Wednesday 25 January 2012

பத்தாவது திருமணநாள்

ஒன்பது ஆண்டுகள்
ஓடிப்போனது இன்று நம்
பத்தாவது திருமணநாள் ...
ஜென்மம் ஜென்மமாய்
தாயாய் ....சேயாய்
உறவாய் , உதிரமாய் ...
நட்பாய் ....அனைத்துமாய்
உன்னோடு நான் வாழ வரமொன்று
வேண்டுகிறேன் ...
மக்கள் தொகை பெருக்கத்தில்
துளிகூட விருப்பம் இல்லை
ஆதலால் இரண்டு செல்வங்களோடு
நிறுத்திக்கொண்டோம்
நம் காதல் தந்த
கவிதைக்  கரு போதும்
எத்தனை ஆயிரம் குழந்தைகள்
வேண்டுமானாலும் பெற்றெடுப்பேன் ...
பொறுத்திரு  என் கண்ணாளா....

18 comments:

  1. மணநாள் வாழ்த்துகள்!எல்லா நலத்துடனும், வளத்துடனும்,நிறைந்த மங்கலத்துடனும் இருவரும் பல்லாண்டு வாழ்க.

    ReplyDelete
  2. இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
  3. எல்லா நலமும், வளமும் பெற்று வாழ வாழ்த்துகள்

    ReplyDelete
  4. எல்லா நலமும், வளமும் பெற்று வாழ வாழ்த்துகள்

    ReplyDelete
  5. நம் காதல் தந்த
    கவிதைக் கரு போதும்
    எத்தனை ஆயிரம் குழந்தைகள்
    வேண்டுமானாலும் பெற்றெடுப்பேன் ...
    பொறுத்திரு என் கண்ணாளா....

    நங்களும் தங்களின் அருமையான
    படைப்புகளுக்காகக் காதிருக்கிறோம்

    இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. மணநாள் வாழ்த்துக்கள் சகோதரி...காதலோடும், காதல் குழந்தைகளோடும், கவிதைக் குழந்தையோடும் பல ஆண்டு வாழ வேண்டுகிறேன்....

    ReplyDelete
  7. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா.

    ReplyDelete
  8. மணநாள் காணும் மங்கையே வாழ்க
    நெடுங்காலம் வாழ்க! நிறைவோடு வாழ்க!

    ReplyDelete
  9. சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் விருந்தளித்து நன்றி சொல்ல முடியா வருத்தம் மட்டுமே உள்ளது அன்பர்களே

    ReplyDelete
  10. கணக்கற்ற கவிக்குழந்தைகளை ஈன்று புறந்தந்து காதல் வாழ்வில் திளைத்திருக்க அன்போடு வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  11. காதல் திருமணநாளுக்கும் கவிதைக் குழந்தைக்கும் வாழ்த்துகள்.
    இனிய ஆண்டுகள் பல்லாண்டு வாழ்க!
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  12. திருமணநாள் வாழ்த்துக்கள்!!!!!பல்லாண்டு வாழ்க!

    ReplyDelete
  13. சங்கமம் சங்கருக்குள்,சசியா! சசிக்குள் சங்கரா!! இரண்டும் ஒன்றுதான்,ஈருடல்-ஓருயிர்...இதுதானே இல்வாழ்வின் இனிமை! கண்கள் கண்டதில்லை,காதுகள் மொழி கேட்டதில்லை,ஆனாலாலும்-அன்பு இதயம் வாழ்த்துகள் என்கிறது...எல்லா வளமும்,நலமும்பெற்று....ஆதவனாய் ஒளிர,அன்புடன் வாழ்த்துகிறோம்.....டி.ஜி.வி.பி.சேகர் ,மற்றும் குடும்பத்தினர்.

    ReplyDelete
  14. குடியரசு நாளில் குடுமியை உங்கள் கையில் கொடுத்து பத்தாண்டுகள் உங்களுடன் இல்லறத்தில் கழித்த உங்கள் கணவருக்கும் உங்களுக்கும் திருமண நல்வாழ்த்துக்கள். பல்லாண்டு இது போல குடுமியை பிடித்து சந்தோஷத்துடன் வாழ வாழ்த்துகிறேன் தோழியே!!!

    ReplyDelete
  15. மன்னிக்கவும்.தாமதமாக வாழ்த்து சொல்ல வந்துள்ளேன். பல்லாண்டு இன்புற்று வாழ என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. சசி,
    அனைத்து வளங்களுடனும் செழுமையாய் வாழ்ந்திட வாழ்த்துக்கள்.

    (மிக தாமதமாய் வந்ததற்கு மன்னிக்கவும். 15 நாள் விடுப்பில் தாயகம் சென்றிருந்தேன். முழு நேரத்தையும் குடும்பத்தினருடன் களிக்கும் ஆவலில் இணையம், தொலைகாட்சி அனைத்தையும் தவிர்த்திருந்தேன்.)

    ReplyDelete