இனம் புரியாத வலி
இதயத்தை கிழிந்தெறிந்து
கொண்டிருக்கிறது
என்ன கோபமாக இருக்கும்
என் மேல் அவனுக்கு
நினைத்து நினைத்து
நெஞ்சடைத்ததே மிச்சம்.
பணி அழுத்தமாக இருக்குமோ ?
பாதி வயிறாக இருந்துவிட்டுப் போகிறேன்
பதவியே போனாலும் சரி
கொஞ்சம் பார்த்து சிரியேன்
என்று கூறினால் முறைப்பானோ ?
வலி பொருக்காதவனாயிற்றே
அவனுள் இருக்கும்
என் வலி எப்படித்தான்
சகிக்கிறானோ ?
ஏ மனமே
அமைதியாய் இரேன்
என்றால் கேட்கவா செய்கிறது.
எந்தப் பொருளை
தொட்டாலும் அவனே
முகம் சுளிக்கிறான்.
வாசலுக்கும் இதயத்திற்குமாய்
வம்படித்துக் கொண்டிருக்கிறது
கால்கள்...
கோபத்தில் இரண்டு
அடியாவது அடித்து விடு
பேசாமல் மட்டும் இருந்துவிடாதே.
என்று கூறி முடிக்குமுன்னே
வெம்பி வெடித்து விடுவேனோ ?
ஹா... ஹா...
ReplyDeleteநல்லாவே சிரிச்சிட்டேன்
தலைப்பை வாசித்தவுடன் :)
அதானே...! இப்படியா செய்வது...?
ReplyDeleteசகோதரிக்கு வாழ்த்துக்கள்...
//கோபத்தில் இரண்டு
ReplyDeleteஅடியாவது அடித்து விடு
பேசாமல் மட்டும் இருந்துவிடாதே.
என்று கூறி முடிக்குமுன்னே
வெம்பி வெடித்து விடுவேனோ ?//
உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கும் அழகான கவிதை. பாராட்டுக்கள்.
nalla varikal...!
ReplyDeleteவெம்பி வெடித்து விடுவேனா இல்லை
ReplyDeleteவெம்பி வெடித்து விடுவான் மாலை வீடு வந்ததும்..
உண்மை நேசம் சொல்லும் அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 2
ReplyDelete//வலி பொருக்காதவனாயிற்றே
ReplyDeleteஅவனுள் இருக்கும்
என் வலி எப்படித்தான்
சகிக்கிறானோ ?//
ரசித்தேன்..
ரசித்தேன்....
ReplyDeleteவாசலுக்கும் இதயத்திற்குமாய்
ReplyDeleteவம்படித்துக் கொண்டிருக்கிறது
கால்கள்...//
தவிப்பு அருமை.
கோபத்தில் இரண்டு
ReplyDeleteஅடியாவது அடித்து விடு
பேசாமல் மட்டும் இருந்துவிடாதே.
அர்த்தமுள்ள ஆதங்கம் ...
வாசலுக்கும் இதயத்திற்குமாய்
ReplyDeleteவம்படித்துக் கொண்டிருக்கிறது
கால்கள்...
அருமை தவிப்பு அழகான வரிகள்
தென்றலின் சுகம் கவிதையில் தெரிகிறது!
ReplyDeleteகாரணம் அறியாமல் தவிக்கும் தவிப்பை கவிதை அழகாய் பிரதிபலித்து விட்டது.
ReplyDeleteஎன்ன ஒரு தவிப்பு!
ReplyDeleteகவிதை வரிகள் எங்களையும் தவிக்க வைத்து விட்டனவே!
செல்ல கோபமா நிஜ கோபமா
ReplyDeleteஅடாடா... இந்தக் கவிதையில் ஒளிந்திருக்கும் வலியையும் தவிப்பையும் என்னால் உணர முடிகிறது! எழுத்தில் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் உங்கள் தமிழுக்கு வந்தனங்கள் தென்றல்!
ReplyDeleteவிழுந்தெழுந்தேன் வலிக்கவில்லை
ReplyDeleteவிடைகேட்டாய் பிரிவு வலிக்கிறது
காயப்படுத்தாத காயம் பெருங்காயம்
நேயம் நெருப்பாகி பிரிவது ரணமாகி
நினைவது வடுவாகி நிரந்தரமாய்
ரணப்படுத்தி உயிர்பறிக்கும் காயம்
அதுகொடிது நஞ்சினுமது கொடிது!
பாதி வயிறாக இருந்துவிட்டுப் போகிறேன்
ReplyDeleteபதவியே போனாலும் சரி//ஆதங்கம் புரிகிறது அன்பே தேடுகிறது