போராட்டம் இல்லையெனில்-மன
தேரோட்டம் அழகில்லை
நன்று மட்டும் வாழ்வெனில்
நஞ்சறிய வாய்ப்பில்லை.
இன்பமும் வாழ்வு தான்
துன்பமும் அதன் பகுதிதான்
பிள்ளைத் தொல்லை தாய்க்கழகு
மண்ணின் மாண்பு சேய்க்கழகு
விளைந்த கதிர் தலைக்குனியும்
அதற்கது மேன்மையே.
சூறாவளியாய் சுழன்றாடும்
காட்டாற்று வெள்ள வாழ்வும்
மீனுக்கது விளையாட்டே.
முள்ளின் மீது ரோஜா வாழும்
அதனுள்ளே மணம் வாழும்
முள்ளென்பது வேலியே.
சின்னச்சின்னதாய் கூடுகட்டி
அழகாய் அதில் முட்டையிட்டு
மகவு வளர வாழ்ந்திருக்கும்
குருவியின் வாழ்வும் தியாகமே.
ஒன்றிலொன்றாய் கலப்பதும்
ஒன்றிலொன்று முளைப்பதும்
முளைத்தது வளர்வதும்
வளர்ந்தது வீழ்வதும்
யார் கையில் அறியாமல்
பதுமைகளாய் நாமுமே.
ஆனாலும் விடமாட்டோம்
ஆகாயம் தொடும் முயற்சி
நடக்கட்டும் நாடகம்
நடப்பதும் நன்மைக்கே.
//ஆனாலும் விடமாட்டோம்
ReplyDeleteஆகாயம் தொடும் முயற்சி
நடக்கட்டும் நாடகம்
நடப்பதும் நன்மைக்கே.//
வரிகள் அருமை !
தொடர வாழ்த்துகள்...
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteaahaaa piramaatham...!
ReplyDeletevaazhthukkal sako....!
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteபாலையும் நீரையும் பிரித்துண்ணும் அன்னம்
ReplyDeleteபாவையர் நாமும் பகுத்தறிவுகொண்டால்
மேதையாய் இவ்வுலகில் மேன்மையாய் வாழ்ந்திடலாம்...
//அருமையாகச் சொன்னீர்
ஆகாயம் தொடும் முயற்சி//
வாழ்த்துக்கள் சகோதரி!
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Delete// ஆனாலும் விடமாட்டோம்
ReplyDeleteஆகாயம் தொடும் முயற்சி //
சகோதரிக்கு “ உலக மகளிர் தினம்” ( INTERNATIONAL WOMEN’S DAY ) – நல் வாழ்த்துக்கள்!
தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteஆனாலும் விடமாட்டோம்
ReplyDeleteஆகாயம் தொடும் முயற்சி///
அறிந்தே செய்யும் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteமனதுக்கு வலுவூட்டும் இனிய கவிதைக்கு வாழ்த்துக்கள் தோழி !
ReplyDeleteநன்றி தோழி.
Deleteதன்னம்பிக்கை விரைவில் நடக்கட்டும்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றிங்க.
Deleteசிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteஒன்றிலொன்றாய் கலப்பதும்
ReplyDeleteஒன்றிலொன்று முளைப்பதும்
முளைத்தது வளர்வதும்
வளர்ந்தது வீழ்வதும்
யார் கையில் அறியாமல்
பதுமைகளாய் நாமுமே.//
ஆனாலும் விடமாட்டோம்
ஆகாயம் தொடும் முயற்சி /
அருமையான வரிகள்.
கவிதை அருமை.
வாழ்த்துக்கள்.
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteஉலக மகளிர் தினம்” ( INTERNATIONAL WOMEN’S DAY - முன்னிட்டு மூத்த பதிவர் GMB அவர்கள் தமது வலைப் பதிவில் உங்களை பாராட்டி எழுதியுள்ளார்! சகோதரிக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeletehttp://gmbat1649.blogspot.in/2013/03/blog-post_8.html
தகவலுக்கு நன்றிங்க.
Deleteமுயற்சி வெற்றி அடையட்டும் .
ReplyDeleteமகளிர் தின வாழ்த்துக்கள்.
நன்றிங்க.
Delete//ஆனாலும் விடமாட்டோம்
ReplyDeleteஆகாயம் தொடும் முயற்சி//
நன்று.காற்றிலேறி விண்ணையும் சாடுங்கள் சசி!
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.
Deleteஅருமை.. அருமை...
ReplyDeleteவரிகளில் தன்னம்பிக்கை.
வாழ்த்துக்கள் சசிகலா.
நன்றி சகோ.
Deleteமகளிர் தின வாழ்த்துக்கள்.
ReplyDelete//மண்ணின் மாண்பு சேய்க்கழகு
புரியவில்லையே?
நீதி . நேர்மை. இயற்கை வளம் காத்தல் இதுவே மண்ணின் மாண்பு அதைக் காப்பதே வளரும் சேய்க்கழகு இதுவே என் கருத்து.
Deleteinteresting. நீதி நேர்மைக்கும் மண்ணுக்கும் என்ன தொடர்பு? ஒரு வேளை literal பொருள் எடுத்துக் கொள்கிறேனோ?
Deleteதங்கள் கருத்தை தெரிவித்தாலும் வணக்கத்துடன் கற்றுக்கொள்கிறேன்.
Deleteஅசத்தலா இருக்கு..உற்சாகம் தரும் வரிகள்
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Delete//ஆனாலும் விடமாட்டோம்
ReplyDeleteஆகாயம் தொடும் முயற்சி//
தன்னம்பிக்கை வரிகள்....
வாழ்க வளமுடன்.
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteநீங்கள் கூறும் ஆகாயம் தொடும் முயற்சி எல்லாப் பெண்களிடமும் பரவட்டும்.
ReplyDeleteமகளிர் தின வாழ்த்துகள்!