நெஞ்சோர வரப்பு வெட்டி
நீர்பாச்சிப் போன கண்ணே!
நெடுந்தூரம் போகவேணும்
கதிரதுவும் மெய்களம்காண!
காற்றாடிக்கும் வெயிலுரைக்கும்
வானமது பொய்த்து நிற்கும்!
போட்டவித துளிர்க்க வேணும்
நெற்கதிரா தளிர்க்கவேணும்!
களைவளரப் பறிக்கவேணும்
துயிலாம காக்கவேணும்!
நீர்பாச்சி நிக்க வேணும்
காக்காஅத வெரட்டவேணும்!
உரமிட்டு வளர்க்கவேணும்
நாத்து பிரிச்சி நடவும் வேணும்!
பாத்திகட்டி வைக்க வேணும்
பாதம் படாம நடக்கவேணும்!
அணியணியா அறுக்கவேணும்
மாடுபூட்டி போரடிக்கவேணும்!
பதரெல்லாம் நீக்கவும் வேணும்
களம்கொண்டு சேர்க்க வேணும்!
புத்தாடை புனைய வேண்டும்
புதுவரவை அவிக்கவேண்டும்!
பொங்கலிட்டு உண்ண வேணும்
மழலை சிரிக்க ரசிக்கவேணும்!
குடும்பமது தழைக்க வேணும்
நாடும் வீடும் செழிக்கவேணும்!
வாடியென் அத்தப் பொண்ணே
வாய்க்காலோரம் இளைப்பாற!
உழைப்பெல்லாம் உனக்காக
தலைசாய்க்க உன்மடிதாடி!
நாட்டின் வளர்ச்சி விவசாயின் கையில்
ReplyDeleteவிவசாயின் சிறப்புகள் அருமை !
தொடர வாழ்த்துகள்...
அணைவெள்ளம் வத்தி்போச்சி
ReplyDeleteமீனெல்லாம் செத்துப்போச்சி
கொக்கெல்லாம் பறந்துபோச்சி
ஆனாலும் நம்பியே வாழ்க்கை
ஆழ்தொளியில் புதைந்திருக்கும்
மீன்முட்டை காத்திருக்குமாபோல்!
அப்படியே கிராமத்து காட்சியெல்லாம் கண்ணு முன்னாடி நிக்குது
ReplyDeleteஅத்தனியும் பாடுவோம்னு பாத்தாக்க......
பட்டு ரோசா பாடினதையே கேட்கலையே...
பாட்டு ச்த்தம் கேட்கலையா...
சுப்பு தாத்தா.
http://www.youtube.com/watch?v=iLC3SEO4QD4
Deleteஉங்கள் தளத்திலும் :
DeleteVisit : http://subbuthatha.blogspot.in/2013/04/enchanting-heart-rendering-song-by.html
ReplyDeleteகுடும்பமது தழைக்க வேணும்
நாடும் வீடும் செழிக்கவேணும்!
செழிப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.
இனிமையான வரிகள் சகோதரி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநாற்று நடும் சேற்றின் வாசம் கவிதைகளில்....
ReplyDeleteஅழகிய வரிகள்
புதுநெல்அறுத்து பொங்கலிட்டு வீடுநிறைய மகிழ்ச்சி பொங்கட்டும்.
ReplyDeleteஇனிமையான கவி.
மண் வாசனை மனதை மயக்குது ! தொடர வாழ்த்துக்கள் தோழி
ReplyDeleteநாட்டின் வளர்ச்சியே
ReplyDeleteநிலங்களின் வளர்ச்சி....
விவசாயியின் முன்னேற்றமே
ஒரு நாட்டின் ஆரோக்கியமான முன்னேற்றம்...
அழகு தமிழில்
அத்தனையும் அழகாய் விளைந்துள்ளது...
பயிரிட்ட சசி கலாவுக்கு
என்னுடைய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்....
விளைச்சல் அத்தனையும்
மக்களுக்காகவே வந்து சேரும் ஓர் நல்லெண்ணம்....
தொடரட்டும் தங்களின்
பயனுள்ள இந்த கவிப்பயிரிடும் அன்றாடபணி....
மண்வாசனை துகளாய் உள்ளதே .அருமை
ReplyDeleteகுடும்பமது தழைக்க வேணும்
ReplyDeleteநாடும் வீடும் செழிக்கவேணும்!
நாடும், வீடு செழிக்கட்டும்.
உறவுகளுடன் மகிழ்ச்சி பொங்க களிக்கட்டும்.
அசத்தலான அருமையான
ReplyDeleteகிராமீயச் சொற்களைக் கொண்டே
கட்டமைக்கப்பட்ட கவிதை
உள்ளம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 5
ReplyDeleteஅழகான வயலினிலே
ReplyDeleteஅருமையா பாட்டிசைச்சு
பொறுமையா நீங்களுந்தான்
சொல்லிப்புட்டுபோறீக
கேட்டவுடனே எங்களுக்கு
மண்வாசம் வருகுதம்மா
பாட்டிசைச்ச உங்களாலே
மனசு நிறைஞ்சுபோச்சுதம்மா
அழகான பாட்டாலே
வயல்வாழ்வு சொன்னீக
நிறைவாக உங்களைத்தான்
நெஞ்சார வாழ்திறேன்ம்மா...
அழகான பாடலை அற்புதமாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
ReplyDeleteதலை சாய்க்க மடி தேடி, உழைத்துக் களைத்த விவசாயியின் குரல் அருமை! எளிமையான வரிகளில் மனசைக் கொள்ளை கொண்டது தென்றல்!
ReplyDeleteஎளிய வரிகளில் ஒரு போக விளைச்சலையும் ஒரு காதலையும் சொன்னவிதம் அழகு
ReplyDeleteஅழகான கவிதை சசிகலா.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
nallaa sollideenga...!
ReplyDelete
ReplyDeleteகிராமிய மண் வாசனை ! பாடல் வரிகளில் மணக்கிறது!
ஒரு விவசாயியின் உழைப்பு உங்கள் கவிதை வரிகளில் கண் முன்னே விரிந்தது.
ReplyDeleteஅருமையான கவிதைக்கு பாராட்டுக்கள்!
ReplyDeleteவணக்கம்
தலைசாய்க உன்மடி தாவென்று சொல்லும்
கலைபூத்த உன்றன் கவி!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு