அடிக்கொரு தும்மலும்
அடி வயிற்றை பிடித்து
இருமலும்...
ஆத்தாடி பிள்ளை
படும் பாட்டை...
காணச் சகியவில்லையே.
மருத்துவரை பார்த்தும்
மாத்திரையை கொடுத்தும்
நெஞ்சு சளி குறையவில்லை
நேத்து இரவு தூங்கவில்லை.
பச்சை தண்ணியில
ஆட்டம் போட்டு
பிள்ளை படும் பாட்டை
என்ன சொல்ல..
பத்தியமிருந்து பெத்தவளே
பாசமா வளர்ப்பவளே
பாட்டி சொன்ன
வைத்தியம் மறந்திடுச்சா ?
தேங்காய் எண்ணெய்
சூட்டில் கற்பூரத்தை
சேர்த்து வெதுவெதுப்பா
நெஞ்சில தான் தினம்
தடவி விட சளி கரையும்...
வாரத்தில ரெண்டு நாள்
கொதி நீரில் துளசியத்தான்
கொதிக்க விட்டு வடிகட்டி
குடிச்சி வர நோய்க் கிருமி
ஓடிடுமே...
சொன்னதெல்லாம் நினைப்பிருக்கா ?
பாட்டி வைத்தியத்தில் பிழையிருக்கா ?
இந்த வாரம் வலைச்சர ஆசிரியராக எனது பகிர்வுகளை காண இங்கே க்ளிக் செய்யவும்.
அன்பாய் நல்லவழி
ReplyDeleteஅருமையாச் சொன்னபடி
கண்போல்ப் பிள்ளைகளைக்
கவனித்து வளர்த்திடவே
உன்போல் ஒருபாட்டி
ஊருக்கு மிக அவசியமே!
மிகமிக அருமை.. வரியும் வைத்தியமும்...:)
வாழ்த்துக்கள் தோழி!
இவ்வார வலைச்சர ஆசிரியப் பணிப் பொறுப்பேற்மைக்கும்
Deleteநல் வாழ்த்துக்கள்!
அட... அருமை...! பாட்டி சொன்ன வைத்தியம் மறக்காமல் இருக்க வேண்டும்...
ReplyDeleteபாட்டி சொல் பேச்சு கேட்டால் போச்சு
ReplyDeleteசுகக்குறைவு. அருமை. ஆரோக்கியம்.
சின்ன சின்ன நோவுக்கெல்லாம் டாக்டரை தேடி போய் காசையும், பிள்ளையின் உடம்பையும் பாழாக்குறோம்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபாட்டி வைத்தியம் அருமை
ReplyDeleteவலைச்சர ஆசிரியப் பணிக்கு
வாழ்த்துக்கள்!
இதெல்லாம் படிச்சாலும் சளி பிடிச்சாக்க ஒடுவதேன்னவோ ஃ பார்மசிதான்
ReplyDeleteada...
ReplyDeletenalla kavithai..!
valaichara aasiriyar panikku vaazhthukkal..
பாட்டி வைத்தியத்தில் பிழையிருக்காது.. எளிமையான வைத்திய்க்குறிப்புகள்..
ReplyDeleteவலைச்சரப்பணிக்குப் பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..!
வணக்கம்
ReplyDeleteசசி(சகோதரி)
பாட்டி வைத்தியம் பற்றிய கவிதை அருமை வலைச்சர ஆசிரியர் பணிக்கு எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அடடா கவிதை வடிவில் பாட்டி வைத்தியம் அருமை ....!
ReplyDeleteதுளசி ஓக்கே ...! இப்ப வர்ற சூடம்லாம் ஓகேவா ....?
எதிலும் கலப்படம் இருந்தால் எங்கு தான் செல்வது ? நியாயமான கேள்வி என்னிடம் பதில் இல்லையே.
Deleteபாட்டி வைத்திய கவிதை மிக அருமை! தொடருங்கள்! வலைச்சர ஆசிரிய பணிக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteவருகை தந்த அனைவருக்கும் மிக்க நன்றிங்க. வலைச்சரப்பணியில் இருப்பதால் தனித்தனியாக நன்றி சொல்ல இயலவில்லை. மன்னிக்கவும்.
ReplyDeleteபயனுள்ளவைகளை
ReplyDeleteஇப்படியும் சுவாரஸ்யமாய் சொல்லலாமோ
வித்தியாசமான அருமையான பகிர்வுக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
பாட்டி வைத்தியத்தை பாயாசமாய் இனிக்க கொடுத்து விட்டீர்கள்! அருமை! இன்னும் நிறைய சொல்லவும்.. :)
ReplyDeleteவலைச்சர பணிக்கு வாழ்த்துகள் சசிகலா!
சூப்பர் மருந்து... இப்போலாம் யாரு பாலோ பண்றா? ஆனா அத அழகா சொல்லிட்டீங்க
ReplyDeleteபாட்டி வைத்தியத்தைப்பாடலாகச்சொன்ன விதம் அருமை.
ReplyDeleteவலைச்சர ஆசிரியரானதிற்கு பெறும் மகிழ்ச்சியடைகிறேன் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅட கவிஞராக இருந்த நீங்க வைத்தியராக மாறி இப்ப ஆசிரியராக மாறிவிட்டீர்களே.பாராட்டுக்கள் சகலகலாவில்லிக்கு சாரி வல்லிக்கு.
ReplyDeleteபாட்டி சொன்ன வைத்தியம் அருமையான வைத்தியம்ல.....
ReplyDeleteபாட்டி வைத்தியம் உண்மைதான்! செயதால் வருவது நன்மைதான்!
ReplyDeleteஅருமை அக்கா.....பாட்டி வைத்தியமும் நல்லா இருக்கு ..கவிதையும் நல்லா இருக்கு
ReplyDeleteஅருமை அம்மா...நான் முதல் முறையாக உங்களுடைய வலைத்தளதிற்கு வருகிறேன்...
ReplyDelete♥ ♥ அன்புடன் ♥ ♥
S. முகம்மது நவ்சின் கான்.(99likes)
www.99likes.blogspot.com
தங்களின் தகவலுக்கு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-1.html
ReplyDeleteபாட்டி வைத்தியம் நமக்கான
ReplyDeleteபொக்கிசம் அல்லவா!
மறவாமல் கடைபிடித்தால் மருத்துவமனைகள்
வெறிச்சோடி பொயிடுமே! ... கவிதையிலும் பாட்டி வைத்தியமா? அருமை சகோதரி.