சியம்தான் ஒரு நொடியில் வாழ்க்கையை மாற்றிவிடுகிறது. நல்ல கருத்துக்களை கவிதை மூலம் சொல்லியுள்ளீர்கள்.
ReplyDeleteவணக்கம்! வாழ்க்கையில் அலட்சியத்தினால் ஏற்படும் இலட்சிய வீழ்ச்சியை அருமையாகப் படம் பிடித்துக் காட்டிய கவிதை.
ReplyDeleteஅலட்சியங்களுக்கு நல்ல சாட்டையடி.
ReplyDeleteலட்சியங்களை அலட்சியம் செய்ய கற்றுக்கொள்கிற மனது வாய்க்கப்பெற்றவர்கள் நிறைந்த பொது வெளியில் இவைகள் நிறைய காணக்கிடைக்கிறதுதான்.சங்கடமாய் இருக்கிறது.
ReplyDeleteஇதையெல்லாம் சட்டம் போட்டு வளர்த்து விட முடியாது.கலாச்சாரம் வளர்த்து விட்டால் மட்டுமே உண்டு. அதைப்பார்த்து கற்றுக்கொண்டால் மட்டுமே உண்டு.நல்ல பதிவு வாழ்த்துக்கள்.நன்றி.வணக்கம்/
திருக்குறள் போல வாழ்வின் அனைத்து விஷயமும் குறிப்பிட்டிருக்கீங்க.....அனைத்தும் உரைக்கும் உண்மைகள்
ReplyDeleteலட்சியமில்லா வாழ்வில்
ReplyDeleteஎல்லாமே அலட்சியமாய் ....!
அலட்சியம் வேன்டாம் என்ற லட்சியத்தைப் பதிய வைத்த அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
இதைத் தான் எதிர்மறை விளக்கம் என்பார்களோ???
ReplyDeleteஅழகா எழுதி இருக்கீங்க சகோதரி...
Esther sabi ..
ReplyDeleteவருக தங்கையே தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் .
சென்னை பித்தன் ..
ReplyDeleteதங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
கணேஷ் ..
ReplyDeleteவருக வசந்தமே எப்பவும் போல பதிவிட்டேன் வாக்கிட்டேன் எனக்கும் ஒன்றும் விளங்கவில்லையே ...
ஹேமா....
ReplyDeleteவருக சகோ தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
கீதமஞ்சரி...
ReplyDeleteதங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
அரசன் சே ...
ReplyDeleteதங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
வே.நடனசபாபதி ..
ReplyDeleteதங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
விச்சு..
ReplyDeleteதங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
தி.தமிழ் இளங்கோ ...
ReplyDeleteதங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
Dhana Sekaran ...
ReplyDeleteதங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
விமலன்...
ReplyDeleteதங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
saravanandls ..'
ReplyDeleteதங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
இராஜராஜேஸ்வரி..
ReplyDeleteதங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
மகேந்திரன் ..
ReplyDeleteஅண்ணா தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
அலட்சியமே வாழ்வென ஆகிவிட்டது.
ReplyDeleteசிந்திக்க வைக்கும் கவிதை.
வருமுன் காப்பவன் அறிவாளி !
ReplyDeleteவந்த பின் தவிப்பவன் ஏமாளி ! - என்பதை
அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் ! பாராட்டுகள் !!
சிந்திக்கவேண்டிய விஷயம்
ReplyDeleteநல்ல கவிதை தோழி
azhakiya varikal
ReplyDeletenalla karuthukkal!
உங்களின் அலட்சிய கவிதை மிக அருமையாக உள்ளது
ReplyDelete