ஆத்தோர நாணலுந்தான்
அவன் வரவை கூறிடுதே
பறிச்சி வைச்ச மொட்டெல்லாம்-திரும்பி
பார்க்கும் முன்னே மலர்ந்திடுதே
முடிஞ்சி வைச்ச கனவினிலே-சொல்ல
முன்னூறு மீதமுண்டு....
மரநிழலும் காத்திருக்கு
மனம் முழுக்க ஆசையிருக்கு
முறைச்சிப் பார்த்து போறவறே
முன்னெதிரே வந்தாயென்ன
முளைப்பாறி கட்டி வச்சேன்-உன்
முன்கோபம் தீர்ந்திடவே
நாலு வார்த்த பேசி போனா-உசுர
நாள பொழுது தாங்கிடுமே
காக்க வச்சி பார்த்திருந்தா-மனசு
காயம் பட்டுப் போகுமய்யா.
சேர்த்தனைச்ச சேறாலே
தேங்கி நிக்கும் நீரய்யா-உனக்கு
பார்த்துவச்ச பொண்ணு இவளை
திரும்பி பார்க்காம போவதேன்யா ?
அடேங்கப்பா இம்புட்டு ஆசையோடு காத்திருக்க
ReplyDeleteயாருயா இவக பாக்காமல் போறது !!!!........:))))
அருமையான கவிதை வரிகள் வாழ்த்துக்கள் என் தோழி .
ஹஹ யாருங்க காத்திருப்பது ?
Deleteகவிதையின் ஒவ்வொரு வரியிலும் ஆசை, பாசம், நேசம் நிறைந்து ஓடுதே.. அருமையான கவிதை.
ReplyDeleteரசித்தமைக்கு நன்றி தோழி.
Deleteநான் போய் கூட்டி வரேன் தங்கச்சி
ReplyDeleteபக்கத்து வீட்டு பொண்ணுக்குத்தான் பரிசம் போட்டிருக்காங்க இருங்க அவளிடம் சொல்கிறேன்.
Deleteகாக்க வைப்பதும் காதலில் அழகுதானே? ''நாத்து நட்டுக் காத்திருந்தா நெல்லு கூட வெளஞ்சிருக்கும்... காக்க வச்சிக் கன்னி வந்தா காதலுண்டா கேட்டுச் சொல்லு' என்று நினைத்தாலே இனித்த காலத்தில் நான் கேட்டேனே.... இப்போ எப்படி இருக்கு" என்கிறானோ!
ReplyDeleteஎந்த காலத்திலும் காக்க வைப்பது இருக்கும் போல.
Deleteஎன்ன ஒரு பிரியம்...! அக்கறை...!! உரிமை...!!!
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரி...
(கடிதம் என்னவாயிற்று...?)
எழுதினேன் எழுதுகிறேன்... எழுதிவிடுவேன் சகோ ஹஹஹ.
Deleteகவிதை செம ...
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றிங்க.
Deleteயாரவது ஒரு இசையமைப்பாளரிடம் மெட்டமைக்கச் சொல்லுங்கப்பா...அருமையான மெலடிப் பாட்டுக்கான வரிகள் தயாராய் இங்கே.....
ReplyDeleteஅப்படியா மிக்க மகிழ்ச்சிங்க.
Deleteபறிச்சி வைச்ச மொட்டெல்லாம்-திரும்பி
ReplyDeleteபார்க்கும் முன்னே மலர்ந்திடுதே
மலர்ச்சி மலரட்டும் வாழ்வில்..!
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteநான் வேண்டுமானால் துர்து போய் சொல்லட்டுமா சசிகலா...?
ReplyDeleteவாங்க தோழி.
Deleteகாதல்...ரசனை.
ReplyDeleteரசித்து கருத்திட்டமைக்கு நன்றி தோழி.
Deleteமுடிஞ்சி வைச்ச கனவினிலே-சொல்ல
ReplyDeleteமுன்னூறு மீதமுண்டு....
அருமை... கிராமத்து வாசம் மனதை தொடுகிறது...
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteசரளமான வார்த்தைகளில்
ReplyDeleteதெரியுது அன்பின் ஆழம்
அதைச் சொன்னவிதம் அருமை
தொடர வாழ்த்துக்கள்
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.
Deletetha.ma 6
ReplyDeleteநன்றிங்க ஐயா.
Delete\\சேர்த்தனைச்ச சேறாலே
ReplyDeleteதேங்கி நிக்கும் நீரய்யா-உனக்கு
பார்த்துவச்ச பொண்ணு இவளை
திரும்பி பார்க்காம போவதேன்யா ?\\
அட..என்ன ஒரு ரசனையான உவமை. அசந்துபோகிறேன். பாராட்டுகள் சசி.
மிக்க மகிழ்ச்சி தோழி.
Deleteஎன் முகப்பில் உங்கள் பக்கம் வராததால் நிறைய பார்க்காமல் போய்விட்டேன் ...........
ReplyDeleteஅற்புதமான கவி ......
சந்தமும் சிந்தும் ......
சிந்தனையை தூண்டி .....
சிலிர்க்க வைக்கிறது தோழி .......
இப்படி உருக உருக .........
மணக்க மணக்க பாடியபின்னும் ..
.பார்க்காமல் போகமுடியுமா ? பெண்ணின் ஏக்கம் தொக்கி நிற்கும் கவி வரிகள் பாராட்டுகள் தோழி
mmmm-----
ReplyDeletenallaaa irukku..