என் தோட்ட பூப்பறிக்கும்
எதிர்வீட்டு பெண்ணழகி
சுருட்ட முடி பின்னலிலே
சொக்கத்தான் வைக்கிறியே..
கழனியில களையெடுத்தா
கன்னியுன் முகம் தெரியுதடி
கடுப்பாகி நான் நிமிர்ந்தா
கண்ணெதிரே நிக்குறடி.
போர்த்தி நானும் படுத்துக்கிட்டா
(உள்ளம்)போர்களமா தெரியுதடி...
உறக்கமேது கண்ணுக்குள்ள
உன்னப்பார்த்த நாள் முதலா ..
சட்டியில சோறு திண்ணு
சாக்கடையில் நான் குளிச்சேன்
முச்சந்தியில தான் நின்னு
முத்த மழைக்கு காத்திருந்தேன்.
சிரிப்பா தான் சிரிக்குதடி
சிரிக்கி மவளே என் பொழப்பு
கள்ளத்தனம் இனியுமேன்டி
கண்ணசைவில் சொல்லேன்டி
காதலாகி வந்தவளே.
களை எடுக்கும் போதும் பூப்பறிக்கும் போதும் பேசாமல் இந்தப்
ReplyDeleteபாட்டை பாடிடலாம் போல . ...
சூப்பர்.. அருமை.. கலக்கல்..
ReplyDelete"களை" கட்ட கூட பாடலாம்..
ReplyDeleteஅட, சூப்பர்
ReplyDeleteஒழுங்கா களை பறிக்காம அங்க பாட்டும், கும்மாளமும்..., ஒழுங்கா வேலையை பாருங்க. இல்லாட்டி கூலில பத்து ரூபா பிடிச்சுக்குவேன்.
ReplyDeleteகளை கட்டுது.....உங்க பாடல்...
ReplyDeleteகண்ணசைவில் சொல் கேட்கும்
ReplyDeleteகருத்தான பாடல்..!
சூப்பர்
ReplyDeleteமனதோடு ஒட்டிக் கொண்டது வரிகள் அருமை ! வாழ்த்துக்கள் தோழி .
ReplyDeleteநல்ல கவிதை.
ReplyDeleteஅருமை... வாழ்த்துக்கள் சகோதரி...
ReplyDeleteகாதலாகி விட்டால் என்னவெல்லாம் நடக்கிறது!
ReplyDeleteசுவையான சம்பவங்களுடன் கவிதை கண் முன்னே காட்சிகளைக் கொண்டு வருகிறது.
good .
ReplyDeleteEniya vaalththu.
Vetha-Elangathilakam.
கழனியில களையெடுத்தா
ReplyDeleteகன்னியுன் முகம் தெரியுதடி//
படமும் கவிதையும் அருமை.
படத்தில் காதல் கவிதை பாடிக் கொண்டே
வயலில் வேலைப் பார்க்கிறார்.
ஆணின் காதல் உணர்வுகளைச்சொல்லும் அழகான நாட்டுபுறக் கவிதை. ;) பாராட்டுக்கள்.
ReplyDeleteகிராமீய மணம் கமழும்
ReplyDeleteஅருமையான பகிர்வுக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
tha.ma 7
ReplyDeleteகாதலாகி விட்டால் கழனி என்ன காணும் இடமேல்லாம் கன்னியவள் முகம் தெரியும். காதல் மனங்களை பிரதிபளிக்கும் கவிதை வரிகள்.
ReplyDeleteஅருமையான கவிதை, எனது வணக்கங்களும் வாழ்த்துக்களும்
வரிகள் அருமை
ReplyDeleteகவிதனில் காட்சிப் பதிவினையும் சேர்த்துத்தரும்
ReplyDeleteகவியரசியன்றோ நீங்கள்!...
மண்ணின் மணம் மனதை ஈர்த்துக்கொண்டு போகிறது தோழி!
மிகவும் சிறப்பு!
வாழ்த்துக்கள்!
http://www.youtube.com/watch?v=cSLfJeXPgMw
Deletesubbu thatha
நல்லாருக்கு
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteகடந்த கால நினைவுகளை ஒரு தரம் மீட்டிப்பார்க்க சொல்லுகிறது கவிதை அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
களை கட்டுது உங்க களையெடுப்பு பாடல்! வாழ்த்துக்கள்!
ReplyDelete//கடுப்பாகி நான் நிமிர்ந்தா
ReplyDeleteகண்ணெதிரே நிக்குறடி.// கலக்கல்!
//சிரிப்பா தான் சிரிக்குதடி
சிரிக்கி மவளே என் பொழப்பு
கள்ளத்தனம் இனியுமேன்டி
கண்ணசைவில் சொல்லேன்டி
காதலாகி வந்தவளே.// அருமை சசிகலா!
கிராமத்துக் கவிதை... சூப்பரோ சூப்பர் அருமை...
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=cSLfJeXPgMw
ReplyDeletesubbu thatha.
www.subbu thatha.blogspot.com
///கள்ளத்தனம் இனியுமேன்டி
ReplyDeleteகண்ணசைவில் சொல்லேன்டி///
இயல்பான நடை..
உருத்தாக இன்னும் ஏன் தயக்கமடி
சொல்லடி பைங்கிளியே
நில்லடி கொஞ்ச நேரம்
சீரடி எடுத்துவைப்போம் ..
நிழல்கூட நம் மீதாக என
உரைக்கும் அழகுச் சொல்லாடல் தங்கை சசி...
வணக்கம் சகோதரி
ReplyDeleteகிராமிய மணம் கமழும் கவிதையை சிந்தத்ததே சிறப்பு. ஒரு சில வார்த்தைகள் (சிரிக்கி மகளே, பொழப்பு) கவிஞர் வைரமுத்து அவர்களின் பாணிக்கு இணையாக வந்துள்ளது சகோதரி. அதற்கு எனது வாழ்த்துக்கள். கவிதையை அவரது தொணியில் வாசித்துப் பாருங்கள் உண்மை புரியும், பகிர்வுக்கு நன்றீங்க.
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_18.html) சென்று பார்க்கவும்... நன்றி...
தங்களின் தகவலுக்கு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Happiness.html
ReplyDeleteசிரிப்பா தான் சிரிக்குதடி
ReplyDeleteசிரிக்கி மவளே என் பொழப்பு
கிராமத்துக் கவிதை சூப்பர்...
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்...
எதுகை மோனையோட படிக்கறப்பவே மனசுக்குள்ள பாடறாப்பல இருக்கு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் பாடலாக பாடிய சுப்பு தாத்தாவிற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
ReplyDeleteகணினி சரியாக இயங்காததால் அனைவருக்கும் தனித்தனியே நன்றி சொல்ல இயலவில்லை. அனைவரும் மன்னிக்கவும்.
காதல் கமழும் கிராமியப்பாடல்.
ReplyDeleteமண்வாசனையோடு மனத்தை இழுத்துப்பிடிக்கும் காதற்பாடல் அழகு. பாராட்டுகள் சசிகலா.
ReplyDelete