பார்வையிலே புது தினுசு
பட்டாசுகளின் அணிவகுப்பு
பார்க்க பார்க்க இனித்திடுமே
பல கைகள் இணைந்திடுமே.
மகிழ்விற்கோ எல்லையில்லை
மனங்களிலோ வந்தாடும் கிள்ளை
கைகளில் சிரிக்கும் சுறு சுறு மத்தாப்பு
கண் கவர்ந்திழுக்கும் வானவேடிக்கை
திண்ணைக்குத் திண்ணை சிரிப்பொலி
தினம் தேடும் மனம் இந்த தீப ஒளி
தீபாவளிப் பலகாரமோ பல ரகமே.
தின்னத் தின்ன திகட்டா சுவை தருமே.
ஒரு நாள் கூத்து முடியுமடி
ஒய்யார நடை போட்டு போகுமடி
தின்னப் பலகாரங்கள் செரிமானமாக
தீபாவளி லேகியமும் செய்தாயோடி
சீரகத்தை மல்லியோடே
ஊறவைத்து இஞ்சியும்
சேர்த்தரைத்து வெல்லத்தை
கலந்து நீயும் நெய் விட்டு
காய்ச்சி இறக்கி ..
பாங்குடனே பத்திரப்படுத்திய
லேகியத்தை உண்டு நாமும்
சேமத்தை கொண்டு வருவோம்.
தின்னப் பலகாரங்கள் செரிமானமாக
ReplyDeleteதீபாவளி லேகியமும் செய்தாயோடி
>>>
லேகியம் கிண்ட எனக்கு தெரியாது. நீயே கிண்டி கொடுத்திடு சசி
இருங்க நான் தீபாவளிக்கு மாமியார் வீட்டுக்கு போறேன் வந்து கிண்டி அனுப்புறேன்.
Deleteஅப்போ இனி வேளச்சேரில இருந்து சைதாபேட்டைக்கு எப்படி போறதாம்?
Deleteபரவாயில்லையே , உங்கள் வீட்டில் தீபாவளி பலஹாரங்கள் முடிந்து
ReplyDeleteலேஹியமும் கிண்டியாகி விட்டதா ?
பலகாரம் இந்த முறை மாமியார் வீட்ல போய் தாங்க செய்யனும்.
Deleteஅனைவருக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். மீண்டும் சந்திப்போம்.
தீபாவளி பலகாரம் தீபாவளிக்கு லேகியம் நல்லதுதான் ஆமா தனாயாவா அது என்ன ஹிந்தியா தமிழ்ல மல்லினு தெரியாதா இது தமிழ் வைத்தியத்தியமல்லவா
ReplyDeleteமல்லியென்றே மாற்றிவிட்டேன். நன்றி.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteபதிவு அருமை தொடர எனது வாழ்த்துக்கள்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
லேகியப் பதிவு இரசித்தேன்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
ReplyDeleteபாட்டிங்க வீட்ல இருந்தாத்தானே லேகியம் கிண்ட? அவங்க இருக்கற முதியோர் இல்லத்த தேடித்தான் போகணும்... மாமியார் வீட்ல கொண்டாட இருக்கும் தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteசீரகத்தை மல்லியோடே
ReplyDeleteஊறவைத்து இஞ்சியும்
சேர்த்தரைத்து வெல்லத்தை
கலந்து நீயும் நெய் விட்டு
காய்ச்சி இறக்கி ..
பாங்குடனே பத்திரப்படுத்திய
லேகியத்தை உண்டு நாமும்
சேமத்தை கொண்டு வருவோம்.
சகோதரி1 நீங்கள் எப்போது சித்த வைத்தியம் கற்றுக் கொண்டீர்கள்?
எனது உளங் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்!
உபயோகமான பகிர்வு நன்றி.தீபாவளி நல் வாழ்த்துக்கள்
ReplyDelete//தின்னப் பலகாரங்கள் செரிமானமாக
ReplyDeleteதீபாவளி லேகியமும் செய்தாயோடி//
அழகு நினைவூட்டியதற்கு நன்றிகள். பாட்டி சொல்லியுள்ள செய்முறைப் பக்குவம் மிகவும் அருமை.
சீரகம் எவ்வளவு? மல்லி எவ்வளவு? :)
ReplyDeleteதீபாவளி வாழ்த்துகள் சசிகலா!
தீபாவளி லேகியம் செய்முறை அருமை! நன்றி!
ReplyDeleteசரியான நேரத்தில் சரியான பதிவு
ReplyDeleteபகிர்வுக்கு வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்
tha.ma 5
ReplyDeleteDeepaavali vaalthugal!
ReplyDeleteதீபாவளி நல்வாழ்த்துகள்.
ReplyDeleteரொம்ப முக்கியமான தகவல்! ரொம்ப அழகான கவிதையாக..
ReplyDelete//கண் கவர்ந்திழுக்கும் வானவேடிக்கை//
ReplyDeleteவாண வேடிக்கை!
எல்லாத்துக்கும் அளவு எவ்வளவுன்னு சொல்லியிருந்தா நல்லாருக்கும்... த.ம.6
ReplyDeleteஅடடா... சகோதரிக்கு இவ்வளவு தெரியுமா...? வாழ்த்துக்கள்...
ReplyDeleteதின்னப் பலகாரங்கள் செரிமானமாக
ReplyDeleteதீபாவளி லேகியமும் செய்தாயோடி//
தின்ன பலகாரம் செரிமானமாக கண்டிப்பாய் லேகியமும் சாப்பிட வேண்டும்.
அருமை.
தீபாவளி பலகாரம் செரிக்க நல்லதொரு பாட்டி வைத்தியத்தை சொல்லித் தந்தமைக்கு நன்றி. மறைந்து போன பாட்டி வைத்தியத்தை தாங்கள் நினைவூட்டுவது உண்மையில் பெரிய விடயம் சகோதரி. தங்கள் மகத்தான பணிக்கு வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள். தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இந்த அன்பு சகோதரரின் தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
ReplyDeleteமுதல்ல எனக்கு தீபாவளி பலகாரம் அனுப்பி வைங்க, சாப்ட்டுட்டு அப்புறம் நீங்க சொன்னத அப்படியே பாலோ பண்றேன் அவ்வ்வ்வ்
ReplyDeleteரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்;
ReplyDeleteமறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?
மிகமிக அருமை!
ReplyDeleteபலகாரம் சாப்பிட்டு
படும்பாடு வயிற்றுக்கு
செலவில்லா நல்ல
லேகியமும் தந்தீரோ!
செய்வதற்கும் சுலபம்தான்!
நல்ல பகிர்வு... மிக்க நன்றி சசிகலா!
அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
வணக்கம்
ReplyDeleteஇன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது சென்று பார்வையிட.இதோ.
http://blogintamil.blogspot.com/2013/11/blog-post.html?showComment=1383269378727#c4882904206101416278
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post.html) சென்று பார்க்கவும்... நன்றி...
மங்களம் பொங்கும் திருநாளாக
ReplyDeleteமனதினில் இந்நாள் நிலைத்திடவே
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்
அனைவருக்கும் என் இனிய
தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் !
ReplyDeleteஇனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
அன்பாம் அமுதை அளி!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
மிகவும் அருமை .தீபாவளி வாழ்த்துக்கள்
ReplyDelete